சிறிசேன என்ற நோய்க்குறி

அக்டோபர் 26 க்கு பிறகு இலங்கையில் நடந்துகொண்டிருப்பவை நாட்டின் ஜனநாயகத்தில் முன்னொருபோதுமே நாம் காணாதவை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று இல்லாமல் இலங்கையர்கள்  முன்னர் ஒருபோதும் இருநந்ததில்லை.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு தற்போதுள்ளவரைப் போன்று  தனது முரண் இயல்புகளையே நிலைபேறானவையாகக்கொண்ட ஒரு ஜனாதிபதியும் முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மையினக் கட்சிகளும் ஜே.வி.பி.போன்ற…

தலைவணங்காத கத்தார்’ தடைகளுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்கும் நாடு: எப்படி சாத்தியமானது?

சக்திவாய்ந்த அண்டை நாடுகளின் பொருளாதார முற்றுகை மற்றும் அவற்றின் வான்வெளியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு பிறகும், கத்தார் பலவீனமடையாதது எப்படி? சவூதி அரேபியாவின் எந்தவொரு தந்திரமும் கத்தாரை தலை குனிய வைக்காதது ஏன்? தடை விதிக்கப்பட்ட பிறகு, கத்தார் வளர்ச்சியடைந்ததோடு, மனித உரிமைக மீறல் தொடர்பாக தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் நிவர்த்தி செய்திருக்கின்றது. 25 லட்சம் மக்கள் வாழும் கத்தார், மிகச் சிறிய நாடாக இருந்தாலும், எண்ணெய் வளம் கொண்ட நாடு. கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் சர்வதேச…

நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நெருக்கடிக்கு தீர்வாகது

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல்  நெருக்கடிக்குத் தீர்வாக அமையாது. மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க  வேண்டுமாயின் பொதுத்தேர்தலை நடத்தி பெரும்பாலான  கருத்திற்கு  இடமளிக்க   வேண்டுமெனத் தெரிவித்த  பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர்  பேராசிரியர் ஜி. எல்.பீரிஸ், மேன்முறையீட்டு  நீதிமன்றம்  வழங்கிய தற்காலிக தடையுத்தரவு தொடர்பில்  மக்கள் மத்தியில்  தவறான  நிலைப்பாடே   காணப்படுகின்றது. அரசாங்கத்தின்   நிர்வாகத்திற்கு  மாத்திரமே  தற்காலிக தடையேற்பட்டுள்ளது   என்பதை  தெளிவாக அனைவரும்  விளங்கிக்கொள்ள வேண்டும்…

மது போதையில் வாகனம் செலுத்துவோர் தப்பிக்கலாமா?

மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையே நேற்று முன்தினம் கொழும்பு- கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்துகள் உணர்த்தி நிற்கின்றன. மது போதையில் கார் ஒன்றைச் செலுத்தி வந்த நபர் ஒருவர், வீதியில் ஓரமாக நின்றிருந்த இருவரை மோதித் தள்ளிவிட்டுச் சென்றது மாத்திரமன்றி, சிறிது தூரம் சென்று எதிரே வந்த வேன் ஒன்றையும் மோதியுள்ளார்.  இச் சம்பவத்தில் வீதியில் நின்றிருந்த இருவரும் வேனில் வந்த மற்றொருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்துள்ள 8 பேரில் பலர் அதிதீவிர சிகிச்சைப்…