கருத்துச் சுதந்திரத்தை கருவறுக்க பயன்படுத்தப்படும் ஐ.சி.சி.பி.ஆர்.

0 402

எம்.பி.எம்.பைறூஸ்

இலங்­கையைப் பொறுத்­த­வரை ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் இது­வரை பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் பெரும்­பா­லானோர் மீது இச் சட்­ட­மா­னது தவ­றான முறையில் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக பல்­வேறு முறைப்­பா­டுகள் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

மஹி­யங்­க­னையில் தர்­மச்­சக்­கர வடி­வி­லான ஆடையை அணிந்த மஸா­ஹினா எனும் பெண் ஒருவர் கைது செய்­யப்­பட்­டமை, புனை­கதை ஒன்றில் பௌத்த பிக்­குகள் குறித்து எழு­தி­ய­மைக்­காக சிங்­கள நாவ­லா­சி­ரியர் ஷக்­திக்க ஷத்­கு­மார கைது செய்­யப்­பட்­டமை, சமூக செயற்­பாட்­டாளர் ரம்ஸி ராஸிக் அவ­ரது பேஸ் புக் பதி­வொன்­றுக்­காக கைது செய்­யப்­பட்­டமை, தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் ஆளு­ந­ரு­மான அசாத் சாலி கைது செய்­யப்­பட்­டமை உட்­பட மேடை நகைச்­சுவை நிகழ்ச்­சியில் மதங்­களை அவ­ம­தித்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு நடாஷா எதி­ரி­சூ­ரிய கைது செய்­யப்­பட்­டமை மற்றும் அதனை தனது யூ டியூப் பக்­கத்தில் பதி­வேற்­றி­ய­மைக்­காக யூ டியூப் செயற்­பாட்­டாளர் ப்ரூனோ திவா­கர கைது செய்­யப்­பட்­டமை என பல சம்­ப­வங்கள் சம்­ப­வங்கள் இலங்­கையில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் பிர­யோ­கிக்­கப்­பட்­ட­மைக்கு உதா­ர­ணங்­க­ளாகும்.

இந் நிலையில் 2019.08.29 திக­தி­யிட்டு மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் தலை­வரால், பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட கடித்தில் ஐ.சி.சி.பி.ஆர். சட்டம் தவ­றான முறையில் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வது தொடர்பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. குறித்த கடித்தில் மேற்­படி சட்­டத்தைப் பிர­யோ­கிப்­ப­தற்­கான விரி­வான வழி­காட்­டல்­க­ளையும் மனித உரி­மைகள் ஆணைக்­குழு வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் நோக்கம் யுத்தம் அல்­லது இனம், மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட விரோ­த­மான நிலைப்­பாட்டை ஊக்­கு­விக்கும் நட­வ­டிக்­கைகள் அல்­லது அவற்றை ஊக்­கு­விக்கும் செயற்­பா­டுகள் என்­ப­வை­களைச் செய்­த­லா­காது என்­ப­தாகும். எனினும் இலங்­கையில் இச் சட்டம் மேற்­படி குற்­றங்­களை இழைத்­த­வர்கள் மீது பிர­யோ­கிக்­கப்­ப­டாது, சட்­டத்­துக்குப் புறம்­பான வகையில் பலர் மீது பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் தொடர்­பான சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையை (ஐ.சி.சி.பி.ஆர்) பயன்­ப­டுத்தும் விதம் தொடர்­பாக இலங்­கையில் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரிகள் நீண்­ட­கா­ல­மாக விமர்­ச­னங்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். இந்த சட்டம் பல ஆண்­டு­க­ளாக பல சர்ச்­சைக்­கு­ரிய கைது­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக அமைந்­த­தா­கவும் பேச்சு மற்றும் கருத்து சுதந்­தி­ரத்தை மீறும் வகையில் இச் சட்­டத்தை பொலிசார் பயன்­ப­டுத்­து­கி­றார்­களா என்றும் பலர் கேள்வி எழுப்­பு­கின்­றனர்.

இலங்­கையில் யுத்­தத்தின் பின்னர் இன, மத பதற்­றங்­களைத் தூண்டும் வித­மான வெறுப்புப் பேச்சு உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக பாரிய இன வன்­மு­றை­களும் நடந்து முடிந்­துள்­ளன. எனினும் இவற்றைக் கட்­டுப்­ப­டுத்தும் விதத்தில் இச் சட்டம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை.

குறிப்­பாக உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு, நாட்டில் இன, மத பதற்­றங்­க­ளைத தோற்­று­விக்கும் வகையில் நடந்து கொண்ட சிலர் மீது ஐ.சி.சி.பி.ஆர். சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு சிபா­ரி­சு­களை முன்­வைத்­தி­ருந்­தது. எனினும் இந்த சிபா­ரிசு இது­வரை அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக எந்­த­வித குற்­றங்­க­ளையும் இழைக்­காத அல்­லது சாதா­ரண சட்ட விதி­களின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் பிர­யோ­கிக்­கப்­பட்­டமை ஆதா­ர­பூர்­வ­மாக நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

 

அத்­துடன் இச் சட்­ட­மா­னது தம்­மீது தவ­றான முறையில் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறி மஹி­யங்­க­னையைச் சேர்ந்த மஸா­ஹினா மற்றும் நாவ­லா­சி­ரியர் ஷக்­திக்க ஷத்­கு­மார ஆகியோர் உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களைத் தாக்கல் செய்­துள்­ளனர். அதே­போன்று பிர­பல யூடியூப் பதிவர் ப்ரூனோ திவாகர் கடந்த வாரம் தன்னை ஐசி­சி­பிஆர் சட்­டத்தின் கீழ் கைது செய்த குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு எதி­ராக வழக்குத் தொடர்ந்­துள்ளார். இதன் மூலம் தனக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்­காக 50 மில்­லியன் ரூபா நஷ்­ட­யீடு தரு­மாறும் கோரி­யுள்ளார்.

சட்ட அமு­லாக்க அதி­கா­ரிகள், குறிப்­பாக குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (CID) மற்றும் பயங்­க­ர­வாதப் புல­னாய்வுப் பிரிவு (TID) ஆகி­யன சமூக ஊட­கங்­களில் போலிப் பதி­வு­களைப் பகிர்ந்­த­தற்­காக மேற்­கொண்ட கைதுகள் பயங்­க­ர­வாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் ICCPR சட்­டத்­தோடு தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

ICCPR சட்டம், ஒவ்­வொரு தனி­ந­ப­ரி­னதும் கண்­ணி­யத்தை அங்­கீ­க­ரிப்­ப­தோடு நாடு­க­ளினுள் திருப்­தி­யான முறையில் குடி­யியல் மற்றும் அர­சியல் உரி­மைகள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­தவும் செய்­கின்­றது.

எழுத்­தாளர் சக்­திக சத்­கு­மார
33 வய­தான பின்-­ந­வீ­னத்­துவ நாவ­லா­சி­ரி­ய­ரான சத்­கு­மார, இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யாவார், பௌத்த மத­கு­ரு­மார்கள் சம்­பந்­தப்­பட்ட பாலியல் துஷ்­பி­ர­யோகம் மற்றும் சிறு­வர்­களை பாலியல் தேவைக்கு பயன்­ப­டுத்­து­வது பற்றி அவர் எழு­திய சிறு­க­தையால் பொல்­க­ஹ­வெ­லயைச் சேர்ந்த பௌத்த துற­விகள் குழு ஒன்று கோப­ம­டைந்­ததை அடுத்து 2019 ஏப்ரல் மாத ஆரம்­பத்தில் கைது செய்­யப்­பட்டார். குறித்த சிறு­கதை பௌத்­தத்தை அவ­ம­திப்­ப­தாக சத்­கு­மார மீது குற்றம் சாட்­டப்­பட்­டது.

சக்­திக சத்­கு­மார பொல்­க­ஹ­வெல பொலி­சாரால் 2019 ஏப்­பிரல் 01 திகதி கைது செய்­யப்­பட்டு, 2019 ஒகஸ்ட் 08 பிணையில் விடு­விக்­கப்­பட்டார். பொல்­க­ஹ­வெல காவல்­து­றையின் கவ­ன­யீனம் கார­ண­மாக அவ­ருக்கு 130 நாட்கள் சிறை­வாசம் அனு­ப­விக்க நேர்ந்­த­துடன், சுமார் பத்து மாதங்கள் வேலையை இழக்க நேரிட்­டது.

சட்ட மா அதி­பரால் வழக்கு தொடர்­வ­தற்­கான உரிய காரணம் ஏதும் இல்லை என பொல்­க­ஹ­வெல மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டதை தொடர்ந்து கடந்த 2021 பெப்­ர­வரி 09 ஆம் திகதி சக்­திக சத்­கு­மா­ராவை நிர­ப­ராதி என தீர்ப்­ப­ளித்து வழக்கு முடி­வுக்கு வந்­தது. முக­நூலில் பதி­விட்ட சிறு­கதை சம்­பந்­த­மாக காவல் நிலை­யத்­துக்கு கிடைக்­கப்­பெற்ற புகாரே இவ்­வ­ளவு அநீ­தி­களும் அவ­ருக்கு நிகழ வழி­வ­குத்­தது. கலை மற்றும் இலக்­கிய நூல்கள், எழுத்­தா­ளர்கள் மற்றும் சுதந்­திர ஆர்­வ­லர்கள் சம்­பந்­த­மாக முறைப்­பா­டுகள் கிடைக்க பெறும் தரு­னங்­களில் முறை­யான ஆய்வு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டதன் பின்­னரே உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும் என்­பதை தமது கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரு­வ­துடன் மற்றும் கருத்து சுதந்­தி­ரத்தை மீறி அதை சவா­லுக்கு உட்­ப­டுத்தி சக்­திக சத்­கு­மா­ரவை கைது செய்த சந்­தர்ப்­பத்­திலும் அச்­செ­யற்­பாட்டை கண்­டித்து சுதந்­திர ஊட­க­இ­யக்கம் தமது கண்­டன அறிக்­கை­யொன்றை வெளி­யிட்­டி­ருந்­தது. ஆனாலும் இன்னும் அந்த தர்க்க ரீதி­யற்ற நடை­முறை தொடர்ந்து கொண்டே செல்­கின்­றதை பார்க்க கூடி­ய­தாக உள்­ளது.

மஸா­ஹினா
ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து, நாட்டின் பல பகு­தி­களில் அச்­சமும் சந்­தே­கமும் பர­விய நிலையில், முஸ்லிம் சமூகம் மோச­மான பின்­ன­டைவை எதிர்­கொண்ட நிலையில், மஹி­யங்­க­னையைச் சேர்ந்த 47 வய­தான ஒரு பிள்­ளையின் தாயான மஸா­ஹினா, மே மாதம் 17 ஆந் திகதி கைது செய்­யப்­பட்டார். கப்­பலின் சுக்கான் வடிவம் பொறிக்­கப்­பட்ட கப்டான் ஆடையில் தர்மச் சக்­கரம் பொறிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாகத் தவ­றாகக் கரு­திய பொலிஸ் அதி­கா­ரி­யினால் அதே சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டார். மஸா­ஹினா கைது செய்­யப்­படும் போது அந்த ஆடையில் உள்ள சின்னம் தர்­மச்­சக்­க­ரத்தை ஒத்­தி­ருக்­கி­றது என்ற சிறு எண்ணம் கூட அவ­ருக்கு இருக்­க­வில்லை. முந்­தைய வரு­டத்தில் தான் வேலை செய்த குவைத்தில் உள்ள தனது வீட்டு உரி­மை­யா­ள­ரான பெண்­ம­ணியால் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்ட அதே ஆடை­யி­னையே அவர் அணிந்­தி­ருந்தார். குண்டு வெடிப்­புக்குப் பிறகு அனைத்தும் மாறி­விட்­டன.

மஸா­ஹினா கைது செய்­யப்­பட்ட நாள் காலை பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து பல முறைப்­பா­டுகள் கிடைத்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். அன்று காலை மஸா­ஹினா ஒரு­வங்­கிக்குச் சென்றார், கடைக்குச் சென்று பொருட்­களை வாங்­கி­விட்டு முச்­சக்­கர வண்­டியில் வீடு திரும்­பினார்.

மஸா­ஹினா சம்­பவம் நடந்த ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­றி­ருந்தார். பொலிஸ் நிலை­யத்தில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போது, சிங்­க­ளத்தில் பேச முடி­யாத நிலையில் காணப்­பட்டார். சிங்­கள மொழியில் எழு­தப்­பட்ட ஒரு அறிக்­கையில் கையெ­ழுத்­திட வற்­பு­றுத்­தப்­பட்­ட­தாக அடிப்­படை உரிமை மீறல் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பின்னர் அவ­ருக்கு பிணை வழங்­கப்­பட மாட்­டாது எனவும், இந்த வழக்கு மஹி­யங்­கனை நீதவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யினால் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் எனவும் அவ­ரது குடும்­பத்­திற்கு அறி­விக்­கப்­பட்­டது. விளக்­க­ம­றியல் என்­பது அந்த முஸ்லிம் பெண் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டமை அவ­ருக்கு பெரும் சோத­னை­யாக அமைந்­தது. அவர் பதுளை சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த போது, பௌத்த மதத்தை அவ­ம­தித்­த­தாக கைதிகள் மற்றும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களால் அச்­சு­றுத்­தப்­பட்டார்.

இவ்­விரு சம்­ப­வங்கள் தொடர்பில் கருத்து வெளி­யிட்ட சட்­டத்­த­ர­ணியும் மனித உரிமை ஆர்­வ­ல­ரு­மான ஜெஹான் குண­தி­லக்க, “ஐசி­சி­பிஆர் சட்­டத்தின் பிரிவு 3(1) முக்­கி­ய­மாக தேசிய, இன அல்­லது மத குழுக்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றையைத் தூண்டும் நபர்­களை பொறுப்­புக்­கூறச் செய்யும் வகையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது, ஆனால் அவ்­வாறு தூண்­டிய எந்த ஒரு நபரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை. அளுத்­கம, திகன அல்­லது குரு­நா­கலில் வன்­மு­றையைத் தூண்டும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட எவரும் இச் சட்­டத்தின் கீழ் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை என அவர் தெரி­வித்தார்.

“எனவே, சட்­டத்தின் இந்தப் பிரிவின் பின்­ன­ணியில் உள்ள முக்­கிய நோக்கம் இன்­று­வரை அடை­யப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும், பௌத்த மத­கு­ரு­மார்­களை இழி­வு­ப­டுத்தும் வகையில் புனை­கதை ஒன்றை எழு­தி­ய­தற்­காக சத்­கு­மார போன்ற ஒரு எழுத்­தா­ளரை கைது செய்து சிறையில் அடைக்க இந்தப் பிரிவு பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஐசி­சி­பிஆர் சட்டம் வெறும் குற்றம் அல்­லது அவ­ம­திப்­பு­களைக் கையாள்­வ­தில்லை. மிகப் பெறு­ம­தி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டிய சட்டப் பிரிவை, அந்தச் சட்­டத்தின் கீழ் வராத ஒரு நோக்­கத்­திற்­காக துஷ்­பி­ர­யோகம் செய்யும் ஒரு சோக­மான வழக்கு இது­வாகும்” என அவர் விளக்­கினார்.

ரம்ஸி ராசிக்
கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி, பேஸ்புக் சமூக வலைத்­த­ளத்தில் தான் எழு­திய கட்­டு­ரையில், அனைத்து இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எதி­ராக முஸ்­லிம்கள் சிந்­தனா ரீதி­யான போராட்டம் (Ideological Jihad) ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும் என அழைப்பு விடுத்­தி­ருந்தார். இதனைத் தொடர்ந்து ரம்ஸி ராசிக்­கிற்கு முகநூல் வாயி­லாக உயிர் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டன.

2020 ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இவர் பொலி­ஸா­ரிடம் தனக்கு விடுக்­கப்­படும் மிரட்­டல்­களைக் குறித்து முறை­யிட்டார். ஆனால், இந்த மிரட்­டல்­களைக் குறித்து விசா­ரணை செய்­யாமல் பொலிஸார் ராஸிக்கை கைது செய்­தனர். இது குறித்து விசா­ரணை செய்த சி.ஐ.டி., ரம்ஸி ராசிக்கை நீதிவான் நீதி­மன்­றத்­துக்கு பிணை அளிக்கும் அதி­கா­ர­மற்ற சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பட்டு சட்­டத்தின் கீழ் மன்றில் ஆஜர் செய்­தி­ருந்­தது.

‘எந்­த­வொரு பயங்­க­ர­வாத அமைப்பும் ஆரம்­பத்தில் மக்­களின் மன­நி­லையை மாற்­றவே முயற்­சிப்­ப­தா­கவும், ரம்ஸி ராஸிக்கும் அவ்­வா­றான சில சொற்­களைப் பயன்­ப­டுத்தி இனங்­க­ளுக்கு இடையே குரோதம் ஏற்­படும் விதத்­தி­லான சமூக வலைத்­தள பதி­வு­களை அனை­வரும் பார்க்­கும்­ப­டி­யாக பதி­விட்டு வந்­துள்ளார்” என சி.ஐ.டி.யின் விசா­ரணை அதி­கா­ரிகள் நீதிவான் நீதி­மன்­றத்தில் தொடர்ச்­சி­யாக கூறினர்.

இந் நிலை­யி­லேயே ரம்ஸி ராசிக் சார்பில் மன்றில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன், ரம்ஸி ராசிக் தொடர்பில் கொழும்பு மேல் நீதி­மன்றில் பிணை மனு­வினை தாக்கல் செய்­தி­ருந்தார். இம் மனு விசா­ர­ணைக்கு வந்­த­போது, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்த பட்­ட­பெத்தி முன்­னி­லையில், இந்த விவ­காரம் தொடர்­பிலும் பொலிஸார் செயற்­பட்­டுள்ள விதம் தொடர்­பிலும் சுட்­டிக்­காட்டி பிணை கோரினார். ‘எனது சேவை பெறுநர் கைது செய்­யப்­பட கார­ண­மாக கூறப்­படும் பதிவு, இனங்­க­ளுக்கு இடையே குரோ­தத்தை ஏற்­ப­டுத்தும் வித­மான பதி­வொன்று அல்ல. குறித்த பதிவு முஸ்­லிம்கள் வன்­மு­றை­களை நோக்கி செல்லக் கூடாது என்­ப­தையே வேண்­டு­வ­தாக உள்­ளது. சொற்­க­ளை­யன்றி முழு­மை­யான கருத்­தையே பார்க்க வேண்டும். சிந்­தனா ரீதி­யி­லான போராட்டம் என்­பது ஆயுதப் போராட்­டங்கள் அல்ல. கருத்­துக்­களால் மோது­வ­தையே அது குறிக்­கின்­றது. இது யுத்­தத்தை தூண்டும் பதி­வல்ல. அப்­ப­டி­யாக இருக்கும் போது எனது சேவை பெறு­நரின் கருத்தை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­திக்­கொண்டு அவரைக் கைது செய்­துள்­ளமை தவ­றா­ன­தாகும்” என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.ஏ. சுமந்­திரன் நீதி­மன்றைக் கோரினார்.

இத­னை­ய­டுத்து திறந்த மன்றில் பிணை வழங்க அனு­ம­தித்த நீதி­பதி ஆதித்த பட்­ட­பெந்தி, தனது பிணை உத்­த­ரவில் பின்­வ­ரு­மாறு சுட்­டிக்­காட்­டினார். ‘சிவில் அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச சட்டம் இலங்­கையில் அமுல் செய்­யப்­பட்­டதன் நோக்கம், சர்­வ­தேச ரீதியில் உள்ள அடிப்­படை உரி­மை­களை இலங்கை மக்­க­ளுக்கும் உறுதி செய்­வ­தாகும். அப்­ப­டி­யாயின் அவ்­வா­றான உரி­மை­களில், சுதந்­தி­ரங்­களில் கருத்து சுதந்­திரம் மிக முக்­கி­ய­மா­னது. ஒருவர் பேனை, கணி­னியைக் கொண்டு போரா­டு­வது என்­பது,கருத்­துக்கள் சார்ந்து முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கையே. அதற்கு வித்­தி­யா­ச­மான பொருட்­கோடல் கொடுப்­பது தவ­றா­ன­தாகும். குறித்த சொல்­லுக்­கான பொருட் கோடல் குறித்து சாட்சி விசா­ர­ணையின் போதே உரிய தீர்­மா­னங்கள் எடுக்க வேண்டும். எனவே சந்­தேக நப­ருக்கு பிணை­ய­ளிக்க இந்த நீதி­மன்றம் தீர்­மா­னிக்­கின்­றது” என நீதி­பதி அறி­வித்தே பிணை வழங்­கி­யி­ருந்தார். இதற்­க­மைய சுமார் 161 நாட்கள் சிறை­வா­சத்தின் பின்னர் ரம்ஸி ராசிக் பிணையில் விடு­விக்­கப்­பட்டார்.

ரம்­ஸிக்கு நஷ்­ட­யீடு செல்­லு­மாறு
உயர் நீதி­மன்றம் தீர்ப்பு
தான் கைது செய்­யப்­பட்­டதன் மூலம் தனது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறி ரம்ஸி ராசிக் உயர் நீதி­மன்­றத்தில் அடிப்­படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தார். இது குறித்து விசா­ரித்த மன்று சமூக செயற்­பாட்­டாளர் ரம்ஸி ராசிக் கைது செய்­யப்­பட்­டமை, தடுத்து வைக்­கப்­பட்­டமை சட்­ட­வி­ரோ­த­மா­னது எனவும் அது அவ­ரது அடிப்­படை உரி­மை­களை மீறிய நட­வ­டிக்கை எனவும் உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

அதன்­படி ரம்ஸி ராசிக்­குக்கு அவரை கைது செய்த சி.ஐ.டி.யின் கணினி மற்றும் பகுப்­பாய்வு பயிற்சி பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் சேனா­ரத்ன, அப்­போ­தைய சி.ஐ.டி. பணிப்­பாளர் டப்­ளியூ. தில­க­ரத்ன ஆகியோர் தமது சொந்த நிதி­யி­லி­ருந்து நட்­ட­ஈடு செலுத்த வேண்டும் எனவும், ரம்ஸி ராசிக்கின் சட்­ட­வி­ரோத கைதுக்கு அரசும் பொறுப்புக் கூற வேண்டும் என்­பதால் அரசும் ஒரு மில்­லியன் ரூபா நட்­ட­ஈடு செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதி­மன்றம் தீர்ப்­ப­றி­வித்­தது. இந்தத் தீர்ப்­பா­னது இலங்­கையில் ஐசி­சி­பிஆர் சட்டம் தவ­றான முறையில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­பதை உயர்­நீ­தி­மன்­றமே உறுதி செய்த முக்­கிய தரு­ண­மாகும்.

இலங்­கையில் 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க குடி­யியல் மற்றும் அர­சியல் உரி­மைகள் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்டம் (ஐ.சி.சி.பி.ஆர்) அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது முதல் நூற்றுக் கணக்­கானோர் இச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய நாடுகள் சபை­யினால் இச் சட்டம் உலக நாடு­களில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட எடுக்­கப்­பட்ட முயற்­சி­யா­னது, உல­கெங்கும் தலை­வி­ரித்­தாடும் இன, மத பதற்­றங்கள் மற்றும் வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்­டே­யாகும். துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்­கையில் இச் சட்­ட­மா­னது கருத்துச் சுதந்­தி­ரத்தைக் கட்­டுப்­ப­டுத்­தவும் இன, மத மற்றும் அர­சியல் நோக்­கங்­களின் கீழ் பிர­ஜை­களைப் பழி­வாங்­க­வுமே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது என்­பதை மேற்­கு­றிப்­பிட்ட சம்­ப­வங்கள் ஊடாக விளங்கிக் கொள்ள முடி­கி­றது. அத்­துடன் நாட்டில் சமீப காலங்­களில் தோற்றம் பெற்ற இன, மத வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்கள் மீது இச் சட்டம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பதும் இங்கு குறிப்­பிட்டுக் கூறப்­பட வேண்­டி­ய­தாகும்.

2013 ஆம் ஆண்டு அளுத்­கம மற்றும் மஹ­ர­கம ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற இரு வேறு கூட்­டங்­களில் கலந்து கொண்டு வெளி­யிட்ட இன, மத பதற்­றங்­களைத் தூண்டும் கருத்­து­க­ளுக்கு எதி­ராக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் க்கை எடுக்குமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. எனினும் இதுவரை அவருக்கு எதிராக இச் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக, இச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரும் வகையில் எந்தவித குற்றங்களையும் இழைக்காத பலர் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் தவறான முறையில் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளனர். இக் கைதுகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐசிசிபிஆர் சட்டத்தின் 3(1) ஆம் பிரிவின் கீழ் அண்மைக் காலமாக கைதுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியதாகும். இந்த சட்டம் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகவும் இச் சட்டம் பிரயோகிக்கப்பட்டது. 2018 ஜூன் நடுப்பகுதியில் மாத்திரம் ICCPR சட்டத்தின் மேற்கூறிய பிரிவின் கீழ் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இச் சட்டத்தின் கீழான கைது மற்றும் விசாரணை செயல்முறைகள் பயங்கரவாத புலனாய்வு பிரிவால் நடத்தப்படுகின்றன. இது பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை செயல்முறைகளுக்கு சமமானதாகும். சாதாரண குடிமக்களின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதானது மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் மிகப் பாரிய தவறாகும். அந்த வகையில் இலங்கை இந்த தவறான பாதையை மாற்றி, ஐ.சி.சி.பி.ஆர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் உண்மையான நோக்கத்தை அடையும் வகையில் இச் சட்டத்தைப் பிரயோகிக்க முன்வர வேண்டும். அதன் மூலமே இலங்கையில் அண்மைக்காலமாக தோற்றம் பெற்றுள்ள இன, மத பதற்றங்கள் மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியுமாக இருக்கும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.