அறுவாக்காடு குப்பை திட்ட விவகாரம்: பிரதமருடன் பேச்சு நடத்த திட்டம்

கொழும்பு மாவட்ட குப்பைப் பிரச்சினைக்கு தீர்வாக முன்னெடுக்கப்படும் புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்திற்கு எதிர்ப்பு வலுவடைந்துள்ள நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றக் குழு அறையில் புத்­தளம் மாவட்ட சிவில் பிர­தி­நி­திகள், சர்வ மத தலை­வர்கள், புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டனும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளு­டனும் இடம்­பெற்ற சந்­திப்­பி­லேயே இவ்­வாறு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.…

பாதாள குழுவுடன் தொடர்புபடுத்திய விவகாரம்: குற்றப்புலனாய்வு பிரிவில் முஜிபுர் முறைப்பாடளிப்பு

பாதாள உல­கத்­த­லைவர் மாகந்­துர மதூஷ் மற்றும் கஞ்­சி­பான இம்ரான் போன்­றோ­ரு­டன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு வைத்­தி­ருப்­ப­தாகக் குறிப்­பிட்டு முகப்­புத்­த­கத்தில் பதி­வேற்­றிய நபரை கைது செய்­யு­மாறு வலி­யு­றுத்தி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவில் முறைப்­பா­டொன்றை கைய­ளித்­துள்ளார். இதே­வேளை, குறித்த பதிவின் மூலம் தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இது தொடர்பில் துரி­த­மாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு ­மெனக் கோரி சபா­நா­யகர்…

தீவிரவாத, மதநிந்தனை செயற்பாடுகளுக்கு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்

தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மதநிந்தனை செயற்பாடுகளில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கைகளை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கி, நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அரசு உறுதிசெய்ய வேண்டுமென முஸ்லிம் அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவராயினும் அவரது நடத்தைகளில் அவ்வாறான அறிகுறிகள் தென்படுமானால் உண்மைகளை கண்டறியும் புலனாய்வுத்துறை, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கின்ற பொலிஸ், பாதுகாப்பை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தும்…

சுதந்திரத் தினத்தன்று நீதிக்கு சாவுமணியா?

நாட்டின் ஜனநாயகம் கடந்தவருட இறுதியில் கேள்விக்குறிக்குள்ளானது. இந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தால் அரசியல் யாப்பும், ஜனநாயகமும் பாதுகாக்கப்பட்டது. அத்தகைய நாட்டின் மேன்மைதங்கிய துறையாக இருக்கும் நீதித்துறையை அவமதித்தவர் பாரிய குற்றமிழைத்தவராகவே கருதப்படுவார். பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளில் சிக்கி 6 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கும் ஞானசார தேரர் பாரிய குற்றம் இழைத்தமையினாலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. 2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற…