விசாரணை செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றில் வாதிட்டார். அதனால் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணை செய்யாது தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றம்…