ஐ.எஸ். உடனான போரில் வெற்றி ஈராக்கில் மக்கள் கொண்டாட்டம்

ஐ.எஸ். தீவிரவாதிகளை வெற்றி கொண்டு  ஒரு வருடம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஈராக் அரசு அதனை கொண்டாடியுள்ளது. பல ஆண்டுகளாக அச்சுறுத்தலாக இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த போரை ஈராக்  அரசு கடந்த டிசம்பர் மாதம் வெற்றி கொண்டது.  இதனைக் கொண்டாடும் விதமாக திங்கட்கிழமை தேசிய விடுமுறை அறிவித்து ஈராக் கொண்டாத்தில் ஈடுபட்டது. மேலும் அரசு சார்பில் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.  அந்நாட்டின் தேசியக் கொடி மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. மேலும், இந்தக் கொண்டாட்ட தினத்தில், அரச தூதரக அலுவலங்கள் போன்றவற்றைக் காண  பொதுமக்கள்…

ஊடகவியலாளர் லக்மால் டி சில்வா கொலை: ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட் கைதானார்

சுதந்திர ஊடகவியலாளர் லக்மால் டி சில்வாவின் கொலை தொடர்பில் இரு இராணுவத்தினரை சி.ஐ.டி. சந்தேக நபர்களாக அடையாளம் கண்டுள்ள நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக அவர்களில் ஒருவரை சி.ஐ.டி. நேற்றுக் கைது செய்தது.  இராணுவத்தின் கெமுனு படைப் பிரிவைச் சேர்ந்த, அப்போது சாதாரண இராணுவ வீரரும் யுத்தத்தில் அங்கவீனமடையும்போது சார்ஜன்ட்தர நிலையிலும் இருந்த சிந்தக வர்ணகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று  முன்தினம் மாலை சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலைகள் குறித்த விசாரணை அறைக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவரை சட்டமா அதிபரின்…

ஹஜ் ஏற்பாடுகளில் தடைகள் ஏதுமில்லை பணிப்பாளர் மலிக் தெரிவிப்பு

உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள இடைக்­காலத் தடை­யுத்­த­ர­வி­னை­ய­டுத்து முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்சு செயற்­ப­டாத நிலையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் ஹஜ் ஏற்­பா­டு­களை வழ­மை­போன்று தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக் தெரி­வித்தார். 2019ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், “முஸ்லிம் சமய…

பாராளுமன்ற களேபரம் விசாரணைக்குழு இன்று கூடும்

கடந்த நவம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற களேபரம் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற குழு இன்று முதன் முறை­யாகக் கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற கல­வ­ரங்கள் தொடர்­பாக விசா­ரணை நடாத்தும் பொலிஸ் குழுவின் தலை­வரும் இன்­றைய பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். பொலிஸ் விசா­ர­ணை­களின் விப­ரங்கள் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்­கா­கவே பொலிஸ் குழுவின் தலைவர் அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக, பாரா­ளு­மன்ற களேபவரம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு…