“உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்”…..

இன்று வெளியிடப்படும் இரு நூல்கள் பற்றிய பார்வை

0 35

நாச்­சி­யா­தீவு பர்வீன்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் தலை­கு­னிந்து அவ­மா­னப்­பட்­ட­தோடு அப்­பாவி முஸ்லிம் சமூகம் குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்­றப்­பட்டு கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது. அப்­பாவி முஸ்­லிம்கள் சந்­தேகக் கண் கொண்டே பார்க்­கப்­பட்­டார்கள். முஸ்லிம் சமூ­கத்­திற்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் இடையில் பெரும் இடை­வெ­ளியும் விரி­சலும் இதன்­மூலம் உரு­வா­கி­யது.

முஸ்லிம் சமூகம் இரண்டாம் தரப்­பி­ர­ஜை­க­ளாக திட்­ட­மிட்ட இன­வாத சக்­தி­க­ளினால் ஆக்­கப்­பட்­டது. நின்றால், நடந்தால், பார்த்தால் எல்­லாமே சந்­தேகக் கண்­கொண்டே நோக்­கப்­பட்­டது. வேலைத்­த­ளங்­க­ளிலும், வெளி­யி­டங்­க­ளிலும் பெரும்­பான்மை சகோ­த­ரர்­களின் பார்­வையை எதிர்­நோக்க திரா­ணி­யற்று, தயங்­கிய வேதனை நிறைந்த நாட்­க­ளவை.காலப்­போக்கில் இந்த எண்ணம் தளர்­வுற்­றாலும் முற்­றாக இல்­லாமல் போக­வில்லை.

இந்த பெரும்­பான்மை எண்­ணக்­க­ருவை கேள்­விக்­குட்­ப­டுத்தும் ஒரு ஆவ­ண­மாக ராஜன் ஹுல் ஆங்­கி­லத்தில் எழு­திய Easter Sunday attack (when The Mystery Hand Raised) என்ற நூல் அமைந்­துள்­ளது. இந்த ஆங்­கில நூலை தமி­ழுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரத்தின் தலை­வரும் மூத்த ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான என் எம்.அமீன் “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறை­கரம் வெளிப்­பட்­ட­போது) எனும் தலைப்பில் மொழி­பெ­யர்த்­துள்ளார்.

சஹ்ரான் என்னும் தீவி­ர­வாதி தொடர்பில் சாதா­ரண முஸ்லிம் மக்கள் இலங்­கையில் அறிந்­தி­ராத பல விட­யங்­களை இவ­ரது ஆய்வு தெளி­வு­ப­டுத்தி நிற்­கின்­றது. சஹ்­ரானின் பிறப்பு வளர்ச்சி இயக்க ரீதி­யான செயல்­பா­டுகள் தீவி­ர­வா­தத்தின் மீதான ஈடு­பாடு என்­ப­வற்றை மிகத் தெளி­வா­கவும் ஆழ­மா­கவும் ராஜன் ஹுல் இங்கே தனது ஆய்வின் மூலம் வெளிப்­ப­டுத்தி இருக்­கிறார். ராஜன் ஹுலின் இந் நூலா­னது அந்தக் கால­கட்­டத்தில் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் இணைந்தே உரு­வாக்­கப்­பட்ட அவப்­பெ­யரை கேள்­விக்­குற்­ப­டுத்­தி­யது எனலாம்.

மிக நீண்ட கால­மாக ஊட­கத்­து­றையில் இருக்­கின்ற என்.எம். அமீன் ஊட­கத்­து­றையில் தான் பெற்ற அனு­ப­வத்­தையும் தனது தமிழ் மொழி ஆற்­ற­லையும் இந்த மொழி­பெ­யர்ப்பை செய்­வ­தற்கு செவ்­வனே பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். சாதா­ரண ஒரு பாம­ரனும் இந்த புத்­த­கத்தை வாசிப்­பதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் அதன் முரண்­பாட்டின் தோற்­றுவாய் சஹ்ரான் பற்­றிய மேல­திக விபரம் போன்­ற­வற்றை மிகத் தெளி­வாக அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இலகு மொழி­ந­டையில் இந்த நூல் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது. துல்­லி­ய­மான இந்த மொழி­பெ­யர்ப்பைச் செய்த சிரேஷ்ட பத்­தி­ரி­கை­யாளர் என்.எம். அமீன் அவர்கள் பாராட்­டுக்­கு­ரி­ய­வரே!

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ரான முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்ட சவால்­களை, அவ­மா­னங்­களை, எதிர்ப்­பு­களை அடை­யா­ளப்­ப­டுத்தி அச்­ச­வால்கள் மூலம் பெற்­றுக்­கொண்ட அனு­ப­வத்­தி­னையும், முஸ்லிம் சமூ­கத்தை இந்த அவப்­பெ­ய­ரி­லி­ருந்து பாது­காப்­பதில் அர­சி­யல்­வா­தி­யாக மேற்­கொண்ட முன்­னெ­டுப்­பு­க­ளையும் ஆவ­ணப்­ப­டுத்தும் முக­மாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்கீம் எழு­திய “நாங்கள் வேறா­ன­வர்கள் அல்ல மண்ணின் வேரா­ன­வர்கள்” என்ற நூலும் கருத்தில் கொள்­ளத்­தக்­கது.

முஸ்லிம் சமூ­கத்தின் மீதான அழுத்­தங்­களும் நீத­மற்ற செயற்­பா­டு­களும் வேண்­டு­மென்றே கட்­ட­மைக்­கப்­பட்ட அபாண்­டங்­களும் என்று வெவ்­வேறு தலைப்­புகள் கூடாக தனது அனு­ப­வத்தை ஆழ­மாக பதிந்­தி­ருக்­கின்றார் ரவூப் ஹக்கீம்.

கொடூ­ர­மான உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லா­னது வர­லாற்றில் முஸ்­லிம்­க­ளா­கிய எங்­களை இக்­கட்­டுக்குள் தள்ளி இருப்­பதை வருத்­தத்­துடன் ஏற்­றுக்­கொள்ள நிர்­ப்பந்­திக்­கப்­பட்­டுள்ளோம். எங்கு எவ்­வாறு எப்­போது நிலை­மைகள் மோச­ம­டைந்­தன என்­பதைப் பற்றி விமர்­சன ரீதி­யாக பின்­னோக்கிப் பார்ப்­பது நல்­லது. எங்­க­ளது சொந்த வாழ்­விலும் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஒத்துவரா­த­வற்றை கண்­ட­றிந்து துண்டு துண்­டான அவற்றை ஒன்று சேர்த்து ஒரு சட்­ட­கத்தில் பொருத்திப் பார்ப்­பதே சாலச் சிறந்­த­தாகும். அப்­பொ­ழு­துதான் இலங்­கையின் பன்­மை­துவ சமூ­கத்தில் ஓர் அழ­கிய வரை­வாக அது இடம்­பெற வாய்ப்­புள்­ளது. பாலை­வனப் புழுதி புயலில் தீக்­கோழி தனது தலையை புதைத்துக் கொள்­வது போல எங்­க­ளது பல்­லின பல மத சமூக அமைப்பில் வழ­மை­யான பாரம்­ப­ரிய உண்­மை­களை இல­குவில் மறைத்து விட முடி­யாது என்­கிறார் ஹக்கீம்.

பழுத்த அனு­பவம் வாய்ந்த வாச­கனும், எழுத்­தா­ளனும், ஆய்­வா­ளனும், அர­சி­யல்­வா­தி­யு­மாக தன்னை இந்த நூலின் மூலம் நிரூ­பித்­துள்ளார் நூலா­சி­ரியர் சட்­ட­மு­து­மாணி ரவூப் ஹக்கீம்.
# சமா­தா­னத்­திற்­கான ஆர்­வமும், அதி­ருப்தி அளிக்கும் தலை­வி­தியும்.
# அறி­யப்­பட்ட அச்­சு­றுத்­தல்கள் தொடர்­பான தெளி­வு­ப­டுத்தல்: முஸ்லிம் குடித்­தொகை பற்றி சிங்­க­ள­வர்­க­ளுக்­குள்ள பயப்­பி­ராந்தி.
# முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து சிங்­கள கலாச்­சா­ரத்­திற்கு வரக்­கூ­டிய அச்­சு­றுத்­தல்கள் குறித்த எண்­ணங்கள்
# பயங்­க­ர­வாதம் குறித்த மாயையை களைதல். இனத்­துவ சமய தீவி­ர­வா­தமா? அல்­லது பொரு­ளா­தார மேலா­திக்க போட்­டியா?

இப்­படி பல்­வேறு தலைப்­பு­களில் தனது அனு­ப­வத்­தையும் ஆய்­வையும் ஒன்று திரட்டி மிக அழ­கிய முறையில் இந்த புத்­த­கத்தை தந்­தி­ருக்­கின்றார் எழுத்­தாளர்.
இனக்­கு­ழுக்கள் அனைத்தும் அணைந்தும் இணைந்தும் செல்லும் வகையில் சமூக ரீதி­யாக கட்­ட­மைக்­கப்­பட வேண்டும் பாரிய தேசிய சட்­ட­க­மொன்றில் அவை பொருத்­தப்­பட்டு ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு வேற்­று­மை­யிலும் ஒற்­றுமை காண்­ப­துவே சாலச் சிறந்­தது.
இந்தச் சொற்கள் கைதேர்ந்த ஒரு எழுத்­தா­ளனின் கைக­ளிலே சிக்­கி­யதால் அற்­பு­த­மான சிற்பம் போல் ஆகிப்­போ­யுள்­ளது. வித்­து­வச்­செ­ருக்­கற்ற மொழி­ந­டையில் தனக்கே உரிய மொழிவாண்­மையை இலா­வ­க­மாக பயன்­ப­டுத்தி வாச­கனை வளைத்துப் போடும் வசீ­க­ரத்தை இந்நூல் செய்­கி­றது. ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் இந்த நாட்டில் எதனை எதிர்­பார்க்­கின்­றது என்­ப­தனை இந்த சமூ­கத்தின் குர­லாக ஹக்கீம் இந் நூலின் மூலம் முன்­வைத்­துள்ளார்.

நம் முன்னே இருக்­கின்ற பிரச்­சி­னை­களைப் பற்றி பேசு­வ­தோடு நாம் எதிர்நோக்­கு­கின்ற பிரச்­சி­னை­களைப் பற்­றியும் மிக ஆழ­மாக பேசு­கின்­றது இந்நூல். பல்­லினச் சமூக கட்­ட­மைப்­புக்குள் சிறு­பான்­மை­யாக வாழு­கின்ற ஒரு சமூகக் குழு­மத்தின் எண்­ணங்­க­ளையும் எதிர்­பார்ப்­பு­க­ளையும் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் ஏற்­ப­டு­கின்ற தடங்­கல்­க­ளையும் தெளி­வு­ப­டுத்­து­கி­றது இந்நூல்.

உயிர்த்த ஞாயிறு தீவி­ர­வாத சம்­ப­வத்தின் பின் உருக்­கு­லைந்து போயி­ருந்த எமது சமூகக் கட்­ட­மைப்பை மீண்டும் அந்த பழைய நிலைக்கே கொண்டு வரு­வ­தற்கு ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யிலும் மிகவும் காத்­தி­ர­மாக முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்­டவர் என்பது நடுநிலையான அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். அவ்வாறே கொவிட்- 19 வைரஸின் தாக்கத்தின் மூலம் இறந்த முஸ்லிம் உடல்களை எரிக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனங்களே தெரிவித்த போதும் அவற்றைக் கருத்தில் கொள்ளாது இலங்கையில் இறக்கின்ற முஸ்லிம் உடல்களை தகனம் செய்வதற்கு அன்றைய இலங்கை அரசு வழங்கிய அந்த கசப்பான அனுபவத்தை எந்த ஒரு முஸ்லிமாலும் மறக்க முடியாது. அதன் பின்னணியில் இருந்த இனவாத போக்கினையும் மெல்லச் சுட்டிக் காட்டுகிறது இந்த புத்தகம்.

உயிர்த்த ஞாயிறு அனர்த்தம் (மறைகரம் வெளிப்பட்டபோது), மற்றும் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” இந்த இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வும் இன்று வியாழக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளன.

வேண்டுமென்றே புனையப்பட்ட பொய்களால் புண்படுத்தப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு ஓரளவேணும் ஒத்தடம் கொடுக்கும் ஔடதமாக இவ்விரு நூல்களும் அமையும் என்று நம்புவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.