விசாரணை செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி  2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றில் வாதிட்டார். அதனால் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணை செய்யாது தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம்…

விவசாயிகளின் எதிரி எலிக்காய்ச்சல்

சுற்றுப்புறச் சூழலிலுள்ள விலங்குகள் மற்றும் கொசுத் தாக்கத்தினால் மனிதர்களுக்கு பலவேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எலிக்காய்ச்சலும் முக்கிய இடம் வகிக்கிறது. எலிக்காய்ச்சலானது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவக்கூடியது. அது விவசாயிகளையே அதிகளவில் பாதிப்பதனால் விவசாயிகளின் எதிரி எனவும் கூறப்படுகிறது. எலிக்காய்ச்சலினால் குருநாகல் மாவட்டத்தில் 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள 187…

ஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: என்னை தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்திகள் அனைத்தும் பொய்யானவை

ஜனாதிபதி கொலைச்சதி தொடர்பில் என்னை தொடர்புபடுத்தி பரப்பப்படும் வதந்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என குறிப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச அதிகாரியாக செயற்படும் எனக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எனது கடமைகளுக்கு எதுவித இடையூறும் ஏற்படாதவிடத்து அவற்றை நான் கவனத்தில் கொள்வதில்லை எனவும் தெரிவித்தார். ஜனாதிபதி கொலைத் திட்டம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலருக்கு தொடர் இருப்பதாக ஊடக சந்திப்பொன்றின் போது குற்றம்சாட்டியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்கவின் கருத்தினை…

ஜனாதிபதி குற்றவாளி

ஜனாதிபதி அரசியலமைப்பினை மீறி செயற்பட்டுவிட்டார். அவர் குற்றவாளி என்பது இப்போதே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. நீதிமன்றம்  ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பொன்றினை வழங்கும்பட்சத்தில் அவர் குற்றவாளி என்பது சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுவிடும். ஆகவே  ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல, அவரது குடியுரிமையையே பறிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நிறைவேற்று அதிகார நாற்காலியில் மைத்திரி மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் நாட்டினை நாசமாக்குவார்கள் எனவும் அவர்…