தோல்வியை ஏற்றுக்கொண்டு பதவி விலகாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்: ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை

''சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளது. இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, இவர்கள் கெளரவமாக பதவி விலகாவிட்டால் இதைவிட வீரியமான சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க நேரிடும்'' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நடத்திவரும் சத்தியாக்கிரக போராட்டம் நேற்று (03) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

ஆப்கானில் வான்வழித் தாக்குதல் தலிபான்களின் முக்கிய தளபதி பலி

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில்  தலிபான்களின் முக்கியத் தளபதி பலியானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான்கள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் ஆப்கான் அரசு மற்றும் அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை அன்று வான்வழி தாக்குதல் நடத்தியது.இந்த வான்வழித் தாக்குதலில் 29 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்துல் மனன் என்ற தலிபான் தளபதி கொல்லப்பட்டார்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. அப்துலின் மரணத்தை தலிபான்களும்,…

ஹஜ் முறைப்பாட்டு விசாரணை அறிக்கை டிசம்பர் 20 இல் 

இவ்­வ­ருடம் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சிலர் ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சமர்ப்­பித்த முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்த ஹஜ் முறைப்­பாட்டு விசா­ர­ணைக்கு குழு தனது அறிக்­கையை எதிர்­வரும் 20 ஆம் திகதி அரச ஹஜ் குழு­விடம் கைய­ளிக்­க­வுள்­ளது. 11 ஹஜ் முக­வர்­க­ளுக்கு எதி­ராக 13 ஹஜ் முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற­றி­ருந்­த­தா­கவும் குறிப்­பிட்ட ஹஜ் முக­வர்கள் அழைக்­கப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் ஹஜ் முறைப்­பாட்டு விசா­ரணைக் குழுவின் செய­லாளர் ரபீக் இஸ்­மாயில் தெரி­வித்தார்.…

நௌசர் பௌசி, கீர்த்தி காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தனர்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரு உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான நௌசர் பௌசி மற்றும் கீர்த்தி காரியவசம் ஆகியோர்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி  ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ளனர். மேலும் இன்று நடைப்பெற்ற வரவுசெலவு திட்டத்தின் போது மேற்படி இரு உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனங்களில் அமர்ந்தததும் குறிப்பிடத்தக்கது.