இன்று பேசப்படும் இன நல்லிணக்கம் அன்று பொலன்னறுவை யுகத்தில் சிறப்பாக இருந்தது

கண்டியில் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

0 653

இலங்­கையில் இன்று பேசப்­ப­டு­கின்ற சக­வாழ்வு, இன நல்­லி­ணக்கம் போன்ற அம்­சங்கள் அன்று பொலன்­ன­றுவை யுகத்தில் மிகச் சிறப்­பாகக் காணப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரி­வித்தார்.

கண்டி பேரா­தனை ஸ்ரீ சுபோ­தா­ராம சர்­வ­தேச பௌத்த மத்­திய நிலை­யத்தை திறந்­து­வைத்­தபின் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது- இந்த இடத்­திற்கு நான் மூன்று முறை விஜயம் செய்­துள்ளேன்.

ஒவ்­வொரு முறை யும் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்­களை இங்கு கண்டேன். இங்கு அமைக்­கப்­பட்­டுள்ள தர்­ம­ராஜ ஸ்தூபியில் வைக்கப்­பட்­டுள்ள  பௌத்த புனித சின்­னங்கள் தொடர்­பான பட்­டியல் ஒன்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதனை வாசிக்­கும்­போது இந்த இடத்தின் சிறப்பை அறிந்­து­கொள்ள முடி­கி­றது. இதற்கு வர­லாற்று முக்­கி­யத்­து­வ­முண்டு. இத­னூ­டாக பௌத்த கலா­சா­ரம், பௌத்த  நாக­ரிகம் பற்றி அறிந்­து­கொள்­ளவும் பேசவும் இய­லு­மாக உள்­ளது.

பௌத்த கோட்­பாட்டில் தேர­வாத சித்­தாந்தம் நிறைந்த ஒரு பிரி­வாக நாம் இருக்­கி­றோம். எமது பின்­ன­ணியைப் பொறுத்­த­வரை உல­க­ளா­விய ரீதியில் தேர­வாத தலை­மை­ய­க­மாக இலங்கை கரு­தப்­ப­டு­ம­ளவு சிறப்­பா­ன­தாக உள்­ளது.

தற்­போது மியன்மார் என்­ற­ழைக்­கப்­படும் பர்­மா­விற்கு நான் பல முறை விஜயம் செய்­துள்ளேன்.

அப்­போது அங்கு பௌத்த கலாசாரப் பின்­ன­ணி­களை அவ­தா­னித்­துள்ளேன். இருப்­பினும் அங்கு இலங்கை பௌத்த துற­வி­க­ளுக்­கான விகா­ரைகள் அல்­லது மடா­ல­யங்கள் இல்லை. ஆனால் இலங்­கையில் பல இடங்­க­ளிலும் பர்­மாவின் பௌத்த துற­வி­க­ளுக்­கான மடா­ல­யங்கள் உள்­ளதை காண்­கிறோம்.

எனவே, நான் பர்மா அர­சுடன் இது­பற்றிப் பேச்­சு­வார்த்தை நடத்தி அங்கும் இலங்கை பிக்­கு­மார்­க­ளுக்­கான மடா­ல­யங்கள் அமைப்­பது பற்றிப் பேச­வுள்ளேன்.

சில­மா­தங்­க­ளுக்கு முன் பொலன்­ன­றுவைப் பிர­தே­சத்தில் ஒரு சிவன் கோவிலை புன­ர­மைப்புச் செய்ய அகழ்­வுப்­ப­ணியில் ஈடு­பட்­ட­போது பூமியில் பழைய விகா­ரை­யொன்றின் சிதை­வுகள் கிடைத்­துள்­ளன. இது எப்­படி வந்­தது என்ற சிந்­தனை ஏற்­பட்­டது.

இது­பற்றி நான் புதை­பொருள் மற்றும் புரா­தன சின்­னங்கள் மற்றும் தொல்­பொருள் விற்­பன்­னர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்தேன்.

ஆரம்­பத்தில் அனு­ரா­த­பு­ர­யு­கத்தில் கட்­டப்­பட்ட விகாரை பின்னர் சிதை­வ­டைந்­துள்­ளது.

அதே நேரம் பொலன்­ன­றுவை யுகம் ஆரம்­பித்­த­போது அவ்­வி­டத்தில் சுமார் 600 வரு­டங்­களின் பின் சிவன் கோவி­லொன்று கட்டப்­பட்­டி­ருக்­க­லா­மென அபிப்­பி­ரா­யப்­பட்­டனர்.

இன்று நாம் பேசும் அனைத்து இன­நல்­லு­றவு, சக­வாழ்வு, நல்­லி­ணக்கம்,  சகோ­த­ரத்­துவம் அனைத்தும் அன்­றைய பொலன்னறுவை யுகத்தில் சரியாக இருந்தது என்பதை கூறிக்கொள்ள  விரும்புகிறேன்.

பௌத்த கலாசாரப் பாரம்பரியங்களுடன் பல விடயங்களை நாம் தொடர்புபடுத்த முடியும். எனவே எதிர்காலத்தில் தர்மத்தையும் தார்மீகத்தையும் உலகளாவிய ரீதியில் எடுத்துச் செல்வோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.