”என்னால் மூச்சு விடமுடியவில்லை” என உயிரிழக்க முன் கசோக்ஜி இறுதியாக கூறினார்

பத்திரிகையாளர் ஜமால் கசோக்ஜி துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தினுள் வைத்து கொல்லப்பட்டமை தொடர்பில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சி.என்.என். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கசோக்ஜி இறுதியாக, ''என்னால் மூச்சு விடமுடியவில்லை'' என கூறினார் என்று ஒலிப்பதிவில் உள்ள தகவலை அடிப்படையாக கொண்டு தெரிவித்துள்ளது. கசோக்ஜி கொலை செய்வது முன்பே திட்டமிடப்பட்டது என்பதும் மற்றும் பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வழியே கொலை செய்வதற்கான விபரங்கள் வழங்கப்பட்டன என்பதும் ஒலிப்பதிவு வழியே தெளிவுடன் தெரிய வந்துள்ளது. இந்த அழைப்புகள்…

லிபியாவில் பணயக் கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐ.எஸ். ஆயுததாரிகள்

லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐ.எஸ். ஆயுததாரிகள் படுகொலை செய்துள்ளனர். லிபியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் ஜாப்ரா மாவட்டம் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த பகுதியை கடந்த ஆண்டு இராணுவம் கைப்பற்றியது. ஐஎஸ் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டனர். அதன்பின்னர் அந்த பகுதியில் அவ்வப்போது ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜாப்ரா மாவட்டத்தின் புகா பகுதியில் ஐஎஸ் ஆயுததாரிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர்…

சிறுபான்மை கட்சிகளுடனான பேச்சு அடுத்தவாரம் ஆரம்பம்

சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்தில் ஆரம்பிப்பதற்கு தமது பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவுரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்; எதிர்வரும் காலங்களில்,…

277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் விவகாரம்: சீஷெல்ஸ் – பங்களாதேஷ் நாடுகளின் கடத்தல்காரர்கள் இருவர் குறித்து தகவல்

டிங்கி படகொன்றில் நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டுக்கொண்டிருந்த போது கைப்பற்றப்பட்ட  277 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் சர்வதேச கடற்பரப்பில் வைத்து வர்த்தக கப்பல் ஒன்றிலிருந்து ட்ரோலர் படகுக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்கள் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும், அந்த சந்தேக நபருடன் சீஷெல்ஸ்  மற்றும் பங்களாதேஷ் கடத்தற்காரர்கள் இருவர் தொலைபேசி ஊடாக…