மீலாத் பாடசாலைக்கு உடனடி தீர்வு வேண்டும்

சபையில் எதிரணி முஸ்லிம் உறுப்பினர்கள் கோரிக்கை இனவாதமாக மாற்ற இடமளியோம் என்கிறது அரசாங்கம்

0 46

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
தெஹி­வளை மீலாத் மகா­வித்­தி­யா­ல­யத்தில் நிலவும் இடப் பற்­றாக்­கு­றையை விரைவில் நிவர்த்தி செய்து அந்த மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கையை தொடர்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என எதி­ரணி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபையில் கோரிக்கை விடுத்­தனர்.

இத­னி­டையே, இவ்­வி­வ­கா­ரத்தை இன­வாத பிரச்­சி­னை­யாக மாற்­று­வ­தற்கு ஒரு சில தரப்­பினர் முயற்­சிப்­ப­தா­கவும் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­காது, அத்­தோடு இவ்­வி­வ­கா­ரத்­திற்கு தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்றும் அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.

இது­வி­ட­ய­மாக சபை ஒத்­திவைப்பு வேளை பிரே­ர­ணை­யொன்றை கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் முன்­வைத்தார். இவ்­வி­டயம் நேற்று முன்­தினம் விவா­தத்­திற்கு எடுத்­து­க்கொள்­ளப்­பட்­டது.
இதன்­போது பிரே­ர­ணையை முன்­வைத்து முஜிபுர் ரஹ்மான் எம்.பி உரை­யாற்­று­கையில்,
முஜிபுர் ரஹ்மான்
தெஹி­வளை மீலாத் மகா­வித்­தி­யா­ல­யத்தில் இடம்­பெற்­று­வரும் இடப் பற்­றாக்­கு­றையை விரைவில் நிவர்த்தி செய்து அந்த மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கையை தொடர்­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். பாட­சா­லைக்கு அருகில் இருக்கும் அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மான கட்­டிடம் ஒன்றை தற்­கா­லி­க­மா­க­வேனும் வழங்க வேண்டும்.
1952ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட பிலி­யந்­தலை கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட மீலாத் மகா­ வித்­தி­யா­ல­யத்தில் தற்­போது 574 மாண­வர்கள் வரை கல்வி கற்று வரு­கின்­றனர். பாட­சா­லையில் பூமி அளவு 23 பேச்சர்ஸ் என்­பதால் அது போது­மா­ன­தாக இல்லை என்­பதால் அதி­க­மான மாண­வர்கள் கல்வி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யாமல் வீடு­களில் இருக்­கி­றார்கள். உயர்­கல்வி கலைப்­பி­ரிவு பாடங்கள் கற்­பிக்­கப்­படும் இந்த பாட­சாலை இரு­மொழி பாட­சா­லை­யாகும்.

இந்த பாட­சா­லைக்கு போது­மான இட­வ­சதி இல்­லா­மையால் பிலி­யந்­தலை கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட தெஹி­வளை பிர­தே­சத்தில் பயன்­ப­டுத்­தாமல் இருந்த சுமங்க வித்­தி­யா­ல­யத்­துக்கு சொந்­த­மான கட்­டி­டத்தை கல்வி அதி­கா­ரி­களின் அனு­ம­தி­யு­டனே தற்­கா­லி­க­மாக 2024.10.10 ஆம் திகதி இதற்­காக வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதன் பின்னர் இந்த கட்­டி­டத்தை செப்­ப­னி­டு­வ­தற்­காக பாட­சாலை அபி­வி­ருத்தி அதி­கா­ரி­க­ளினால் 30 இலட்சம் ரூபா­வரை செல­வ­ழித்து அதனை புதுப்­பிக்கும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்­தது.
2025 ஜன­வரி 8ஆம் திகதி 1 தொடக்கம் 5 ஆம் தரங்­களை உடைய மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைக்கு இந்த கட்­டி­டத்தை பயன்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் குழு­வொன்றின் தலை­யீட்டின் மூலம் இதனை ஆரம்­பிக்க முடி­யாமல் போயுள்­ளது. புதிய பாட­சாலை தவணை ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு மாதத்­துக்கும் அதிக காலம் கடந்­துள்­ள­போதும் இந்த மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள முடி­யாமல் வெளியில் அந்த மாண­வர்கள் கல்­வியை தொடர்­கின்­றனர்.

அதனால் இந்த விடயம் தொடர்பில் கருத்தில் கொண்டு இந்த பிர­தே­சத்தில் கல்வி அமைச்­சுக்கு சொந்­த­மான பயன்­ப­டுத்­தாத கட்­டிடம் ஒன்றை இதற்­காக வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

இப்­பி­ரே­ர­ணையை ஆமோ­தித்து ஆளும் கட்சி கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமன்­மலி குண­சிங்க கருத்­து­ரைத்தார். அவர் இது­வி­ட­ய­மாக கருத்து தெரி­விக்­கையில்,
சமன்­மலி குண­சிங்க
2024ஆம் ஆண்டு இதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்க அப்­போ­தைய கல்வி அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த அரச அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை வழங்­கி­யுள்ளார். இருப்­பினும் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. மீலாத் பாட­சா­லைக்கு, சுமங்க பாட­சா­லையை வழங்­கு­வ­தற்கும் இந்த ஆண்டு மீண்டும் ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வா­றான பின்­ன­ணியில் ஒரு தரப்­பினர் இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முயற்­சிக்­கி­றார்கள். மும்­மொழி பாட­சா­லை­களை உரு­வாக்க வேண்டும். இந்த பாட­சா­லையின் மாண­வர்­க­ளுக்கு உரிய பாட­சா­லையை வழங்க வேண்டும். தெஹி­வளை பகு­தியில் தமிழ், சிங்­கள மற்றும் முஸ்லிம் சமூ­கத்­தினர் சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ்­கி­றார்கள்.

இந்த பாட­சாலை விவ­கா­ரத்தை ஒரு தரப்­பினர் இன­வாத போக்­குக்கு கொண்டு செல்ல முயற்­சிக்­கி­றார்கள். இதற்கு இட­ம­ளிக்­கி­றார்கள். இந்த பிரச்­சி­னைக்கு சுமு­க­மான முறையில் தீர்வு காண வேண்டும் என சமன்­மலி குண­சிங்க தெரி­வித்தார்.
குறித்த ஒத்­தி­வைப்­பு­வேளை விவா­தத்தில் கொழும்பு மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் கலந்­து­கொண்டு உரை­யாற்­றினார். அவர் உரை­யாற்­று­கையில்,
எஸ்.எம்.மரிக்கார்
தெஹி­வளை இரத்­ம­லானை மற்றும் மொரட்­டுவை உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் 35 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்­கின்­றனர். இந்த நாட்டில் எந்­த­வொரு பிள்­ளையும் தனக்கு விரும்­பிய மொழியில் கல்வி கற்­ப­தற்­கான உரிமை உள்­ளது என நாம் நம்­பு­கிறோம். தான் விரும்பும் மொழியில் தமது சமயம் சார்ந்த கல்­வியை கல்வி அமைச்சின் பாடத்­திற்கு அமைய தொடர முடியும். எனினும் கடந்த காலங்­களில் மீலாத் பாட­சா­லையை மேம்­ப­டுத்த முடி­யாமல் போயுள்­ளது. அதற்­கான அடிப்­படை வச­தி­களை பெற்றுக் கொடுக்க முடி­யாமல் போய் உள்­ளது. எனவே அதற்­கான உரிய தீர்வை பெற்றுக் கொடுப்­பது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். ஆனால் இந்த பணியை முன்­னெ­டுத்து செல்லும் போது இதனை அடிப்­ப­டை­யாக கொண்டு சிங்­க­ள -­முஸ்லிம் மக்­க­ளுக்கு இடையில் அல்­லது சிங்­கள- தமிழ் மக்­க­ளுக்கு இடையில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சமன்­மல்லி குண­சிங்க கூறி­யது போன்று பொது­ஜன பெர­மு­னவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மாந­கர சபை உறுப்­பி­னர்கள் சிலர் இன­வா­தத்தை தோற்­று­விக்க முயற்­சிக்­கின்­றனர். எனவே இன­வா­தி­க­ளுக்கு வாய்ப்பை பெற்­றுக்­கொ­டுக்­காமல் இந்த மாண­வர்­களின் உரி­மை­களை பாது­காத்து அவர்­க­ளுக்­கான உரிய கல்­வியை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.எம். மரிக்காத் தெரி­வித்தார்.

குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணைக்கு கல்வி உயர்­கல்வி பிரதி அமைச்சர் மதுர சென­வி­ரத்ன பதி­ல­ளித்து உரை­யாற்­றினார். அவர் இதன்போது உரை­யாற்­று­கையில்,
பிரதி அமைச்­சரின் பதில்
தெஹ­வளை மீலாத் முஸ்லிம் மகா ­வித்­தி­யா­ல­யத்தின் மாண­வர்­களின் எண்­ணிக்கை விரை­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 2015 இல் 52 மாண­வர்­க­ளாக இருந்த இந்த எண்­ணிக்கை 2025இல் 544 மாண­வர்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் அங்கு இடப்­பற்­றாக்­குறை இருப்­பது தொடர்பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது உண்மை என்­பதும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த பாட­சா­லையில் பிர­தான மண்­டபம் இல்­லாமை மற்றும் மாண­வர்­க­ளுக்கு போது­மான இட­வ­சதி இல்­லாத நிலை­யி­லேயே பாட­சா­லை­யினால் இட­வ­சதி செய்து தரு­மாறு கோரிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. கட்­டிடம் ஒன்றை வழங்­கு­மாறு அவர்­களின் கோரிக்கை நியா­ய­மா­ன­தாகும்.

இந்த பாட­சா­லையில் தற்­போது 11 வகுப்­ப­றை­களே இருக்­கின்­றன. 37 வகுப்­ப­றைகள் தேவைப்­ப­டு­கின்­றன. 26 வகுப்­ப­றை­களின் தேவைப்­பாடும் அங்கு இருக்­கி­றது. அத­னால்தான் மேல் மாகாண பிர­தான செய­லா­ளரின் அனு­ம­தி­யுடன் சுமன வித்­தி­யா­லய கட்­டி­டத்தை தற்­கா­லி­க­மாக வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கட்­டி­டத்­துக்­காக மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­லயம் 25இலட்சம் ரூபா வரை செல­வ­ழித்­தி­ருக்­கி­றது. இந்­நி­லையில் அந்த பிர­தே­சத்தில் இருக்கும் அடிப்­ப­டை­வா­தி­களின் நட­வ­டிக்­கையால் இந்த பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு அங்கு கல்வி நட­வ­டிக்­கையை ஆரம்­பிக்க முடி­யாமல் போயுள்­ளது.

அதனால் இதற்கு மாற்று திட்­ட­மாக பல யோச­னைகள் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருக்­கின்­றன. அதில் பிலி­யந்­தலை விஜய வித்­தி­யா­லயம், புத்த கவேச வித்­தி­யா­லயம் இதற்கு மேல­தி­க­மாக பிலி­யந்த சுமன வித்­தி­யா­லயம். என்­றாலும் தெஹி­வளை ஒருங்­கி­ணைப்­புக்­கு­ழுவில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமைய நிகபே வித்­தி­யா­லயம் இதற்­காக பிரே­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனால் மிக விரை­வாக மாண­வர்­களை அங்கு அழைத்துச் செல்ல முடி­யு­மாகி இருக்­கி­றது.இதன் மூலம் இந்த த நடவடிக்கை பிரச்சினை எதுவும் இல்லாமல் முடிவுக்கு கொடுண்டுவரப்படும என நாங்ள் நம்புகிறோம் என பிரதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.