அறுகம்பேயில் இஸ்ரேல் நலன்கள் மீது தாக்குதல்? உளவுத் தகவலால் கடும் பாதுகாப்பு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை

பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் அறிவிக்க சிறப்பு இலக்கம்

0 13

(எப்.அய்னா)
அம்­பாறை, பொத்­துவில், அறு­கம்பே பகு­தியில் இஸ்ரேல் சுற்­றுலா பய­ணிகள் மற்றும் அவர்­க­ளது தலங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­படும் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக கிடைக்கப் பெற்­றுள்ள உளவுத் தக­வலால் பர­ப­ரப்பு நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ­னவின் நேரடி ஆலோ­சனை மற்றும் மேற்­பார்­வையில், கிழக்கு சுற்­றுலா பய­ணிகள் தொடர்பில் விஷேட பாது­காப்பு பொறி­முறை ஒன்று அமுல் செய்­யப்­பட்டு நடை­மு­றை­பப்­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

குறிப்­பாக அறு­கம்­பேவை மையப்­ப­டுத்தி 500 இற்கும் அதி­க­மான பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யினர் சிறப்பு கட­மை­க­ளுக்­காக அழைக்­கப்­பட்­டுள்­ள­துடன், வீதிச் சோதனை சாவ­டிகள் உள்­ளிட்­ட­வையும் அமைக்­கப்­பட்டு பாது­காப்பு நட‌­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப‌­டுத்­தப்­பட்­டுள்­ளன. இத­னை­விட கடற்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தி­னரின் உத­வியும் பாது­காப்பை பலப்­ப‌­டுத்­து­வதில் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக கிழக்கி மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி­மனை தெரி­வித்­தது.

மத்­திய கிழக்கில் நிலவும் யுத்த சூழலை மையப்­ப‌­டுத்தி, அறு­கம்­பேயில் உள்ள இஸ்­ரே­லிய நலன்கள் இலக்கு வைக்­கப்­ப­டலாம் என்ற உளவுத் தகவல் பதில் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரி­ய­வுக்கு அரச உலவுத் துறை ஊடாக கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் இது தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இதற்­காக சிறப்பு உள­வுத்­துறை அதி­கா­ரிகள் அறு­கம்பே விரைந்­துள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் மட்ட தக­வல்கள் தெரி­வித்­தன.

சுற்­றுலா பய­ணி­க­ளுக்கு சிவப்பு எச்சரிக்கை:
அம்­பாறை மாவட்­டத்தில் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் அதிகம் வந்து செல்லும் அறு­கம்பே பகு­திக்கு செல்­வதை தவிர்க்­கு­மாறு இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூத­ரகம் நேற்று (23) தனது நாட்டு மக்­க­ளுக்கு சிவப்பு அறி­வித்தல் விடுத்­துள்­ளது.

அறு­கம்பே பிர­தே­சத்தில் உள்ள பிர­பல சுற்­றுலாத் தலங்­களை இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­படும் என எச்­ச­ரிக்கும் நம்­ப­க­மான தகவல் கிடைத்­துள்­ள­தாக தூத­ரகம் தனது அறி­விப்பில் குறிப்­பிட்­டுள்­ளது.

இலங்­கையில் வசிக்கும் அமெ­ரிக்க பிர­ஜைகள் மற்றும் தூத­ரக அதி­கா­ரிகள் உள்­ளிட்ட எவரும் அறு­கம்பே பகு­திக்கு செல்­வதை தவிர்க்­கு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக அந்த அறி­விப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யமும் தமது பிர­ஜைகள் இலங்­கைக்கு விஜயம் செய்யும் போது கவ­ன­மாக இருக்­கு­மாறு அறி­வித்தல் விடுத்­துள்­ளது.

அமெ­ரிக்க தூத­ரகம் விடுத்த எச்­ச­ரிக்கை அறி­விப்பு மற்றும் பொலிஸ் தலி­மை­யகம் நேற்று வெளி­யிட்ட சிறப்பு அறிக்­கையை அடுத்து இலங்­கை­யி­லுள்ள மேலும் பல வெளி­நாட்டு தூத­ர­கங்கள் தமது பிர­ஜை­க­ளுக்கு எச்­ச­ரிக்கை அறி­வித்­தலை விடுத்­துள்­ளது.

இதன்­படி, இலங்­கைக்­கான ரஷ்ய தூத­ரகம் மற்றும் அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யமும் இலங்­கைக்கு விஜயம் செய்யும் தமது பிர­ஜை­களை அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அறி­வித்­துள்­ளன.

பொலிஸ் பேச்­சாளர் கூறு­வ­தென்ன?:
இந் நிலையில், இந்த அபாய எச்­ச­ரிக்கை தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­துவ நேற்று முற்­பகல் விஷேட செய்­தி­யாளர் சந்­திப்பை நடாத்தி விட­யங்­களை தெளி­வு­ப­டுத்தி இருந்தார்.

“ ‘அறு­கம்பே பிர­தே­சத்தில் இஸ்­ரே­லி­யர்கள் தங்­கி­யி­ருக்கும் கட்­டிடம் ஒன்று உள்­ளது. அங்கு தங்­கி­யி­ருப்போர் மீது தாக்­குதல் நடத்தும் அபாயம் இருப்­ப­தாக கிடைத்த தக­வலின் அடிப்­ப­டையில் அப்­ப­கு­தியின் பாது­காப்பை பலப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அறு­கம்பே பகு­தியில் இஸ்­ரே­லி­யர்­களால் கட்­டப்­பட்ட கட்­டிடம் ஒன்று உள்­ளது. மண்­டபம் போன்ற இடம் அது. பொது­வாக, அறு­கம்பே மற்றும் பொத்­துவில் பகு­திகள் ‘சர்­பிங்கில்’ அலைச் சறுக்கு விளை­யாட்டில் அதிக ஆர்வம் காட்­டு­வதால் இஸ்­ரே­லி­யர்­களின் கவ­னத்தை அது ஈர்த்­துள்­ளது.

கடந்த சில நாட்­க­ளாக இங்­குள்ள இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு ஏதா­வது ஆபத்து ஏற்­ப­டக்­கூடும் என்ற தகவல் கிடைத்­தது. இதன் கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்­திற்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதி­பரின் பணிப்­பு­ரைக்­க­மைய குறித்த பகு­தியில் வீதித்­த­டைகள் மேற்­கொள்­ளப்­பட்டு அங்கு வந்து செல்­வோரும் வாக­னங்­களும் சோத­னை­யி­டப்­பட்டு வரு­கின்­றது.

இன்று பொலிஸ், பொலிஸ் விசேட அதி­ர­டிப்­படை, இரா­ணுவம் மற்றும் கடற்­படை மற்றும் குறிப்­பாக புல­னாய்வுப் பிரி­வினர் தேவை­யான இடங்­களில் குவிக்­கப்­பட்டு பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்தப் பகு­திக்கு மேல­தி­க­மாக‌ மற்ற பகு­தி­களில் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்து சுற்­றுலாப் பய­ணி­களின் பாது­காப்­பையும் உயர் மட்­டத்தில் வைத்­தி­ருக்­கு­மாறு பொலி­ஸா­ருக்கு தெரி­வித்­துள்ளோம்.’ என நிஹால் தல்­துவ தெரி­வித்தார்.
உளவுத் தகவல் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­ததா?:

இந்த உளவுத் தக­வல்கள் வெளி­நாட்­டி­லி­ருந்து கிடைக்­கப்­பெற்­றதா அல்­லது இந்­நாட்டின் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் இருந்து கிடைக்­கப்­பெற்­றதா என வின­வி­ய­போது, ​​பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­துவ அதற்கு இவ்­வாறு பதி­ல­ளித்தார்.

“அது தொடர்­பாக என்­னிடம் எந்த தக­வலும் இல்லை. இந்த தகவல் வெளி­நாட்டில் இருந்து வந்­ததா அல்­லது நமது நாட்டின் உளவு அமைப்­பு­க­ளுக்கு கிடைத்­ததா என்­பதை என்னால் கூற முடி­யாது. ஆனால், பதில் பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கு கிடைத்த உள­வுத்­துறை தகவல் படி, பாது­காப்பை அதி­க­ரிக்­கு­மாறு கிழக்கு மாகா­ணத்­திற்குப் பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ருக்கு பணிப்­புரை வழங்­கப்­பட்­டுள்­ளது.’ என தெரி­வித்தார்.

பொத்­துவில் பகு­தியில் இஸ்­ரேலின் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரிப்பு; தேவா­ல­யமும் நிர்­மாணம் :
எவ்­வா­றா­யினும் கிழக்கில் பொத்­துவில், அறு­கம்பே உள்­ளிட்ட பகு­தி­களில் அண்மைக் கால­மாக இஸ்­ரேலின் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக சுற்­றுலா பய­னி­க­ளாக வந்து அங்கு தொழில் நிமித்தம் தங்­கி­யி­ருக்கும் இஸ்­ரே­லி­யர்­கலின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்­துள்­ள­தாக, அவர்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்து செல்லும் போக்கு உள்­ள­தா­கவும் பிர­தேச மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

பொத்­துவில் பிர­தேச செய­ல­கத்தின் நிர்­வாக அதி­காரி எம்.எம்.எம். ஸுஹைர் மக்­களின் இந்த கருத்­தினை உறு­திப்­ப­டுத்தும் வித­மாக வெளி­நாட்டு ஊடகம் ஒன்­றிடம் கருத்து தெரி­வித்­துள்ளார். அவரின் கூற்­றுப்­படி, அறு­கம்பே பகு­தியில் உள்ள பல ஹோட்­டல்­களில் இஸ்­ரே­லி­யர்கள் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்கு அந்­தந்த ஹோட்­டல்­களில் இருந்து இல­வச உணவு கிடைப்­ப­தா­கவும், அவர்கள் மூலம் சுற்­றுலா பய­ணி­களும் அந்­தந்த ஹோட்­டல்­க­ளுக்கு அழைத்து வரப்­ப­டு­வ­தா­கவும் பொத்­துவில் பிர­தேச செய­ல­கத்தின் நிர்­வாக அதி­காரி எம்.எம்.எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார்.

மேலும் பல இஸ்­ரே­லி­யர்கள் அப்­ப­கு­தியில் பல கட்­டி­டங்­களை கொள்­வ­னவு செய்­துள்­ள­தா­கவும், அவர்கள் அப்பகுதியில் ஒரு தேவா­ல­யத்தை நிர்­மா­னித்­துள்­ள­தா­கவும் பொத்­துவில் பிர­தேச செய­ல­கத்தின் நிர்­வாக அதி­காரி எம்.எம்.எம். ஸுஹைர் தெரி­வித்­துள்ளார்.

பாது­காப்­புக்கு விஷேட நட­வ­டிக்­கைகள் :
இவ்­வா­றான பின்­ன­ணியில் நேற்று 23ஆம் திகதி முதல் எந்­த­வொரு சுற்­றுலாப் பய­ணிக்கும், பாது­காப்பு தொடர்­பான ஏதேனும் பிரச்­ச­னைகள் ஏற்­பட்டால் உட­ன­டி­யாக‌ 1997 இலங்கை பொலி­ஸாரின் அவ­சர தொலை­பேசி இலக்­கத்­திற்கு அறி­விக்க வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக‌ பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பணி­மனை தெரி­வித்­துள்­ளது.

பொலிஸ் சுற்­றுலாப் பிரிவை மேலும் பலப்­ப­டுத்தி நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரிய சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் விசேட அறி­வு­றுத்­தல்­களை வழங்­க­வுள்­ள­தா­கவும் அந்த அறி­விப்பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மத்­திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்­பாவின் இரா­ணுவ நிலை­மையை கருத்­திற்­கொண்டு, பாது­காப்பு அமைச்சு மற்றும் பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் ஆலோ­சனை மற்றும் ஒருங்­கி­ணைப்பின் பேரில், பொலிஸ் மற்றும் புல­னாய்வு அமைப்­புக்கள் விசேட வேலைத்­திட்­டத்தை தயா­ரித்து நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக அவ்­வ­றி­விப்பில் கூறப்­பட்­டுள்­ளது.

அடுத்து வரும் 4 மாதங்­களில் அதிக சுற்­றுலா பய­ணிகள் :
எதிர்­வரும் சுற்­றுலாப் பரு­வத்தில் அதி­க­ள­வான வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் இலங்­கைக்கு வருகை தர­வுள்­ளனர். குறிப்­பாக நவம்பர் முதல் அறு­கம்பே பகு­திக்கு அதி­க­ள­வான சுற்­றுலா பய­னிகள் வருகை தருவர் என எதிர்ப்­பார்க்­க­பப்டும் நிலையில் அதில் அதி­க­மானோர் இஸ்­ரே­லி­யர்­க­ளாவர்.

இலங்கை சுற்­றுலா ஊக்­கு­விப்பு பணி­யக‌ தர­வு­க­ளின்­படி, இந்த வரு­டத்தின் முதல் 9 மாதங்­களில் இந்­தியா, சீனா, ரஷ்யா, ஜேர்­மனி, பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடு­களில் இருந்தே அதிக சுற்­றுலா பய­ணிகள் நாட்­டுக்குள் வந்­துள்­ளனர்.

அந்த தரவுகளின்படி, இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இஸ்ரேலில் இருந்து 20,515 சுற்றுலாப் பயணிகளும் 43,678 அமெரிக்கர்களும் 136,464 பிரித்தானிய பிரஜைகளும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.