முத்தலாக் தடை மசோதா இந்திய மக்களவையில் நிறைவேற்றம்
முத்தலாக் முறையில் விவாகரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா கடந்த வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க, இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர்.
காங்கிரஸ், அ.தி.மு.க., சமாஜ்வாடி போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்று இந்தக் கட்சிகள் கோரிக்கை…