தீர்ப்பு பாதகமாக அமைந்தால் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன?

அடுத்தகட்ட  அரசியல் நகர்வுகள் குறித்தும் நீதிமன்ற தீர்மானம் தமக்குப் பாதகமாக அமைந்தால் தமது அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து மஹிந்த ராஜபக் ஷ மற்றும்  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்துள்ளனர். இன்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக் ஷவுடன் முக்கிய சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின் போது தாம்…

பாராளுமன்றுக்கு கற்காதவர்களை அனுப்பியதன் விளைவை அனுபவிக்கிறோம்

சமூக விழுமியங்களை சரியாகக் கற்றுக் கொள்ளதாவர்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை இன்று நாம் அனுபவிக்கிறோம். இதனால், நாட்டில் ஒரு அரசு இல்லாத நிலையும், மரியாதைக்குரிய பாராளுமன்றில் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளும் நிலையும்  ஏற்பட்டுள்ளதாக கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம்.யாகூப் தெரிவித்தார். கண்டி முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வருடந்தோறும் வசதி குறைந்த மாணவர்களுக்கு கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களை வழங்கி வருகிறது. அவ்வாறான ஒரு நிகழ்வு வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள பின்தங்கிய…

போதையில் வாகனம் செலுத்தி விபத்தில் மூன்று பேரை பலியெடுத்த நபர் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய சந்தேக நபரொருவரால் ஏற்பட்ட விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் சந்தேக நபரான வாகன சாரதியும் காயமடைந்துள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் களுபோவிலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.10 மணியளவில் கல்கிஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி - கொழும்பு பிரதான வீதியில் கல்கிஸை நீதிமன்றத்திற்கு…

தீர்ப்புக்கு அமைய அரசியல் தீர்மானம்

அரசியலில் இன்று இடம்பெறும் போராட்டம்  எனக்கும் ரணிலுக்கும் இடையிலான தனிப்பட்ட போராட்டமல்ல. தேசியத்துக்கும் சர்வதேசத்திற்கும் இடையிலான போராட்டமே இடம்பெற்று வருகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் நெருக்கடியை தீர்க்க அனைவரும் நீதிமன்றத் தீர்ப்பொன்றை எதிர்பார்த்துள்ளோம். இதில் நீதிமன்ற தீர்மானம் என்னவாக அமைகின்றதோ  அதனை மதித்து அடுத்த கட்ட அரசியல் தீர்மானம் எடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டார். நேற்று காலை பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும்…