எகிப்தில் அல் ஜெஸீரா ஊடகவியலாளரின் தடுப்புக் காவல் மேலும் 45 நாட்களுக்கு நீடிப்பு

அல் ஜெஸீரா ஊடகவியலாளரான மஹ்மூட் ஹுஸைன் விசாரணைகள் எதுவுமின்றி 713 நாட்களை சிறையில் கழித்துள்ள நிலையில் அவரது தடுப்புக் காவல் எகிப்திய அதிகாரிகளால் மேலும் 45 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 19 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் பின்னரே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் அவரது சட்டத்தரணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையே அறிவிக்கப்பட்டது. கட்டாரைப் பிறப்பிடமாகக் கொண்ட செய்தித் தயாரிப்பாளரான மஹ்மூட் ஹுஸைன் பொய்யான செய்திகளை பரப்புவதாகவும், அரசாங்க நிறுவனங்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக வெளிநாட்டு…

நீதிமன்ற தடை உத்தரவுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும்

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட்ட பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது…

‘ஒபெக்’ கிலிருந்து விலகும் கத்தாரின் திடீர் அறிவிப்பு

பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஒபெக்’ அமைப்பிலிருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளமையானது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளிடையே நிலவும் முறுகல் நிலையை இது மேலும் மோசமாக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டி அந்த நாட்டுடன் சவூதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும்,  பொருளாதார பாதிப்பையும்…

ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகல்

பெற்றோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் அமைப்பிலிருந்து கட்டார் விலகிக் கொள்ளவுள்ளதாக கட்டாரின் சக்திவள அமைச்சர் சாத் ஷெரிதா அல்-காபி திங்கட்கிழமையன்று அறிவித்தார். உலக எண்ணெய் உற்பத்தியில் நாற்பது வீதத்தினை கட்டார் பெற்றோலியம் என்ற நாட்டின் எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தியதையடுத்தே எண்ணெய் உற்பத்தி செய்யும் 15 நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தோஹாவில் ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய அல்-காபி கட்டாரின் விலகிக் கொள்ளும் தீர்மானம் எதிர்வரும்…