பாராளுமன்றை கலைப்புக்கு எதிரான இடைக்காலத் தடை நாளை வரை நீடிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த நவம்பர் 9 ஆம் திகதி கலைத்த 2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நாளை சனிக்கிழமை வரை நீடிக்கப்ப்ட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 10 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது நேற்று 3ஆவது நாளாகவும் விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே, நேற்றைய விசாரணைகளின் நிறைவில் இதனை பிரதம நீதியரசர் நலின் பெரேரா அறிவித்தார். ஏற்கனவே உயர் நீதிமன்றினால் குறித்த மனுக்களை விசாரணைச் எய்ய நிர்ணயிக்கப்பட்ட மூன்று…