இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளிலும் மாற்றம் (சிஸ்டம் சேன்ஜ்) தேவை

0 12

மௌலவி ஜே.மீரா மொஹிதீன்
முன்னாள் பிரதிப் பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்

இலங்­கையின் ஹஜ் நட­வ­டிக்­கை­களை இது­வரை ஆட்­சிக்கு வரும் இரு அர­சாங்­கங்­க­ளுமே மாறி­மாறி மேற்­கொண்டு வந்­தன. இவ்­விரு அர­சாங்­கங்­களும் ஹஜ் விட­யங்­களில் அர­சி­யலைப் புகுத்தி தாம் நினைத்­த­வாறு விட­யங்­களை கையாண்­டன. இதனால் ஹஜ் பய­ணி­களும் முகவர் நிலை­யங்­களும் திணைக்­க­ளமும் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்டி வந்­தது. தற்­போ­தைய புதிய அர­சாங்கம் பழைய அமைப்பில் மாற்­றத்தை விரும்­பு­வ­தாலும் திணைக்­களம் 2025 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஒழுங்­கு­களை தற்­போது ஆரம்­பித்­துள்­ள­தாலும் இவ்­வி­ட­யத்தில் எனது கருத்­துக்­களை முன்­வைக்க விரும்­பு­கின்றேன்.

எனது கருத்தை முன்­வைக்­குமுன் இவ்­வி­ட­யத்தில் எனது முன்­னைய பங்­க­ளிப்பு என்ன என்­பதை வாச­கர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். எனது 37வருட அர­சாங்க சேவையில் 27 வரு­டங்கள் முஸ்லிம் சமய பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளத்தில் கட­மை­யாற்றி 2010 ஆம் ஆண்டு ஓய்­வு­பெற்றேன். இவற்றுள் 25 வரு­டங்கள் திணைக்­க­ளத்தின் ஹஜ் விட­யங்­க­ளுக்கு பொறுப்­பான அதி­கா­ரி­யாக ஓய்வு பெறும்­வரை நானே செயல்­பட்டேன். இக்­கால கட்­டத்தில் அர­சாங்க செலவில் 12 முறை ஹஜ் விட­யங்­க­ளுக்கு பொறுப்­பாக மக்கா சென்­றுள்ளேன். திணைக்­க­ளத்தின் மூலம் ஹஜ் குழுக்­களை மக்கா அழைத்துச் சென்­றுள்ளேன். பொறுப்­பான அமைச்­சர்­க­ளுடன் நெருங்கிப் பழ­கி­யுள்ளேன். இதனால் ஹஜ் ஒழுங்­கு­களில் எவ்­வாறு அர­சியல் புகுந்து விளை­யா­டி­யது என்­பது பற்றி நான் நன்கு அறிவேன்.

தற்­போது ஹஜ் கமிட்டி என்ற பெயரில் அமைச்­சரால் வெளி­யார்­க­ளைக்­கொண்டு நிய­மிக்­கப்­பட்ட ஒரு அமைப்பு செயல்­பட்டு வரு­வதைக் காணலாம். தற்­போ­துள்ள குழு­வினர் மஹிந்­தவின் ஆத­ர­வுடன் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர். இவர்கள் மஹிந்­தவின் தீவிர ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்­த­தனால் அவர்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் ஹஜ்ஜின் பலன்­களை அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் இவர்கள் மூலம் அனு­ப­விப்­ப­தற்­கா­கவும் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களே. ஹஜ்ஜின் அனைத்து விட­யங்­களும் இவர்­க­ளது மேற்­பார்­வை­யி­லேயே இடம்­பெ­று­கின்­றன. அர­சாங்க அமைச்­சர்கள் இவர்கள் மூலமே தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­கின்­றனர். அத்­தோடு இவர்­களும் இவர்­க­ளது சகாக்­களும் அரச நிதியில் வருடா வருடம் ஹஜ்ஜை நிறை­வேற்­றிக்­கொள்வர். ஹஜ் கமிட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பு திணைக்­களம் உரு­வாக்­கப்­ப­டுமுன் இருந்த ஒரு அமைப்­பாகும். திணைக்­களம் உரு­வாக்­கப்­பட்­ட­தன்பின் ஹஜ்ஜின் அனைத்து விட­யங்­க­ளையும் திணைக்­க­ளமே மேற்­கொண்டு வந்­தது.திணைக்­களம் முஸ்லிம் அமைச்சின் நேரடிக் கண்­கா­ணிப்பில் இருந்­த­போது ஹஜ் கமிட்டி என்ற ஒன்று இருக்­க­வில்லை. அக்­கா­லத்தில் திணைக்­க­ளத்­திற்கு தற்­போ­தை­வி­டவும் அதிக வேலைப்­ப­ளுக்கள் இருந்­தன. அக்­கா­லத்தில் சவூதி அரே­பிய தூத­ர­கம்­கூட இலங்­கையில் திறக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. வரக்­கூ­டிய இரண்டு சவூதி அதி­கா­ரி­க­ளை­வைத்து இரு வார­த்தில் ஏழு அல்­லது எட்­டா­யிரம் விசாக்­களை பதிவு செய்­ய­வேண்டும். தி­ணைக்­க­ளத்தில் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் ஒரு கிளையை திறந்து அதன் மூல­மாக கட­வுச்­சீட்­டுக்­களை வழங்­குதல். பய­ணி­க­ளுக்­கான பதி­னைந்­துக்கும் மேற்­பட்ட விமா­னங்­களை வாட­கைக்கு அமர்த்தி அதனை பங்­கீடு செய்தல் திணைக்­க­ளத்தின் ஏற்­பாட்டில் ஒரு குறிப்­பிட்ட தொகை­யி­னரை ஹஜ்­ஜுக்கு அழைத்துச் செல்லல் போன்ற ஒரு பாரிய வேலையை திணைக்­க­ளமே மேற்­கொண்­டது. ஆனால் இவ்­வா­றான பாரிய வேலைகள் தற்­போது திணைக்­க­ளத்­திற்கு இல்­லாது இருப்ப­தி­னாலும் ஹஜ் ஒழுங்­குகள் அனைத்தும் தற்­போது சவூதி அர­சாங்­கத்தால் இல­கு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தி­னாலும் திணைக்­களம் மாத்­திரம் இவ்­வே­லை­களை செய்­வ­தற்கு போது­மா­ன­தாகும். எனினும் ஹஜ் விட­யத்தில் நடை­பெறும் சீர்­கே­டு­களை களை­வ­தற்கு சேவை அடிப்­ப­டையில் ஒரு குழுவை அமைத்து மேற்­பார்வை செய்ய வைப்­பது சிறந்­த­தாகும்.

முன்பு ஹஜ் பய­ணி­க­ளுக்­கான கோட்­டாக்கள் சவூதி அர­சாங்­கத்­தினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. அக்­கா­லத்தில் நாம் ஹஜ்­ஜுக்­காக சுமார் ஏழு அல்­லது எட்­டா­யிரம் விசாக்­களை பதிவு செய்வோம். ஹஜ் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தனால் கடந்த பதி­னைந்து வரு­டங்­க­ளாக சவூதி அர­சாங்கம் மூன்று அல்­லது நான்­கா­யிரம் கோட்­டாக்­க­ளையே வழங்­கி­வ­ரு­கின்­றது. இதனை பகிர்ந்­த­ளிப்­பதில் நீண்ட கால­மாக பிரச்­சி­னைகள் இருந்­து­வ­ரு­கின்­றன. இதனால் முகவர் நிலை­யங்கள் நீதி­மன்றம் வரை செல்லும் நிலை ஏற்­பட்­டன. இதனை ஆரம்­பத்தில் சில அமைச்­சர்கள் தன் விருப்­பப்­படி பகி­ர்ந்­த­ளித்­தனர். ஒரு அமைச்சர் அதற்­கான லிஸ்டை வீட்டில் வைத்­துக்­கொண்டு இன்­னா­ருக்கு இன்ன தொகையை வழங்­குங்கள் என உத்­த­ரவு போட்­டுக்­கொண்­டி­ருப்பார். இன்னும் சில சந்­தர்ப்­பங்­களில் குழு அமைத்து அதன் சிபா­ரிசின் அடிப்­ப­டையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன. எது எப்­படி இருப்­பினும் இதற்­கான எடு­கோள்­களை அமைப்­பதில் பிரச்­சினை இருப்­ப­தினால் இன்று வரை முகவர் நிலை­யங்­க­ளுக்­கி­டையில் கோட்டா பங்­கீடு செய்­வதில் பிரச்­சி­னைகள் இருந்­து­கொண்டே இருக்­கின்­றன. கோட்டா பங்­கீட்டின் அடிப்­ப­டை­யி­லேயே தமது இலாபம் தங்கி இருப்­பதால் முக­வர்கள் இதற்­காக அமைச்­சர்­க­ளையும் அதி­கா­ரி­க­ளையும் நாடு­வதன் மூலம் பல ஒழுங்­கீ­னங்கள் இடம்­பெ­று­கின்­றன. எனது அனு­மா­னப்­படி ஒரு முகவர் நிலையம் ஒரு கோட்­டாவின் மூலம் இரண்டு இலட்சம் ரூபாய்க்கும் மேற்­பட்ட இலா­பத்தை அடை­கின்­றனர்.

அதனால் கோட்டா பங்­கீட்டில் முகவர் நிலை­யங்கள் மிகவும் கண்­டிப்­பாக இருப்பர். அதேபோல் அமைச்­ச­ருக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் இருக்கும் ஒரே துரும்பு இது­வாக இருப்­ப­தினால் அவர்­களும் இது விட­யத்தில் கண்­டிப்­பாக இருப்பர். எனவே இதற்­குள்ள ஒரே பரி­காரம் என்­ன­வென்றால் கோட்­டாவை அமைச்­சரோ அல்­லது அதி­கா­ரி­களோ பிரிக்­காமல் அது தானா­கவே பிரிந்­து­போகும் வழி­மு­றை­யைச்­செய்­வ­தாகும். அதா­வது பதிவு செய்­யப்­பட்ட முகவர் நிலை­யங்­க­ளையும் அவர்­க­ளது கட்­டணம் சேவை என்­ப­ன­வற்றை பத்­தி­ரி­கையில் பிர­சு­ரித்து தமக்கு விருப்­ப­மான முக­வர்­க­ளுடன் இணைந்து அவர்­க­ளது கட­வுச்­சீட்­டுக்­களை முகவர் நிலை­யத்­திடம் ஒப்­ப­டைக்­கச்­செய்தல் வேண்டும். அக்­க­ட­வுச்­சீட்­டுக்­களை குறிப்­பிட்ட திக­திக்கு முன் திணைக்­க­ளத்தில் ஒப்­ப­டைக்­கச்­செய்து அதன் அடிப்­ப­டையில் கோட்டா வழங்­கப்­ப­டும்­போது பிரச்­சி­னை­களை தவிர்க்­கலாம். ஒரு முகவர் நிலையம் நூறு கட­வுச்­சீட்­டுக்கு மேல் கைய­ளிக்க முடி­யாது என வரம்­பி­டப்­பட்டால் கோட்டா எல்­லோ­ருக்கும் பிரிந்து போகக்­கூ­டி­ய­தாக இருக்கும். கட­வுச்­சீட்­டுக்கள் குறை­வாக பெற்ற முகவர் நிலை­யங்­களை ஒன்­றோ­டொன்று இணைத்து விடு­வதன் மூலம் பிரச்­சி­னை­க­ளுக்கு பரி­காரம் காணலாம்.

திணைக்­க­ளத்தில் ஹஜ் முகவர்­க­ளாக பதிவு செய்­து­கொள்­வதில் நீண்ட கால­மாக மக்கள் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­கின்­றனர். இதற்­காக அமைச்­சர்கள் மற்றும் அதி­கா­ரி­களின் பின்னால் திரி­வதை காணக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.

உல்­லாச பிர­யா­ணிகள் சபையில் இலே­சாக பதி­யக்­கூ­டி­ய­தாக இருக்­கும்­போது திணைக்­க­ளத்தில் கடி­ன­மா­ன­தாக இருப்­ப­தாக கூறுவர். இது­வொரு திறந்த பொரு­ளா­தார கொள்­கை­யுள்ள நாடு. எனவே திணைக்­க­ளத்தால் வேண்­டப்­படும் தகு­தி­யுள்ளோர் அனை­வ­ருக்கும் வழங்­கப்­படல் வேண்டும். அதில் ஒரு கட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக பதி­வுக்­கட்­டணம் மற்றும் உத்­த­ர­வாத வைப்பு போன்­ற­வற்றில் அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்­தலாம்.

திணைக்­கள விட­யத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அக்­கறை இருப்­ப­தில்லை. ஹஜ் காலத்தில் மாத்­திரம் அவர்­க­ளுக்­கி­டையில் போட்­டி­யிட்­டுக்­கொண்டு அவரும் அவ­ரது கையாட்­களும் ஹஜ்ஜின் பயன்­களை அனு­ப­வித்­து­விட்டு அடுத்த வரு­டம்தான் அங்கு தலை காட்­டுவர். முஸ்லிம் திணைக்­க­ளத்­திற்கு இதற்­குமுன் பொறுப்­பாக இருந்த முன்னாள் அமைச்சர் அவ­ரது தொகு­தியில் அவ­ருக்­காக உழைத்த அதி­க­மா­னோரை திணைக்­கள நிதி­யின்­மூலம் ஹஜ்­ஜுக்கு அனுப்­பி­வைத்தார். இது போன்று பல முஸ்லிம் அமைச்­சர்கள் ஹஜ்ஜை தமது சொந்த நல­னுக்­காக பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். திணைக்­க­ளத்தில் இயங்கும் வக்ப் பகுதி திணைக்­களம் உரு­வா­குமுன் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். ஆனால் அது அன்­று­தொட்டே இன்று வரை எவ்­வித அபி­வி­ருத்­தியும் இன்றி காணப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் திணைக்­க­ளத்­திற்கு வரும் உயர் அதிகாரிகளில் பெரும்­பா­லானோர் ஹஜ்ஜை நோக்­க­மாகக் கொண்டே அங்கு வரு­கின்­றனர். வந்த முதல் ஆண்டில் அவர் ஹஜ் செய்வார் அடுத்த ஆண்டு குடும்பத்துடன் ஹஜ் செய்துவிட்டு மூன்று ஆண்டுகளில் அங்கிருந்து கழன்றுவிடுவார். இச்சந்தர்ப்பத்தில் திணைக்களத்தின் மேம்பாட்டுக்காக உழைத்த பணிப்பாளர்களான மர்ஹூம் எம்.எம்.அன்சார் யு.எல்.எம். ஹால்தீன் போன்றோர்களது சேவைகள் நினைவு கூறத்தக்கதாகும். புதிய தற்போதைய அரசாங்கத்தின் கொள்­கைப்­படி இவைகள் அனைத்தும் சீர் செய்­யப்­பட வேண்­டி­ய­வை­க­ளாகும். எதிர்­கா­லத்தில் அநே­க­மாக முஸ்லிம் திணைக்­களம் சமய கலா­சார அமைச்சின் கீழ்தான் செயல்­பட வேண்­டிய நிலை இருக்கும். எனவே இந்த அர­சாங்­கத்­தோடு இணைந்து செயல்­படும் முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் இவ்­வி­ட­யங்­களை கவ­னத்­திற்­கொண்டு திணைக்­கள விட­யத்தில் ஒரு மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வழி­செய்­வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.