காஸாவின் பெரும்பகுதியை விழுங்கும் இஸ்ரேல் அன்றிருந்த காஸா இன்றில்லை

காஸாவின் தெற்கு நக­ர­மான ரபாவை துண்­டித்து, அப் பிர­தே­சத்தை பல பகு­தி­க­ளாகப் பிரிக்கும் மற்­று­மொரு இரா­ணுவ நட­வ­டிக்­கை­யினை பூர்த்தி செய்­துள்­ள­தாக இஸ்ரேல் கடந்த வார இறு­தியில் அறி­வித்­தது. காஸா பகு­தியில் இஸ்ரேல் தொடர்ந்து தனது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்தி வரு­கி­றது. இதன் கார­ண­மாக, குண்­டு­வீச்­சுகள் தொடரும் அதே வேளை, காசாவின் 2.3 மில்­லியன் மக்­களில் அதி­க­மானோர் எப்­போதும் மிகவும் சன­நெ­ரி­ச­லுக்குள் வாழ வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முஸ்லிம் இளைஞரை கைது செய்தோம்

நாட்டின் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் பல நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளோம். அந்­த­வ­கை­யி­லேயே முஸ்லிம் இளைஞர் ஒரு­வரின் கைது இடம்­பெற்­றது. தேசிய மக்கள் சக்தி முஸ்­லிம்­களை புறக்­க­ணிக்­க­வில்லை. நாட்டில் இன மத மொழி பேத­மின்றி அனைத்து மக்­க­ளையும் சம­மாக நடத்தும் அர­சாங்­க­மொன்றை நாம் தோற்­று­வித்­துள்ளோம். ஆனால் தோல்வி அடைந்த அர­சியல் கட்­சிகள் மீண்டும் மக்­களை பிள­வு­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன என்று ஜனா­தி­பதி அநு­ர ­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார்.

அன்று பலஸ்தீனுக்காக பேசிய ஜனாதிபதி அநுர இன்று முஸ்லிம் இளைஞரை கைது செய்துள்ளார்

பலஸ்­தீன மக்கள் சார்­பாக நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குரல் எழுப்­பிய சம­யத்தில் தற்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திஸா­நா­யக்க, அவ­ரை தடுப்புக் காவலில் வைக்கும் பத்­தி­ரத்தில் கையொப்­ப­மிடும் அள­வுக்கு கீழ்த்­த­ர­மாக நடந்­துள்ளார் என எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார்.

10 காதி பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரல்

நீதிச்­சேவை ஆணைக்­குழு வெற்­றி­ட­மா­க­வுள்ள 10 காதி பிர­தேச பிரி­வு­க­ளுக்குத் தகு­தி­யுள்ள புதிய காதி நீத­வான்­களை நிய­மிப்­ப­தற்­கான விண்­ணப்­பங்­களைக் கோரி­யுள்­ளது. இதன்­படி, பதுளை, மாத்­தளை, உடத்தலவின்ன (உட, மெத, பாத்த தும்­பறை),பேரு­வளை, மாவ­னல்ல, யாழ்ப்­பாணம், கொழும்பு தெற்கு, புத்­தளம், காத்­தான்­குடி, சம்­மாந்­துறை ஆகிய காதி­ நீ­தி­வான்கள் பிரி­வு­க­ளுக்கு விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது.