நாட்டை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் அழைப்பு
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுவதற்கு முஸ்லிம் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார். அத்தோடு, ஒன்றிணைந்து செயற்படுவதன்மூலம் அரசாங்கத்தின் திட்டங்களை விரைவுபடுத்தமுடியும். யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் புறக்கணித்து செயற்படுவதால் நாடு மீண்டும் பெரும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுவிடும்.