நினைவுகளில் நிறைந்த தலைவர் முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கீர் மாக்கார்

0 44

எஸ்.எல்.சியாத் அஹமட்
பாராளுமன்ற நூலகர்

எமது வர­லாற்றில் இடம்பிடித்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்­களின் வாழ்க்கை மற்றும் அவ­ரது அரும்­ப­ணிகள் பற்றி நினை­வு­கூர கிடைத்­த­மை­யிட்டு மகி­ழச்­சி­ய­டை­கின்றேன்.

கௌர­வமும் செல்­வாக்கும் நிறைந்த முக்­கிய பத­வி­யான சபா­நா­யகர் பத­வி­யா­னது பாரா­ளு­மன்­ற ­மு­றைமை நில­வு­கின்ற நாடு­களில் ஒரு முக்­கிய பத­வி­யாக காணப்­ப­டு­கின்­றது.

1377 ஆம் ஆண்டு பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த “சேர் தோமஸ் ஹங்­கர்போர்ட்” என்­ப­வரின் நிய­ம­னத்­துடன் இச் சபா­நா­யகர் பதவி தோற்றம் பெறு­வ­தாக ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

இலங்கை அர­சியல் நிர்­வாகக் கட்­ட­மைப்பில் மூன்றாம் நிலையில் காணப்­படும் பத­வியே சபா­நா­யகர் பத­வி­யாகும்.

இத்­த­கைய பின்­ன­ணியில் தோற்றம் பெற்ற சபா­நா­யகர் பத­வியை அலங்­க­ரித்­த­வர்­களில் ஒருவர் தான் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் பல்­வேறு அர­சியல் பத­வி­களில் சேவை­யாற்­றிய போதிலும் சபா­நா­யகர் என்ற பத­வியைக் கொண்டே பிர­பலம் அடைந்­த­வ­ராக காணப்­ப­டு­கின்றார்.

மர்ஹூம் பாக்கீர் மாக்கார் இலங்கை முஸ்­லிம்­களின் ஆரம்ப குடி­யேற்றத் தலங்­களில் ஒன்­றாகக் காணப்­ப­டு­கின்ற, மாணிக்கக் கல் வியா­பா­ரத்தில் பெயர்­பெற்று, தனக்­கே­யான கலா­சா­ரங்­க­ளையும் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் கொண்ட பேரு­வளை நக­ரத்தில் 1917 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி பிறந்தார்.

அவரின் தந்தை “ஹகீம் அலியா மாக்கார்” சிறந்த வியா­பா­ரி­யா­கவும், ஆயுர்­வேத மருத்­து­வ­ரா­கவும் பன்­முகத் திற­மை­களை கொண்­ட­வ­ரா­க­வு­மி­ருந்தார். இவ­ரது தாயார் ராஹிலா உம்மா மாக்கார் கண­வரின் பணிகள் மற்றும் மர­பு­களைக் காப்­பாற்றும் சிறந்த பெண்­ம­ணி­யாகத் திகழ்ந்தார்.

இவர்கள் இலங்­கைக்­கான அரே­பியர் குடி­யேற்­றத்தின் முன்­னோ­டி­யாகத் திகழ்ந்த ஷேக் ஜமா­லு­தீன்-­ அல்-­மக்­தூமி அவர்­களின் வம்­சத்தைச் சேர்ந்­த­வ­ரா­க­ளாக இருக்­கின்­றார்கள். அக்­கா­லத்­தி­லேயே நன்கு கல்வி கற்ற குடும்­ப­மாக இக்­ குடும்பம் காணப்­பட்­டது.

இக்­கு­டும்­பத்தில் பிறந்த மர்ஹூம் பாக்கீர் மாக்கார் இளம் வய­தி­லி­ருந்தே கல்­வியில் அக்­க­றை­யுடன் இருந்தார். தனது ஆரம்­பக்­கல்­வியை பேரு­வ­ளையில் உள்ள அல்-­பா­ஸி­யத்துல் நஸ்­ரியா பாட­சா­லையில் கற்றார். பின்பு 1924 ஆம் ஆண்டு, தனது 7 வயதில், கொழும்பு 12 இல் உள்ள சென் செபஸ்­டியன்ஸ் கல்­லூ­ரியில் தனது கல்­வியை ஆரம்­பித்தார். பின்னர் மேல்­நிலைக் கல்­விக்­காக அவர் கொழும்பு ஸாஹிரா கல்­லூ­ரியில் சேர்ந்தார்.

மர்ஹூம் பாக்கீர் மாக்­கா­ரு­டைய அர­சியல் வாழ்க்­கைக்கும், அத்­து­றை­யி­லான சாத­னை­க­ளுக்கும், அத்­தி­வா­ரமும், அடிப்­படைப் பயிற்­சியும் அவர் பயின்ற கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரி­யி­லேயே இடப்­பட்­டது. இங்கு, அவர் கல்­லூரி இதழின் ஆசி­ரி­ய­ரா­கவும், முஸ்லிம் மஜ்லிஸ் தலை­வ­ரா­கவும், தமிழ் இலக்­கிய சங்­கத்தின் தலை­வ­ரா­கவும் செயற்­பட்டு தனது திற­மையை வளர்த்துக் கொண்டார்.

மர்ஹூம் டி. பி. ஜாயா ஸாஹிரா கல்­லூ­ரியின் அதி­ப­ராக இருந்த காலத்தில் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அதே கல்­லூ­ரியில் மாண­வ­ரா­கவும், ஆசி­ரி­ய­ரா­கவும் கட­மை­யாற்­றி­யமை அவ­ருக்கு கிடைத்த மிகப்­பெ­ரிய பாக்­கி­ய­மாகும்.

1940 ஆம் ஆண்டில் சீனியர் கேம்­பிரிஜ் (Senior Cambridge) தேர்­வு­களை முடித்த பாக்கீர் மாக்கார், இலங்கை சட்டக் கல்­லூ­ரியில் சேர்ந்தார். ஆனால், இரண்டாம் உலகப் போர் தொடங்­கி­யதால், அவர் 1942 ஆம் ஆண்டு சிவில் பாது­காப்புச் சேவையில் பணி­யாற்றத் தொடங்­கினார். போருக்குப் பிறகு, மீண்டும் சட்டக் கல்­லூ­ரியில் இணைந்து, 1950 ஆம் ஆண்டில் சட்­டத்­த­ர­ணி­யாக தேர்ச்சி பெற்று களுத்­துறை மாவட்­டத்தில் சட்ட சேவையை தொடங்­கினார். 1951 ஆம் ஆண்டில், களுத்­துறை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலை­வ­ரா­கவும் இவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

மர்ஹூம் பாக்கீர் மாக்­காரின் அர­சியல் பயணம் பேரு­வளை நக­ர­ச­பை­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­கின்­றது. இவர் 1950ஆம் ஆண்டு, பேரு­வளை நக­ர­சபை உறுப்­பி­ன­ராகப் போட்­டி­யின்றி தெரிவு செய்­யப்­பட்டு, பின்னர் நக­ர­சபைத் தலை­வ­ரா­கவும் பதவி ஏற்றார்.

மேலும் பேரு­வளை நக­ராட்சி மாந­க­ராட்­சி­யாக மாறிய போது நக­ரா­தி­ப­தி­யா­கவும், 1960 ஆம் ஆண்­டு­ வரை செயற்­பட்டார்.

1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்ற பொதுத் தேர்தலில் பேரு­வளைத் தேர்தல் தொகு­தியில் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்றார். ஆனால், சில மாதங்­க­ளி­லேயே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டதால், அவர் மீண்டும் 1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்­பெற்ற தேர்­தலில் போட்­டி­யிட்டுத் தோல்வி அடைந்­தாலும், 1965 ஆம் ஆண்டு தேர்­தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.

1977 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் போட்­டி­யிட்டு பேரு­வளைத் தொகு­தியில் அமோக வாக்­கு­களால் வெற்றி பெற்றார்.

அது­மாத்­தி­ர­மன்றி அப்­போ­தைய தேசிய அரச பேர­வையின் துணை சபா­நா­ய­க­ரா­கவும் தெரிவு செய்­யப்­பட்டார். அப்­போது சபா­நா­ய­க­ராகத் தெரிவு செய்­யப்­பட்ட கலா­நிதி ஆனந்­த­ திஸ்ஸ டி அல்விஸ் தனது சபா­நா­யகர் பத­வியை இரா­ஜி­னாமா செய்த போது 1978 ஆம் ஆண்டு இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தின் சபா­நா­ய­க­ராக மர்ஹூம் பாக்கீர் மாக்கார் தெரிவு செய்­யப்­பட்டு 1983 ஆம் ஆண்­டு­வரை பத­வி­ வ­கித்தார்.

இவர், இலங்கை பாரா­ளு­மன்றக் கட்­டிடம் ஸ்ரீ ஜெய­வர்­த­ன­புர கோட்­டைக்கு இடம்மாற்றம் செய்­யப்­பட்­ட­போது, அதன் முதல் சபா­நா­ய­க­ரா­கவும் திகழ்ந்தார்.

தமிழ், சிங்­களம், ஆங்­கிலம் ஆகிய மும்­மொ­ழி­களில் பேச்­சாற்­றலும், எழுத்­தாற்­றலும் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் பெற்­றி­ருந்­த­மையால் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை சிறப்­பாக வழி­ந­டத்திச் சென்­ற­தோடு பாரா­ளு­மன்­றத்தின் ஒழுங்­கையும் பாரம்­ப­ரி­யத்­தி­னையும் காக்க முக்­கிய பங்­காற்­றினார்.

இவர் பாரா­ளு­மன்­றத்தில் அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­னதும் நன்­ம­திப்­பை­பெற்­றி­ருந்தார். ஆளும் கட்­சி­யி­னது பாராட்டை மட்­டு­மன்றி எதிர்­க்கட்­சி­யி­னதும் பாராட்டைப் பெற்ற ஒரு நேர்­மை­யான சபா­நா­யக­ராக விளங்­கினார்.

இக்­கா­லப்­ப­கு­தியில் இவ­ரு­டைய உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மான மும்தாஜ் மஹால் மக்­களின் நலன் பேணும் அலு­வ­லகம் போன்று செயற்­பட்­ட­தாகக் குறிப்­பி­டுவர். தினமும் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் இருந்து மக்கள் வந்து தங்கள் பிரச்­சி­னைகள் பற்றி சபா­நா­ய­க­ருடன் கலந்­து­ரை­யாடி அவற்­றுக்கு தீர்வும் பெற்றுச் சென்­ற­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

பேரு­வளைத் தொகுதி, அதி­க­மாக பெரும்­பான்மை சமூ­கத்­தினர் வாழு­மிடம் என்­ற­போ­திலும், அங்கு முஸ்­லிம்கள் அர­சி­யலில் செல்­வாக்­குள்­ள­வர்­க­ளாக, இன்­று­வரை இருக்க, மர்ஹூம் பாக்கீர் மாக்­காரே காரணம் என்றால் அது மிகை­யா­காது.

1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மர்ஹூம் பாக்கீர் மாக்கார் சபா­நா­யகர் பத­வியில் இருந்து விலகி, அமைச்­ச­ராகப் பத­வி­யேற்றார். பின்னர், 1988 ஆம் ஆண்டு, அவர் பாரா­ளு­மன்­றத்தில் இருந்து விலகி, தென் மாகா­ணத்தின் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்டார். மாகாண சபை முறை இந்­நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் முத­லா­வது முஸ்லிம் ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வரும் இவ­ராவார்.
சமூக சேவை­யா­ள­ரான மர்ஹூம் பாக்கீர் மாக்கார் முஸ்லிம் சமூ­கத்தின் முன்­னேற்­றத்தில் பெரும் அக்­க­றை­யுள்­ள­வ­ராகக் காணப்­பட்டார்.

இவர் இலங்கை முஸ்லிம் லீக்கின் உப தலை­வ­ராக இருந்த காலத்தில் கலா­நிதி எம்.சீ.எம். கலீல் உடன் இணைந்து முஸ்லிம் சமூ­கத்தின் முன்­னேற்­றத்­திற்­கான முயற்­சி­களில் பாடு­பட்டு வந்தார்.

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு இணை­யாக கல்­வி­யிலும், பொரு­ளா­தா­ரத்­திலும், அர­சி­ய­லிலும் முன்­னேற்றம் காண்­பதில் வாலி­பர்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­து­வ­மா­னது என்­பதை நன்­கு­ணர்ந்த அவர் அர­சி­யலில் முஸ்­லிம்­களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்­டு­மென்­ப­தற்­காக முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி என்ற அமைப்பை உரு­வாக்­கினார்.

இந்த இயக்­கத்தின் மூலம் மர்ஹூம் பாக்கீர் மாக்கார் முஸ்லிம் இளை­ஞர்கள் மத்­தியில் சமூக உணர்ச்­சி­யையும், நாட்டுப் பற்­றையும் ஏற்­ப­டுத்தி அவர்­க­ளுக்குப் புதுத்­தெ­ளி­வையும், புதுத்­தெம்­பையும் ஊட்டி இளைய தலை­மு­றையை உரு­வாக்­கு­வதில் வெற்­றி­கண்டார். கிராமப் புற முஸ்லிம் இளை­ஞர்­களை ஒன்­று­தி­ரட்டி அவர்­க­ளுக்குத் தலை­மைத்­துவப் பயிற்­சி­யையும் வழி­காட்­டல்­க­ளையும் வழங்கி தேசிய தலை­வர்­க­ளாக வாலி­பர்­களை உரு­வாக்­கிய ஒரே இயக்கம் இது­வாகும்.

மேலும் முஸ்­லிம்­களின் உரிமைக் குரல் பொது­மக்­களை எய்­த­வேண்­டு­மாயின் அவர் தம் பிரச்­சி­னை­களை நாட­றியச் செய்ய வேண்­டு­மென்­பதை நன்­க­றிந்த பாக்கீர் மாக்கார் பத்­தி­ரிகைத் துறை­யிலும் எமக்கு வழி­காட்டிச் சென்­றுள்ளார். “தோன்” என்ற ஆங்­கில இத­ழையும், “உதயம்” என்ற தமிழ் இத­ழையும் பல வரு­டங்­க­ளாக நடத்தி வந்தார். அவர் தம் அய­ராத உழைப்­பையும், தனது வரு­மா­னத்தில் கணி­ச­மான பகு­தி­யையும் முஸ்லிம் வாலிப முன்­ன­ணிக்கும், “தோன்” மற்றும் “உதயம்” பத்­தி­ரி­கை­க­ளுக்­கு­மாக வழங்­கி­யமை இங்கு குறிப்­பி­டத்­தக்க செய­லாகும்.

இது போன்ற பணி­களில் எப்­பொ­ழுதும் முன்­னின்று உழைக்கும் பண்­பினால் இவர் அனை­வ­ரது அபி­மா­னத்­திற்­கு­மு­ரி­ய­வ­ராகத் திகழ்ந்தார்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சேவை செய்த ஒரு திறமையான தலைவராக விளங்கியமையால் 1992 ஆம் ஆண்டு, இலங்கையின் அரசாங்கம் அவருக்கு “தேசமான்ய” விருது வழங்கிக் கௌரவித்தது.

தேசமான்ய மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்கள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி தனது 81 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்களின், அரசியல் வாழ்வை, இவரது மகன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி இம்தியாஸ் பாகிர் மாக்கார் அவர்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முஸ்லிம்களிடையே தோன்றிய அருந்தலைவர்களுள் ஒருவராகவும், இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கப் பாடுபட்ட ஒருவராகவும் திகழ்ந்த மர்ஹூம் பாக்கீர் மாக்கார் அவர்களை நினைவுகூரும் இவ் வேளையில் அவர் தமது கோட்பாடுகளினுள் சிறப்பம்சமாக வலியுறுத்திச் சென்ற “இனங்களுக்கிடையேயான ஒற்றுமை” என்ற பண்பினை எமது வாழ்விலும் பேணிப் பாதுகாப்போம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.