மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுமா?

0 440

எம்.பி.எம்.பைறூஸ்

சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்டு அடக்­கு­மு­றை­களைப் பிர­யோ­கிப்­பதும், பின்னர் தேவை­யேற்­ப­டு­கையில் பொறுப்­புக்­கூ­ற­லின்றி மன்­னிப்­புக்­கோரி அல்­லது ஒடுக்­கு­மு­றையை நியா­யப்­ப­டுத்தி அறிக்­கை­யிட்டுக் கடந்து செல்­வதும் இலங்­கைக்கு ஒன்றும் புதி­தல்ல.

ஜனா­தி­பதித் தேர்தல் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலையில் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள புதிய ஜனா­தி­பதி சிறு­பான்­மை­யின மக்­களின் மத கலா­சார உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­ப­வ­ராக இருக்க வேண்டும் என்ற நியா­ய­மாக எதிர்­பார்ப்பு மேலோங்­கி­யுள்­ளதை மறுப்­ப­தற்­கில்லை.

இந்­நி­லையில் கடந்த சில மாதங்­க­ளாக பேசு­பொ­ரு­ளா­க­வுள்ள பரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் பெண்கள் தமது கலா­சார ஆடையை அணி­வதில் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை இந்தக் கட்­டுரை ஆராய்­கி­றது.

திரு­கோ­ண­மலை ஸாஹிரா மாண­வி­களின் பெறு­பே­றுகள் இடை­நி­றுத்தம்
திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூ­ரியில் கல்வி பயின்று, க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய 70 முஸ்லிம் மாண­வி­களின் பரீட்­சைப்­பெ­று­பே­று­களை அவர்கள் காதை மறைக்கும் வித­மாக ஹிஜாப் அணிந்­து­வந்து பரீட்சை விதி­களை மீறி­ய­தாகக் காரணம் குறிப்­பிட்டு வெளி­யி­டாமல் இடை­நி­றுத்­தி­வைத்து, பின்னர் வெளி­யிட்ட சம்­பவம் அனை­வரும் அறிந்­ததே. ஆனால் பரீட்­சைப்­பெ­று­பே­றுகள் வெளி­யாகி, அனைத்தும் சுமு­க­மாக முடிந்­து­விட்­டது போல் வெளித்­தெ­ரிந்­தாலும், இவ்­வி­வ­கா­ரத்தில் இன்­னமும் இழு­ப­றி­நிலை தொடர்­கி­றது. கட்­டுப்­பா­டுகள் மிகுந்த சமூ­கத்­தி­லி­ருந்து தமது எதிர்­காலம் பற்­றிய மிகை­யான கன­வு­க­ளுடன் உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றிய மாண­விகள், தற்­போது எதிர்­காலம் தொடர்­பான அச்­சத்­துடன் நாட்­களைக் கடத்துகின்­றனர்.

திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூரி மாண­விகள் 70 பேரின் உயர்­த­ரப் ­ப­ரீட்­சைப்­பெ­று­பே­றுகள் இடை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வத்­தின்­மீது வெளிச்சம் பாய்ச்சும் வகையில் முதன்­மு­தலில் அறிக்­கை­யொன்றை வெளி­யிட்ட சர்­வ­தேச அமைப்­பான மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம், ‘பரீட்­சை­களின் நேர்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வது உரிய அதி­கா­ரி­களின் பொறுப்­பாகும். இதன்­போது பின்­பற்­றப்­படும் நடை­மு­றைகள் மத அல்­லது பாலின அடிப்­ப­டையில் எந்­த­வொரு மாண­வ­ரையும் புறந்­தள்ளும் வித­மாக அமை­யக்­கூ­டாது. அவ்­வா­றி­ருக்­கையில் அம்­மா­ண­விகள் ஹிஜாப் அணிந்து வந்­த­தாகக் குறிப்­பிட்டு அவர்­க­ளது பரீட்­சைப்­பெ­று­பே­று­களை வெளி­யி­டாமல் இடை­நி­றுத்­தி­வைப்­ப­தா­னது அவர்­களின் மத­சு­தந்­தி­ரத்தை மீறு­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் சமூ­கங்­க­ளுக்கு இடையில் அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்ப முனை­வ­தா­கக்­கூறும் அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­புக்­களைப் பூர்த்­தி­செய்­யாது’ எனக் கடு­மை­யாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.

இலங்கை ஜன­நா­யக சோச­லிஸ குடி­ய­ரசின் அர­சி­ய­ல­மைப்பின் 10 ஆவது சரத்தின் பிர­காரம் இந்­நாட்­டுப்­பி­ர­ஜைகள் அனை­வரும் மத­சு­தந்­தி­ரத்­துக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளாவர். அதே­போன்று 12(2) சரத்­தா­னது எந்­த­வொரு நபரும் பால் அல்­லது மத அடிப்­ப­டையில் ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வதைத் தடுப்­ப­துடன், 14(1)(ஈ) சரத்து அனைத்­துப்­பி­ர­ஜை­களும் தமக்கு விரும்­பிய மதம், நம்­பிக்கை, வழி­பாட்டு முறைமை, நடை­முறை அல்­லது கோட்­பாட்டைப் பின்­பற்­று­வ­தற்­கான சுதந்­தி­ரத்தை உறு­தி­செய்­தி­ருக்­கின்­றது.

நாட்டின் அதி­யுச்ச சட்டம் மேற்­கூ­றப்­பட்ட விதி­க­ளைக்­கொண்டு அனைத்­துப்­பி­ர­ஜை­க­ளி­னதும் உரி­மைகள் மற்றும் சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கையில், குறித்­த­வொரு மதம் மற்றும் அது­சார்ந்த ஆடை­களைக் கார­ணங்­காட்டி பரீட்­சைப்­பெ­று­பே­று­களை இடை­நி­றுத்­து­வது ஏற்­பு­டை­ய­தல்ல எனச் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு. அது­மாத்­தி­ர­மன்றி அர­சி­ய­ல­மைப்பின் 27(2)(எச்) சரத்தின் ஊடாக சக­ல­ருக்கும் சமத்­து­வ­மான கல்வி உரிமை உறு­தி­செய்­யப்­பட்­டி­ருப்­ப­தா­கவும், அவ்­வா­றி­ருக்­கையில் மாண­வ­ரொ­ருவர் பரீட்­சைக்குத் தோற்­று­வ­தற்கு அனு­மதி மறுப்­பதோ அல்­லது அவ­ரது பெறு­பேறை இடை­நி­றுத்­தி­வைப்­பதோ இவ்­வு­ரி­மையை மீறு­வ­தா­கவே அமையும் எனவும் ஆணைக்­குழு தெரி­வித்­தி­ருக்­கி­றது.

இருப்­பினும் ஜூலை 4 எனத் திக­தி­யி­டப்­பட்டு, ஜூலை 15 ஆம் திகதி மேற்­கூ­றப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மாண­வி­களின் கைக­ளுக்குக் கிடைக்­கப்­பெற்ற பரீட்சை ஆணை­யாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ.அமித் ஜய­சுந்­த­ர­வினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருக்கும் கடி­தத்தில், கடந்த க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சை­யின்­போது பரீட்சை மண்­ட­பத்­துக்குள் நுழை­வ­தற்கு முன்­னரும், பரீட்சை எழுதும் காலப்­ப­கு­தி­யிலும் ஆள­டை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் விதத்தில் பரீட்­சைக்குத் தோற்­ற­வேண்டும் என்­பது குறித்து பாட­சாலை அதிபர், பரீட்சை மேற்­பார்­வை­யாளர் உள்­ளிட்­டோரால் தேவை­யான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டி­ருந்த போதிலும், அவற்றை அம்­மா­ண­விகள் பின்­பற்­ற­வில்லை என்­பது அவ­தா­னிக்­கப்­பட்­ட­மையால் பரீட்­சைப்­பெ­று­பே­றுகள் இடை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்­ட­தா­கவும், இருப்­பினும் அம்­மா­ண­விகள் முதற்­த­ட­வை­யாக பாட­சாலைப் பரீட்­சார்த்­தி­யாக இப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றி­ய­மையைக் கருத்­திற்­கொண்டு பரீட்­சைப்­பெ­று­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டு­வ­தா­கவும் கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால் அம்­மா­ண­விகள் தாம் காதை முழு­மை­யாக மறைக்கும் வகையில் ‘ஹிஜாப்’ அணிந்து செல்­ல­வில்லை எனவும், மாறாக பரீட்சை விதி­மு­றை­களைப் பின்­பற்றும் அதே­வேளை தமது மத நம்­பிக்­கை­யுடன் முரண்­ப­டாத வகையில் காதுகள் தெரி­யக்­கூ­டி­ய­ வ­கை­யி­லான துணி­யையே (Shawl) அணிந்­து­சென்­ற­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர். அவ்­வா­றி­ருக்­கையில் அம்­மா­ண­விகள் பரீட்சை விதி­களை மீறி­ய­தா­க­தாகத் தீர்­மா­னித்து, அவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருக்கும் மேற்­கூ­றப்­பட்ட கடி­தத்தின் நேர்­மைத்­தன்மை தொடர்பில் கேள்வி எழு­கி­றது.

இது­கு­றித்து தன்­னார்வ அடிப்­ப­டையில் மீளவும் அவ­தானம் செலுத்­தி­யி­ருக்கும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு, இவ்­வி­வ­காரம் தொடர்பில் முறை­யான உள்­ளக விசா­ர­ணையை முன்­னெ­டுக்­கு­மாறு பரீட்சை ஆணை­யாளர் நாய­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யி­ருப்­ப­துடன் இவ்­வா­றான சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் இடம்­பெ­று­வதைத் தவிர்ப்­ப­தற்­காக இந்­நெ­ருக்­க­டிக்குக் கார­ண­மாக அமைந்த விதி­மு­றையை மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்தி, குழப்­ப­மற்ற வகையில் வெளி­யி­டு­மாறும் கோரி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை இவ்­வி­டயம் தொடர்பில் மனித உரி­மைகள் மற்றும் சிவில் சமூக செயற்­பாட்­டா­ள­ரான ஷ்ரீன் ஸரூர் கருத்து வெளி­யி­டு­கையில், பெறு­பே­றுகள் இடை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்ட மாண­வி­க­ளுக்கு பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் முற்­தி­க­தி­யிட்டு அனுப்­பி­வைக்­கப்­பட்ட கடி­த­மா­னது தனக்கு வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனின் சம்­ப­வத்தை நினை­வூட்­டு­வ­தாகத் தெரி­வித்தார். அத்­தோடு ஒரு­வரை அவ­ரது மத நம்­பிக்­கை­களின் அடிப்­ப­டையில் குற்­ற­மி­ழைத்­தவர் எனக்­கூ­றி­விட்டு, பின்னர் அதனை நிரூ­பிப்­ப­தற்கு ஆதா­ரங்கள் தேடப்­ப­டு­கின்­றன எனவும் அவர் விசனம் வெளி­யிட்டார்.

இதே­வேளை இலங்­கையில் பதி­வா­கி­வரும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு மற்றும் பக்­கச்­சார்பு சம்­ப­வங்கள் குறித்து மிகுந்த கரி­சனை அடை­வ­தாகத் தெரி­வித்­தி­ருக்கும் ‘அனை­வ­ருக்கும் நீதி’ அமைப்பு, முஸ்லிம் மாண­வர்­களின் மத­சு­தந்­திரம் பாது­காக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இலங்­கையில் பதி­வா­கி­வரும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு மற்றும் பக்­கச்­சார்பு சம்­ப­வங்கள் குறித்து மிகுந்த கரி­ச­னை­ய­டை­கின்றோம். அண்­மையில் திரு­கோ­ண­மலை ஸாஹிரா கல்­லூ­ரியில் 70 முஸ்லிம் மாண­வி­களின் உயர்­த­ரப்­ப­ரீட்சை பெறு­பே­றுகள் வெளி­யி­டாமல் இடை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்­டன. பரீட்­சை­யின்­போது காதுகள் மூடப்­பட்­டி­ருக்­கக்­கூ­டாது என்ற கொள்­கையே அதற்குக் கார­ண­மாகக் கூறப்­பட்­டது. இருப்­பினும் இக்­கொள்கை தமது மத விழு­மி­யங்­களைப் பின்­பற்­று­வ­தற்கும், ஹிஜாப் அணி­வ­தற்­கு­மான தெரிவை மேற்­கொண்ட முஸ்லிம் பெண்­களை ஒடுக்கும் வகை­யிலும், பெரிதும் பாதிப்­ப­தா­கவும் அமைந்­தி­ருக்­கின்­றது. அது­மாத்­தி­ர­மன்றி இது இலங்­கையில் முஸ்­லிம்­க­ளு­ககு எதி­ரான மத­ரீ­தி­யான ஒடுக்­கு­முறை தொடர்­வ­தற்கு வாய்ப்­பேற்­ப­டுத்­து­கின்­றது.

இந்­ந­ட­வ­டிக்கை பல்­வேறு தடை­களைக் கடந்து உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு அவர்­க­ளது பல்­க­லைக்­க­ழ­கக்­கல்வி மறுக்­கப்­படல் உள்­ளிட்ட பல்­வேறு பின்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும். இலங்­கையில் குறிப்­பாக மருத்­து­வ­ம­னைகள், பாட­சா­லைகள் மற்றும் பொதுப்­போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட பொது இடங்­களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணி­வதை சகித்­துக்­கொள்­ள­மு­டி­யாத மன­நிலை உரு­வா­கி­வ­ரு­கி­றது. இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் மாண­வர்­களின் மத­சு­தந்­திரம் பாது­காக்­கப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­து­கின்றோம் என அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­காரம் தொடர்பில் மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை நகரை அண்­மித்து வாழும், பெரும்­பாலும் குறைந்த வரு­மானம் பெறும் குடும்­பங்­க­ளைச்­சேர்ந்த மாண­வர்கள் பலர் கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்­சைக்குத் தோற்­றி­யி­ருந்­தனர். அதன்­போது பரீட்சை முறை­கே­டு­களைத் தடுக்கும் நோக்கில் மாண­வர்­களின் காதுகள் வெளித்­தெ­ரி­ய­வேண்டும் என விதிக்­கப்­பட்­டி­ருந்த வரை­ய­றைக்கு அமை­வாக அவர்கள் இறுக்­க­மாக அணியும் ஹிஜாப்பை தவிர்த்து, தளர்­வான – வெளித்­தெ­ரி­யக்­கூ­டி­ய­வா­றான வெண்­ணிற துணி­க­ளையே அணிந்­தி­ருந்­தனர். அதே­போன்று அன்­றைய தினம் உரிய பரீட்சை நிலை­யங்­களில் மேற்­பார்­வையில் ஈடு­பட்­ட­வர்கள் அம்­மா­ண­வர்­களைப் பரீட்சை எழு­து­வ­தற்கு அனு­ம­தித்­தி­ருந்­தனர்.

இருப்­பினும் கடந்த மேமாதம் 31 ஆம் திகதி உயர்­த­ரப்­ப­ரீட்சைப் பெறு­பே­றுகள் வெளி­யான நிலையில், பரீட்­சைகள் திணைக்­க­ள­மா­னது மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு ஹிஜாப் அணிந்­தி­ருந்த மாண­வர்கள் ‘புளுடுத் கேட்­பான்­களை’ பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருப்­ப­தாகக் குறிப்­பிட்டு, அம்­மா­ண­வர்­களின் பெறு­பே­று­களை வெளி­யி­டாது இடை­நி­றுத்­தி­யுள்­ளது. இதன்­வி­ளை­வாக அம்­மா­ண­வர்கள் பல்­க­லைக்­க­ழக உயர்­கல்­வியைத் தொடர்­வ­தற்­கான வாய்ப்பு மறுக்­கப்­ப­டக்­கூ­டிய அச்­சு­றுத்­த­லுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர்.

பொதுவில் முஸ்லிம் பெண்கள் கல்­வியைத் தொடர்­வ­தற்கு அவர்­க­ளது சமூ­கங்­க­ளுக்கு உள்­ளேயே பல்­வேறு தடை­க­ளுக்கு முகங்­கொ­டுப்­ப­தா­கவும், அத்­த­டை­களைக் கடந்து வந்த இம்­மா­ண­வர்கள் தற்­போது ‘முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போக்­கினால்’ பாதிப்­ப­டைந்­தி­ருப்­ப­தா­கவும் ஆசி­ரி­யர்கள் மற்றும் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். இதற்கு முன்­னரும் திரு­கோ­ண­ம­லையில் கல்­வித்­துறை சார்ந்து முஸ்லிம் பெண்­களின் ஆடை குறித்து சர்ச்­சை­களும், முரண்­பா­டு­களும் நில­வின.

இலங்­கையைப் பொறுத்­த­மட்டில் அண்­மைய வரு­டங்­களில் சிறு­பான்­மை­யின முஸ்­லிம்­களை ஒடுக்கும் வகை­யி­லான வழி­காட்­டல்கள் தொடர்ந்து நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. கொவிட் – 19 பெருந்­தொற்றுக் காலப்­ப­கு­தியில் தொற்­றினால் உயி­ரி­ழந்­தோரின் சட­லங்­களைப் புதைப்­ப­தற்கு அர­சாங்கம் தடை­வி­தித்­த­துடன், இது முஸ்­லிம்­களின் மத்­தியில் வலு­வான காயத்தைத் தோற்­று­வித்­தது. அதே­போன்று தவ­றான பரப்­பு­ரை­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தூண்­டப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களும் கடந்த காலங்­களில் பதி­வா­கி­யி­ருந்­தன.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணியில் பரீட்­சை­களின் நேர்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வது உரிய அதி­கா­ரி­களின் பொறுப்­பாகும். இதன்­போது பின்­பற்­றப்­படும் நடை­மு­றைகள் மத அல்­லது பாலின அடிப்­ப­டையில் எந்­த­வொரு மாண­வ­ரையும் புறந்­தள்ளும் வித­மாக அமை­யக்­கூ­டாது. அவ்­வா­றி­ருக்­கையில் மேற்­கு­றிப்­பிட்ட மாண­வர்­களின் உயர்­த­ரப்­ப­ரீட்சைப் பெறு­பே­று­களை இடை­நி­றுத்­தி­வைப்­பது அவர்­க­ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­ப­துடன் சமூ­கங்­க­ளுக்கு இடையில் அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்ப முனை­வ­தாகக் கூறும் அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­புக்கும் முர­ணா­கவே அமையும் என மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

சட்­டக்­கல்­லூரி மாண­வி­களும் பாதிப்பு
இதனிடையே கொழும்பு ரோயல் கல்­லூரி மண்­ட­பத்தில் அண்­மையில் இடம் பெற்ற இலங்கை சட்­டக்­கல்­லூ­ரிக்­கான அனு­மதி பரீட்சையில் தோற்றிய முஸ்லிம் மாண­விகள் அணிந்திருந்த ஹிஜாப் ஆடையை பரீட்சை நிலைய அதி­கா­ரிகள் கட்­டாயப்படுத்தி அகற்­றி­ய சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்­சம்­பவம் தொடர்பில் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்ள சட்டக் கல்­லூரி மாண­வர்­களின் முஸ்லிம் மஜ்லிஸ், முஸ்லிம் மாண­வி­க­ளுக்கு பரீட்சை மண்­ட­பத்தில் இழைக்­கப்­பட்ட அநீதி தொடர்பில் முழு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மென இலங்கை சட்டக் கல்­லூ­ரியின் அதி­பரைக் கோரி­யுள்­ளது.
எதிர்­கா­லத்தில் பரீட்­சை­களின் போது இவ்­வா­றான அநீ­திகள் இடம்­பெ­றா­ம­லி­ருப்­ப­தற்கு சட்டக் கல்­லூரி உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மெ­னவும் முஸ்லிம் மஜ்லிஸ் சட்டக் கல்­லூரி அதி­பரை வேண்­டி­யுள்­ளது.
இலங்கை சட்டக் கல்­லூ­ரியின் முஸ்லிம் மஜ்லிஸ் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கல்­லூரி அதிபர் அத்­துல பத்­தி­நா­யக்­க­வுக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது.

சட்டக் கல்­லூரி முஸ்லிம் மஜ்­லிஸின் தலைவர் அர்கம் முனீர் மற்றும் பொதுச் செய­லாளர் பாராஹ் நௌசாத் ஆகியோர் கையொப்­ப­மிட்­டு அனுப்பியுள்ள கடி­தத்தில், கடந்த 2023 செப்­டெம்பர் மாதம் 30ஆம் திகதி நடை­பெற்ற இலங்கை சட்டக் கல்­லூரி நுழைவுப் பரீட்சை எழு­திய முஸ்லிம் மாண­வி­க­ளுக்கே இவ் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பெண்­களின் அடை­யா­ள­மான கலா­சார ஆடை ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதச் சென்ற முஸ்லிம் மாண­விகள் பரீட்­சையின் போது தங்­க­ளது ஹிஜாபை அகற்­று­மாறு கோரப்­பட்­டி­ருக்­கி­றார்கள். சுதந்­தி­ர­மாக தங்­க­ளது மத நம்­பிக்­கையை அனுஷ்­டிப்­பதை இது மீறி­ய­தாக அமைந்­துள்­ளது.

அத்­தோடு முஸ்லிம் மாண­வி­களின் பரீட்சை அனு­மதி இலக்க அட்டை மற்றும் தேசிய அடை­யாள அட்டை என்­பன பெறப்­பட்டு அவற்றை புகைப்படம் எடுத்துள்ளனர். அத்­தோடு சில பரீட்சை மேற்­பார்­வை­யா­ளர்­களால் தகாத வார்த்தைப் பிர­யோ­கங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது பரீட்சை வழி­மு­றை­களை மீறிய செயல் மாத்­தி­ர­மல்ல. அர­சியல் யாப்­பினை மீறிய செய­லு­மாகும். மாண­வர்­களின் தனித்­துவம் மற்றும் உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ளன.
மாண­விகள் மீதான இவ்­வா­றான அழுத்­தங்­க­ளினால் அவர்கள் மன­த­ளவில் பாதிப்­பினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவ்­வா­றான நிலைமை பரீட்­சையின் போது மட்­டு­மல்ல தொடர்ந்தும் மன­நிலை பாதிக்­கப்­பட்டு அவர்­க­ளது கல்விச் சாத­னை­க­ளுக்கும் பாதிப்­பாக அமையும்.

இலங்கை சட்டக் கல்­லூரி மாண­வர்­களின் மதம் மற்றும் கலா­சா­ரங்­க­ளுக்கு அப்பால் சம­நி­லை­யினை பேணி வரு­கின்­ற நிலையில், இலங்கை சட்டக் கல்­லூ­ரியின் அதிபர் என்ற வகையில் முஸ்லிம் மாண­விகள் எதிர்­கொண்ட குறித்த அநீதி தொடர்பில் தலை­யிட்டு நடவடிக்கை எடுக்கு­மாறு வேண்­டு­கிறோம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதிபர் பரீட்சைக்குத்
தோற்றியவர்களும் பாதிப்பு
திருகோணமலை மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டது போன்றே ஹிஜாப் அணிந்து வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்­சைக்கு தோற்­றி­ய­மைக்­காக, மேல் மாகா­ணத்தின் 13 முஸ்லிம் அதி­பர்­களின் பெறு­பே­றுகள் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பிலும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு பாதிக்­கப்­பட்ட அதி­பர்கள் செய்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு அதிப‌ர் சேவை தரம் 2 இல் இருந்து தரம் ஒன்­றுக்கு தர­மு­யர்த்­து­வ­தற்­கான வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்சை இரு தினங்­களில் நடாத்­தப்­பட்­டி­ருந்­தன. முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழு­தி­யுள்ள பரீட்­சார்த்­திகள் மறு நாள் பரீட்சை எழு­திக்­கொண்­டி­ருக்கும் போது, இறுதி 20 நிமி­டங்­க­ளுக்குள் அங்கு வந்த அதி­கா­ரி­களின் அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் பரீட்­சார்த்­தி­களின் அடை­யாள அட்­டை­களை பெற்று அவர்­க­ள‌து பரீட்சை அனு­மதிச் சீட்­டுடன் வைத்து புகைப்­படம் எடுத்­துக்­கொண்டு சென்­றுள்­ளனர்.

கொட்­டாஞ்­சேனை மத்­திய கல்­லூ­ரியில் நடந்த இந்த பரீட்­சையில் 7 ஆம் இலக்க பரீட்சை நிலை­யத்தில் பரீட்­சைக்கு தோற்­றிய முஸ்லிம் அதி­பர்­களே இந்த அநீ­திக்கு முகம் கொடுத்­துள்­ளனர்.

இந் நிலையில், வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்சை பெறு­பே­றுகள் கடந்த ஜூன் 5 ஆம் திகதி இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. குறித்த பெறு­பே­று­களை பரீட்­சித்த போது, ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்கள் 13 பேரினதும் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அதிபர்கள் சார்பில் கருத்து வெளியிட்ட திருமதி உல்பத் தெரிவித்தார்.

இவ்வாறு பாடசாலை மாணவிகள் சட்டக்கல்லூரி அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றியோர் மற்றும் அதிபர்களுக்கான வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்சைக்குத் தோற்றியோர் என பல்வேறு தரப்பினரும் இவ்வாறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் உரிய கவனம் செலுத்தி எதிர்காலத்திலும் இவ்வாறான நிலைமை தோற்றம் பெறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வழிகாட்டல்களைப பின்பற்ற வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

அதேபோன்று நாளைய தேர்தலில் வெற்றி பெறப் போகும் ஜனாதிபதி, தேர்தல் பிரசார காலத்தில் வாக்குறுதியளித்தவாறு நாட்டில் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க துணிந்து செயற்பட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.