கஷோக்ஜி கொலையாளிகளை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவூதி நிராகரித்தது
சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையுடன் தொடர்புடையவர்களை ஒப்படைக்குமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை சவூதி அரேபியா நிராகரித்துள்ளது.
தமது நாட்டு பிரஜைகளை எந்த காரணம் கொண்டும் வேறு நாட்டிடம் ஒப்படைக்கமாட்டோம் என சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அடெல் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பாக சவூதியின் முன்னாள் புலனாய்வு துறை பிரதானி அஹ்மட் அல் அஸிரி மற்றும் அரச குடும்பத்தின் முன்னாள் ஆலோசகரான சவுட் அல் குவட்டானி உள்ளடங்களாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை…