பங்களாதேஷ் தேர்தல் கலவரத்தில் ஒருவர் பலி; 10 பேர் காயம்
பங்களாதேஷ் பொதுத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299…