சூடான் ஹெலிகொப்டர் விபத்தில் 5 அதிகாரிகள் பலி
சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் மீது ஹெலிகொப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சூடான் நாட்டின் கிழக்கு பகுதி வழியாக நேற்று அரசு அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் அல் கடாரிப் மாநிலத்தில் உள்ள வயல்வெளியின் மீது பறந்தபோது அங்கிருந்த ஒரு தொலைத் தொடர்பு கோபுரம் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் அந்த ஹெலிகொப்டர் தீப் பிடித்து எரிந்தது. எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் நடந்த இந்த விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர்…