ஜனாதிபதியின் மன நிலையை சோதனைக்கு உட்படுத்தவும்

மன­நல நோய்கள் தொடர்­பி­லான கட்­டளைச் சட்­டத்தின்  2 ஆம் அத்­தி­யா­யத்­துக்­க­மைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக கொழும்பு மாவட்ட நீதி­மன்றில் சட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிக்­கு­மாறு கோட்டை பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கும், பொலிஸ் மா அதி­ப­ருக்கும் மென்­டாமுஸ் மேல் மன்ற பேராணை ஒன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி  பெண் ஒருவர் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் மனு­வொன்­றினை தாக்கல் செய்­துள்ளார்.  மஞ்­ஞ­நா­யக்க ஜய­வர்­தன முத­லிகே தக்­சிலா லக்­மாலி என்ற பெண்ணே சட்­டத்­த­ரணி சிசிர சிறி­வர்­தன ஊடாக இந்த மேல் மன்ற…

நாட்டை ஆளும் தலைவர்களும் சீரழியும் நாட்டின் பொருளாதாரமும்

“இலங்கை: ஆசியா இழந்து விட்ட ஆச்சரியம்” என்ற நூலை எழுதி பேராசிரியர் மில்டன் ராஜரட்ண,  நாட்டில் போதுமான பொருளியல் வல்லுநர்கள் இல்லாத வெற்றிடத்தை அறிந்து தனது மகளிடம்  உங்களுக்கும் நாட்டிற்கும் மிகப் பிரயோசனமளிக்கும் பொருளியற்றுறையில் உயர்கல்வியை மேற் கொள்ளுமாறு ஆலோசனை கூறியபோது, பொருளியல் துறையில் உயர்கல்வியை மேற்கொள்வதில்  பிரயோசனமில்லை. இந்நாட்டு ஆட்சியாளர்களில் எவரும் பொருளியல் வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்பதில்லையே என்று மகள்  பதிலளித்ததாக ஒரு கலந்துரையாடலின்போது அவர் தெரிவித்துள்ளார்

பன்மைத்துவத்தின் முன்மாதிரி பேராதனைப் பல்கலைக்கழகம்

“கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகம் 75ஆவது பவள விழாவைக் கொண்டாடியது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஐவர் ஜெனிங்ஸ் இப்பல்கலைக்கழகம் கட்ட நடவடிக்கை எடுக்கும்போது விஷேடமாக எமது நாட்டின் பன்மைத்துவம் பற்றி மக்களின் உணர்வுகள், தேவை பற்றி நன்றாகப் புரிந்துகொண்டு அடித்தளம் இட்டிருக்கிறார் என்பது இன்று நன்கு புரிகிறது. உண்மையில் எந்தவொரு சமூகத்திலும் அல்லது நிறுவனத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நபரொருவர் புத்தி சாதுர்யமான தூரநோக்குடையவராக இருப்பது முக்கியமான ஒன்றாகும். அவர் வெளிநாட்டவராக இருப்பினும் இந்த நாட்டினதும் மக்களினதும்…

ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் அரச செயற்பாடுகள் முடங்கியுள்ளன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தவறான முடிவுகளால் நாட்டின் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று முன்தினம் கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இன்று நாம் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்க தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. இது இந்த நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்க…