எமது சமூகம் இன்னும் பாடம் கற்கவில்லை

2013 ஆம் ஆண்டு, முன்னைய அரசாங்கத்தின் ஆதரவுடன் நாட்டில் இனவாதிகள் தாண்டவமாடிய காலம் அது. அலுவலக விடுமுறை தினமொன்றில் நண்பர் ஒருவரின் நேகமயிலுள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தோம். கலாவெவ பகுதியை கடந்து செல்லும்போது, “இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அவுக்கன புத்தர் சிலை உள்ள இடம் அருகில் இருக்கிறது. போய் பார்த்துவிட்டுச் செல்லலாமே” என்றார் நண்பர். ஆவலுடன் “சரி” என்று கூறி இருவருமாக அங்கு சென்றோம். பிரதான நுழைவாயிலின் ஊடாக உட்செல்ல முற்டபட்டபோது அங்கு கடமையாற்றும் அதிகாரியொருவர் “ஒயாலா முஸ்லிம்த” என எம்மை நோக்கி வினவினார்?…

வெள்ளவத்தையில் பெண்களுக்கான முஸ்லிம் தேசிய பாடசாலை உதயம் இவ்வருடத்தில் ஆட்சேர்ப்புக்கும் நடவடிக்கை

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் முயற்சியால் வெள்ளவத்தையில் முஸ்லிம் மாணவிகளுக்கான தேசிய பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை மெரைன் டிரைவ் பிரதேசத்தில் நிறுவப்படவிருக்கும் குறித்த பெண்களுக்கான மும்மொழி தேசிய பாடசாலைக்கு ஆயிஷா கல்லுரி என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரத்தில் நேற்றுமுன்தினம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஒப்பமிட்டார். குறித்த பாடசாலையில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அப்பாடசாலையில் பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இசுருபாயவிலுள்ள…

ஹஜ் கோட்டா அதிகரிப்பை சிரமப்பட்டே பெற்றோம்

ஐந்தாறு தடவைகள் சவூதி அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னரே இலங்கைக்கு இவ்வருடத்திற்கான ஹஜ் கோட்டா அதிகரிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநராக பதவியிலுள்ள ஹிஸ்புல்லா 10 நாட்கள் திருட்டு அரசாங்கத்தின் அமைச்சராக இருந்து இதனை செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து ஏ.எச்.எம்.பௌஸி எம்.பி. மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் ஹஜ் விடயத்தை நேர்த்தியாக முன்னெடுத்து செல்கின்றோம். நான்…

ஒருவிடயத்தை பூரணமாக விளங்கியபின் அடுத்தகட்ட விடயத்துக்கு செல்வேன்

உயர்தர பெறுபேறுகளின்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் தேசியமட்டத்தில் மூன்றாமிடம் பெற்ற மாத்தளையைச் சேர்ந்த ஹக்கீம் கரீம். அறி­வார்ந்த சூழலில் வளர்ந்த பிள்­ளைதான் ஹக்கீம். பொறி­யி­ய­லா­ள­ரான மொஹமத் ரிஸ்மி மற்றும் வைத்­தி­ய­ரான நிஹாரா ரிஸ்­மியின் மூத்த புதல்­வ­ராவார். இவ­ருக்கு இளைய தம்­பி­யொ­ரு­வரும் தங்­கை­யொ­ரு­வரும் இருக்­கின்­றனர். முதலாம் தரம் முதல் மாத்­தளை ஸாஹிரா கல்­லூ­ரி­யி­லேயே படித்­தி­ருக்­கிறார். தரம் 5 வரை தமிழ் மொழி­யிலும் உயர்­தரம் வரை ஆங்­கில மொழி­யிலும் கற்றல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருக்­கிறார்.…