அமெரிக்காவும் இஸ்ரேலும் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறின

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பிலிருந்து புத்தாண்டு ஆரம்பித்த நள்ளிரவில் உத்தியோகபூர்வமாக வெளியேறின. வெளியேறவுள்ளதாக கடந்த வருடம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அச்செயற்பாடு இடம்பெற்றுள்ளது. சமாதானத்தைப் பேணிக் காக்கும் நோக்கில் இரண்டாம் உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து அமெரிக்கா இணைந்து ஆரம்பித்த யுனெஸ்கோ அமைப்பிற்கு இந்த வெளியேற்றம் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றது. 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ட்ரம்ப் நிருவாகம் தனது வெளியேற்றம் தொடர்பில்…

மாவனெல்லை விவகாரம்: 7 சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் நீடிப்பு

மாவனெல்லை பகுதியில்  புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் கைதான 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும்  ஜனவரி 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மாவனெல்லை நீதிவான் உப்புல் ராஜகருணா நேற்று உத்தரவிட்டார். கைதாகியுள்ள ஏழு சந்தேக நபர்களும் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந் நிலையில் மாவனெல்லை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்த 7 பேரும் கண்டி - வெலம்பொட பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சிலை உடைப்புக்கள் மற்றும் குருணாகல் - பொத்துஹரையில் இடம்பெற்ற சிலை…

நேரில் வரவழைத்து பாகிஸ்தான் கண்டனம்

இந்திய ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தியதாகவும், இத் தாக்குதலில் பாகிஸ்தான் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளதாகவும் கூறி பாகிஸ்தானுக்கான இந்திய தற்காலிக துணை தூதருக்கு அழைப்பாணையை பாகிஸ்தான் அனுப்பி வரை நேரில் வரவழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்ததாக  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஷக்கோட் செக்டாரில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் அதில் ஆசியா பிபி என்ற பெண் உயிரிழந்ததாகவும், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் …

இஸ்லாத்துக்கும் ஐ.எஸ். அமைப்புக்கும் சம்பந்தம் கிடையாது

இஸ்­லாத்­துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் எந்­த­வித சம்­பந்­தமும் கிடை­யா­தென முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கும், இன்­றைய நாட்டின் தலை­வர்­க­ளுக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை தெளி­வாக எடுத்­துக்­கூ­றி­யுள்­ள­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க், எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி (பின்­னூரி) தெரி­வித்தார். புத்­தளம் மணல்­குன்று மன்­ப­வுஸ்­ஸா­லிஹாத் பெண்கள் அர­புக்­கல்­லூ­ரியின் ஐந்­தா­வது வருட பட்­ட­ம­ளிப்பு விழா கடந்த சனிக்­கி­ழமை அர­புக்­கல்­லூரி வளா­கத்தில் இடம்­பெற்­ற­போது அங்கு விசேட உரை நிகழ்த்­தும்­போதே…