கண்டி, திகன இழப்புகளுக்கு துரிதமாக நஷ்டஈடு வழங்க வேண்டும்

பிரதமரிடம் அமைச்சர் வலியுறுத்தல்

0 657

கண்டி, திகன பகு­தி­களில் 2018 ஆம் ஆண்டு இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை துரி­த­மாக வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார். அதற்­கி­ணங்க விரைவில் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார். கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுக்கு ஒரு வருடம் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில் நூற்­றுக்கும் மேற்­பட்ட பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு இது­வரை நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டாமை தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் ஹலீம் ‘விடி­வெள்ளி’ க்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 2018 ஆம் ஆண்டு கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் அமைச்­ச­ர­வைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

வழங்­கப்­ப­ட­வுள்ள நஷ்­ட­ஈ­டுகள் பற்றி கண்­கா­ணிப்பு (Observation) செய்­வ­தற்­காக விப­ரங்கள் நிதி­ய­மைச்சு உட்­பட சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­க­ளி­ட­மி­ருந்து பதில்கள் கிடைத்­ததும் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­துடன் நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­படும் என்றார்.

வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­களில் 174 சொத்­து­க­ளுக்கே இது­வரை நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­துள்­ளது. 174 சொத்­து­க­ளுக்கும் 17 கோடி 5 இலட்­சத்து 67 ஆயிரம் ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இச்­சொத்­துகள் ஒவ்­வொன்றும் ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட இழப்­பீ­டு­களைக் கொண்­டுள்­ளதால் அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்றே வழங்­கப்­பட வேண்டும். தற்­போது அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என புனர்­வாழ்வு அதி­கா­ர­ச­பையின் மேல­திகப் பணிப்­பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்­கப்­பட்­டி­ருந்த விண்­ணப்­பங்­களில் 546 சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்கு புனர்­வாழ்வு அதி­கா­ர­சபை தேவை­யான நட­வ­டிக்­கை­களைப் பூர்த்தி செய்­தி­ருந்­தது.

இவற்றில் தலா ஒரு இலட்­சத்­துக்கு உட்­பட்ட நஷ்­ட­ஈ­டுகள் 372 சொத்­து­க­ளுக்கு வழங்­கப்­பட்­டு­விட்­டன. இச்­சொத்­து­க­ளுக்கு 19 கோடி 48 இலட்­சத்து 45 ஆயிரம் ரூபா வழங்­கப்­பட்­டது. தற்­போது 174 சொத்­து­க­ளுக்கே நஷ்ட ஈடு வழங்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. இதில் பள்­ளி­வா­சல்­களும் அடங்­கி­யுள்­ளன.

நஷ்­ட­ஈடு பெற்றுக் கொள்ள விண்­ணப்­பித்த விண்­ணப்­பங்­களில் 16 விண்­ணப்­பங்கள் நிலு­வை­யி­லுள்­ளன. அச்­சொத்­து­களின் நஷ்­டங்­களை மதிப்­பீடு செய்ய முடி­யாது என மதிப்­பீட்டு திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட பொருட்­க­ளுக்­கான ஆவ­ணங்கள் இன்­மையே இதற்­கான கார­ண­மாகும். இதற்­கென ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சிபாரிசின்படி 16 சொத்துகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.

கண்டி, திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு தாமதமில்லாமல் நஷ்டஈடுகளை வழங்குமாறு அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-விடிவெள்ளி

Leave A Reply

Your email address will not be published.