சமய இன நல்லிணக்க ஆர்வலர் கணித ஆசிரியர் எம்.எச்.எம். நியாஸ்

0 14

எம்.எச்.எம்.ஹஸன்,
உதவிப் பொதுச் செயலாளர்,
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி

விடிவெள்ளிப் பத்திரிகையில் நீண்ட காலமாக சிங்கள கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வந்த மாத்­தளை உக்­கு­வ­ளையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட ஓய்வு பெற்ற கணித ஆசி­ரியர் எம்.எச்.எம். நியாஸ் அவர்கள் 2024.10.10ஆம் திகதி கால­மானார்.

சிங்­கள மொழியில் புலமை வாய்ந்த நியாஸ் சேர் அவர்கள் இலங்கை ஜமா­அத்தே இஸ்­லா­மியின் நீண்ட கால அங்­கத்­தவர். ஜமா­அத்தே இஸ்­லாமி மேற்­கொண்ட சிங்­கள மொழி­யி­லான சகல முயற்­சி­களின் போதும் முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு வழங்­கி­யவர். ‘பிர­போ­தய’ சஞ்­சி­கையின் துணை ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றி­யவர். ‘தப்­ஹீமுல் குர்ஆன்’ என்ற தப்ஸீர் சிங்­கள மொழிக்கு பெயர்க்­கப்­ப­டு­கின்ற பணியில் நீண்ட கால­மாக மர்ஹூம் ஏ.எல்.எம்.
இப்­ராஹிம் மௌலவி அவர்­க­ளோடு இணைந்து பணி­யாற்­றி­யவர். தர்­ஜ­ுமதுல் குர்ஆன் சிங்­கள மொழிபெயர்ப்புப் பணி­யிலும் தொடர்ந்து ஈடு­பட்­டவர். சிங்­கள மொழியில் இஸ்­லாத்தை முன்­வைக்­கின்ற பல பணி­களில் அவர் தன்னை ஈடு­ப­டுத்திக் கொண்­டவர். புதி­தாக இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொள்­கின்­ற­வர்­க­ளுக்கு வாழ்­வா­தாரம் வழங்கி குடும்ப வாழ்க்­கை­யிலே ஈடு­ப­டு­வ­தற்கு உதவி செய்து பல்­வேறு வகையில் ஒத்­து­ழைத்­தவர்.

நியாஸ் மாஸ்­ட­ரு­டைய தந்தை கல்­லோயா அபி­வி­ருத்தி சபையில் ஒரு உத்­தி­யோ­கத்­த­ராக பணி­யாற்­றி­யதன் கார­ண­மாக அம்­பா­றையில் அவ­ரு­டைய குடும்பம் நீண்ட காலம் குடி­யி­ருந்­தது. அந்த வகையில் அம்­பா­றையில் சிங்­கள மொழி பாட­சா­லையில் ஜி.சி.ஈ. சாதா­ரண தரம் வரை கற்ற அவர் பின்னர் ஆசி­ரியர் நிய­மனம் பெற்று அட்­டா­ளைச்­சேனை ஆசி­ரியர் பயிற்சி கல்­லூரியில் கணிதத் துறையில் பயிற்சி பெற்றார். ஆசி­ரியர் பயிற்சி கலாசா­லையில் பயி­லு­ன­ராக இருக்கும் காலத்­தி­லேயே ஒரு சமூக செயற்­பாட்­டா­ள­ராக இனம் காணப்­பட்டார். கல்­லூ­ரியில் ஏற்­பட்ட அர­சியல் தலை­யீடு நிலை­மை­களின் போது மாண­வர்­க­ளோடு இணைந்து போரா­டி­யதன் விளை­வாக’ கொமைனி’ என்ற சிறப்பு பெயரால் அழைக்­கப்­பட்டார்.

உக்­கு­வ­ளையில் இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி வேரூன்­று­வ­தற்கும் வளர்­வ­தற்கும் பல­ருடன் இணைந்து பணி­யாற்­றிய நியாஸ் ஆசி­ரியர் அவர்கள் சிங்­கள மொழி­யிலும் தமிழ் மொழி­யிலும் இஸ்­லாத்தை முன்­வைக்­கின்ற பணி­யிலே நீண்ட கால­மாக ஈடு­பட்டார்.

சர்வ சமய அமைப்­பு­க­ளோடும் நல்­லி­ணக்க குழுக்­க­ளோடும் பௌத்த, கத்­தோ­லிக்க, ஹிந்து குரு­மார்­க­ளோடும் ஏனைய பல்­வேறு அமைப்­பு­க­ளோடும் நீண்ட கால­மாக பணி­யாற்­றினார். சர்வ சமய அமைப்பின் உதவிச் செய­லா­ள­ரா­கவும் அதன் நிறை­வேற்று நிர்­வாக குழு அங்­கத்­த­வ­ரா­கவும் இலங்கை பூராவும் நடை­பெ­று­கின்ற கூட்­டங்­களில் ஆர்­வ­மாக கலந்து கொண்­டி­ருந்தார்.

இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமி மொழி­பெ­யர்த்து வெளி­யிட்ட பல சிங்­கள நூல்­களின் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் அவற்றின் ஒப்பு நோக்­கு­ன­ரா­கவும் மட்­டு­மல்­லாமல் பிர­சு­ரங்­களை சரி­பார்த்து மொழி­யாக்கம் செய்து மீள் பிர­சு­ரத்­துக்கு தயா­ரிப்­ப­வ­ரா­கவும் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பைச் செய்தார். லங்கா தீப பத்­தி­ரி­கையில் தொடர்ந்து கட்­டு­ரை­களை எழுதி வந்தார். குறிப்­பாக தமிழ் மொழி பத்­தி­ரி­கை­களில் வரு­கின்ற விட­யங்­களை அடி­யொட்­டி­ய­தாக தமிழ் மக்­களின் குரலை பிர­தி­ப­லிப்­ப­தாக அவ­ரு­டைய சிங்­கள கட்­டு­ரைகள் அமைந்­தி­ருந்­தன. பிர­போ­தய மாதாந்த சஞ்­சி­கை­யிலும் தமிழ் தேசிய பத்­தி­ரி­கை­க­ளிலும் அவர் பல கட்­டு­ரை­களை எழு­தினார். அவர் அரசு அங்­கீ­காரம் பெற்ற ஒரு மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றினார்.

1996 ஆம் ஆண்டில் ஆசி­ரியர் சேவை­யி­லி­ருந்து ஓய்வு பெற்று இலங்கை ஜமா­அத்தே இஸ்­லாமியின் முழு நேர ஊழி­ய­ராக இணைந்து கொண்டார். ஆரம்­பத்தில் ஐபிசி அச்­ச­கத்தில் பணி­யாற்­றிய அவர் பின்னர் ஜமா­அத்தின் சிங்­கள மொழி பகு­தியில் இணைந்து பல்­வேறு காத்­தி­ர­மான பணி­களை ஆற்­றினார்.
அவ­ரு­டைய பங்­க­ளிப்­பினால் பல சிங்­கள புத்­த­கங்கள், கட்­டு­ரைகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. கொள்கைப் பிடிப்பும் அர்ப்­பண சிந்­தையும் அய­ராத உழைப்பும் தியாக மனப்­பாங்கும் இனி­மை­யாக பழ­கு­கின்ற சுபா­வமும் அவ­ரு­டைய தனிப் பண்­பு­க­ளாக இருந்­தன. எடுத்த வேலையை உரிய நேரத்தில் நேர்த்­தி­யாக முடிப்­பது அவ­ரு­டைய மற்­றொரு சிறப்பு பண்­பாக இருந்­தது. இறு­திக்­கா­லத்தில் சிங்­கள தர்­ஜு­மாவை மீள் பதிப்பு செய்­வ­தற்­காக அச்சுப் பிழைகள் மற்றும் இனங்­கா­ணப்­பட்ட பிழை­களை திருத்தும் பணி­யிலே தன்னை ஈடு­ப­டுத்தி முழு தர்­ஜ­மா­வையும் ஒரு­முறை வாசித்து சரி பார்த்து நிறைவு செய்து கொடுத்தார். ஜமா­அத்தே இஸ்­லா­மியின் தலை­மை­ய­கத்தில் தங்கி இருந்த காலத்தில் அங்­கி­ருந்த ஊழி­யர்­க­ளுக்கு சிங்­கள மொழியை கற்­பிப்­ப­திலும் சில காலம் ஈடு­பட்டார்.

தெஹி­வ­ளையில் சில காலம் இயங்­கிய இஸ்­லா­மிய புத்தக நிலையத்தின் கிளையிலும் அவர் பணியாற்றினார்.

மார்க்க விழுமியங்களை பேணி மிகவும் எளிமையாக தனது வாழ்க்கையை ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக அமைத்துக் கொண்ட எம்.எச்.எம். நியாஸ் அவர்களது பாவங்களை அல்லாஹுத்தஆலா மன்னித்து அவருக்கு உயர்ந்த ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சுவனத்தை வழங்க நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.

அவ­ரு­டைய குடும்­பத்­த­வர்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் வல்ல அல்லாஹ் அழ­கிய பொறு­மையை வழங்கி வைப்பானாக. ஆமீன்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.