ஜனாதிபதி தேர்தல் 2024: ஓர் இலங்கை முஸ்லிமாக சிந்தித்தல்

0 44

அஷ்ஷெய்க் எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)

நாட்டின் தேசிய அர­சியல் தலை­மையை இலங்கை பிர­ஜை­க­ளா­கிய நாம் தெரிவு செய்யப் போகிறோம். எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு நல்­ல­தொரு நாட்டை விட்டுச் செல்­வ­தற்­காக இலங்கை சோஷ­லிச குடி­ய­ரசை வழி­ந­டத்தும் நிர்­வ­கிக்கும் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான ஜன­நா­யகக் கட­மையை நிறை­வேற்ற தயா­ராகிக் கொண்­டி­ருக்­கிறோம். 1990கள் தொடக்கம் ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­களின் போது சிங்­கள சமூ­கத்தின் கொடிய எதி­ரி­க­ளாக கட்­ட­மைக்­கப்­பட்டு வந்த தமிழ் பிரி­வி­னை­வாதம் மற்றும் 2019 இல் முன்­வைக்­கப்­பட்ட இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் போன்ற கோஷங்கள் பிர­சார மேடை­க­ளி­லி­ருந்து தலை­ம­றை­வா­கி­யி­ருக்­கி­றது. அதா­வது, கடந்த 20 ஆண்­டு­களில் வெளிப்­ப­டை­யாக இன­வாதம் பேசப்­ப­டாமல் நடத்­தப்­படும் முத­லா­வது தேர்­த­லாக இது மாறி­யி­ருக்­கி­றது.

இம்­முறை ஜனா­தி­பதி தேர்தல் இலங்கை மக்­க­ளுக்கு பல கார­ணங்­களால் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. அவை
1. நாடு எதிர்­கொள்ளும் பொரு­ளா­தார சவால்கள்: இலங்கை 2022 மற்றும் 2023 ஆண்­டு­களில் பெரும் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை சந்­தித்­தது, பொது­மக்கள் எரி­பொருள் பற்­றாக்­குறை மற்றும் உணவுப் பொருட்­களின் விலை­யேற்றம் போன்ற பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டனர். இந்த தேர்தல் பொரு­ளா­தார மறு சீர­மைப்பு மற்றும் பொது மக்­களின் வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்த முடியும் என்­பதில் முக்­கிய பங்கு வகிக்­கி­றது.
2. அர­சியல் ஸ்தீரத்­தன்மை: அர­சியல் அமைப்பு மற்றும் நாடா­ளு­மன்­றத்தின் மீது மக்கள் நம்­பிக்­கையை இழந்­துள்­ளனர். புதிய ஜனா­தி­பதி, நாட்டின் அர­சியல் ஸ்தீரத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்தி, மக்­களின் நம்­பிக்­கையை மீட்­டெ­டுப்­பதில் முக்­கி­ய­மான பாத்­தி­ர­மாக இருக்க முடியும்.
3. சர்­வ­தேச உற­வுகள்: இலங்­கையின் சர்­வ­தேச உற­வுகள், குறிப்­பாக இந்­தியா, சீனா மற்றும் மேற்­கத்­திய நாடு­க­ளுடன் தொடர்­புகள் மிக முக்­கி­ய­மான நிலையில் உள்­ளன. புதிய ஜனா­தி­பதி, சர்­வ­தேச ரீதியில் தந்­தி­ரோ­பாய சூழல்­களில் இலங்கை எவ்­வாறு முன்­னே­று­கி­றது என்­ப­திலும் தாக்கம் செலுத்­தலாம்.
4. எதிர்­காலத் திட்­டங்கள்: நாட்டின் எதிர்­கால வளர்ச்சி, விவ­சாயம், சுற்­றுச்­சூழல் பாது­காப்பு, தொழில்­நுட்ப மேம்­பாடு போன்ற முக்­கி­ய­மான துறை­களில் புதிய திட்­டங்கள், நாட்டின் மீட்­சிக்கு வழி­வ­குக்கும்.

ஜனா­தி­பதி தேர்­தலை பொறுத்­த­வரை ரணில், சஜித், அநுர எனும் முத்­த­ரப்பு போட்டி நிலவும் என்றே எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனினும் பொது­ஜன பெர­முன சார்பில் நாமல் ராஜ­பக்‌ஷ கள­மி­றங்­கி­ய­துடன் தேர்தல் களத்தில் நான்கு முனைப் போட்­டியை தோற்­று­வித்த நிலையில் சிங்­கள மக்­களின் வாக்­குகள் மேற்­படி நான்கு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கும் பிரிந்து செல்லும் நிலையில் தமிழ் முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் தேர்தல் முடி­வு­களில் பெரும் தாக்கம் செலுத்தும் என்­பதை மறு­த­லிக்­க­மு­டி­யாது. இந்­நி­லை­யில்தான், இலங்கை முஸ்­லிம்கள் காலங்­கா­ல­மாக மேற்­கொண்­டு­வரும் சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லையே தொடர்ந்து மேற்­கொள்­வதா இல்லை ஜன­நா­யக உரி­மை­க­ளு­டனும், சமத்­து­வத்­து­டனும், கெள­ர­வத்­து­டனும் வாழ்­வதா என்­பதை தீர்­மா­னிக்கும் ஒரு தேர்­த­லாக இது மாறி­யுள்­ளது.

ஒரு தேர்தல் என்று வரு­கின்ற போது அதுவும் எம்­மைப்­போன்ற அர­சியல் அறிவு குறைந்த, ஜன­நா­யகம் வளர்ச்­சி­ய­டை­யாத நாடொன்றில் அர­சியல் தலை­மை­களை தெரிவு செய்­வதில் பங்­க­ளிப்பு செய்யும் கார­ணி­களை பின்­வ­ரு­மாறு நோக்­கலாம்.

வாக்­க­ளிக்கும் போது மக்கள் பெரும்­பாலும் நேர்­மை­யா­ன­வரோ இல்­லையோ, தகு­தி­யா­ன­வரோ, தகு­தி­யற்­ற­வரோ தம் இன மக்­க­ளையே தெரிவு செய்­கி­றார்கள்.

நாட்டின் பொது நன்­மைக்­காக உழைப்­பது பின் தள்ளப்பட்டு ஒவ்­வொரு சமூ­கமும் தங்கள் அர­சியல் தலை­மைகள், கட்­சிகள் ஊடாக தமது இன நலனை மையப்படுத்­தியே செயற்­ப­டு­கி­றார்கள்.

நாட்டில் காணப்­படும் பொதுத் தீமை­களுக்கெதி­ராகப் போராட அனைத்துச் சமூ­கங்­க­ளையும் ஒன்­றி­ணைத்தல் சாத்­தி­ய­மற்­ற­தா­கவே உள்­ளது.

இந்­நி­லை­யில்தான், முஸ்லிம் தரப்பு இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் எதிர்க்­கட்சி தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்­கி­றது. அதே நேரம் SLMC, ACMC ஆகிய முஸ்லிம் கட்­சி­களை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சிலர் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கைகோர்த்து செயற்­ப­டு­கின்­றனர். இவர்­க­ளுக்கு ஜனா­தி­பதி பல்­வேறு விசேட சலு­கை­களை வழங்கி வரு­கிறார். தத்­த­மது பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­கென பல மில்­லியன் கணக்­கான நிதி ஒதுக்­கீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இது வழக்கம் போல முஸ்லிம் எம்­பிக்கள் சலு­கை­க­ளுக்கும், சுய நலன்­க­ளுக்கும் அடி­ப­ணிய ஆரம்­பித்­து­விட்­டார்கள் என்­ப­தையே காட்­டு­கி­றது.

SLMC, ACMC கட்­சி­யினர் தாம் எதிர்க்­கட்சி தலைவர் சஜித்தை நிபந்­த­னை­க­ளு­டனே ஆத­ரிப்­ப­தாக கூறிய போதும் அந்த நிபந்­த­னைகள் என்ன என்­பது பற்றி இது­வரை மக்­க­ளுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை. வழக்கம் போல இம்­மு­றையும் இந்த நிபந்­தனை பூச்­சாண்டி வெறும் கண் துடைப்­பா­கவே அமை­யப்­போ­கி­றதா அல்­லது முஸ்லிம் சமூகம் எதிர்­கொள்ளும் சம­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்றுத் தருமா என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்­டி­யுள்­ளது. இலங்கை முஸ்லிம் சமூகம் சம­கா­லத்தில் எதிர்­கொள்ளும் பல பிரச்­சி­னைகள் கிடப்பில் உண்டு. முஸ்லிம் சமூ­கத்­துக்கு தீர்வை பெற்­றுத்­த­ர­வேண்­டிய பல்­வேறு விட­யங்கள் நம்முன் உண்டு. ஆனால் இத்­த­கைய பிரச்­சி­னை­களை வேட்­பா­ளர்­க­ளிடம் முன்­வைத்து அவர்­களின் நிலைப்­பா­டு­களை அறிந்து அவர்­களை ஆத­ரிக்கும் போக்­கு­களை காண­வில்லை. முஸ்லிம் கட்சி தலை­வர்கள், அர­சியல் பிர­தி­நி­திகள் தமது தனிப்­பட்ட அர­சியல் எதிர்­காலம் மற்றும் கட்­சியின் நலன் ஆகி­ய­வற்றை முன்­னி­றுத்­தியே தீர்­மா­னங்­களை எடுத்து செயற்­ப­டு­கி­றார்கள் என்­பது இப்­போது வெளிப்­ப­டை­யாக தெரி­கி­றது.

இம்­முறை தேர்தல் பிர­சா­ரங்­களில் இன­வாத கருத்­துகள் ஓர­ளவு தணிந்­தி­ருப்­ப­தாக கூறப்­பட்­டாலும் ஒரு சில முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இந்த கலா­சா­ரத்தை இம்­முறை தமது கைகளில் குத்­த­கைக்கு எடுத்து இருக்­கி­றார்கள் என்­பது போல அவர்­க­ளது தேர்தல் பிர­சார மேடை­களில் ஆற்­றப்­படும் உரைகள் அமைந்­தி­ருப்­பதை காண முடி­கி­றது. இது அவர்­களின் அர­சியல் எதிர்­காலம் ஜீவ­ம­ரணப் போராட்­டத்­திற்­கான கள­மாக மாறி­யுள்­ளது என்­பதை அனு­மா­னிக்க முடி­கி­றது.

இந்த தேர்தல் பிர­சா­ரங்­களின் போக்­கு­களை உன்­னிப்­பாக அவ­தா­னிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக பிர­சா­ரங்­களில் வேட்­பா­ளரின் கருத்­துகள் வாக்­கு­று­திகள் மற்றும் எதிர்­கால திட்­டங்கள் என்­பன முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்­கின்­றன. ஒரு வேட்­பாளர் தனது கொள்கை நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் திட்டம் குறித்து பேச வேண்டும். அதன் பிர­தான விட­யங்­களை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

ஜனா­தி­பதி ரணில் விக்­­ர­ம­சிங்­கவின் உரைகள் பெரும்­பாலும் அவ­ரு­டைய கடந்த இரண்டு வருட கால சேவை மற்றும் அதனை தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்ல வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­கி­றது. முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தியில் இந்த கருத்­தையே முன்­வைக்­கிறார். தமிழர் மற்றும் சிங்­க­ள­வர்­க­ளுக்கு மத்­தி­யிலும் இந்த கருத்­தையே தொடர்ந்தும் முன்­வைத்து வரு­கிறார். தான் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சுபீட்­ச­மா­ன­தொரு நிலையை நோக்கி முன்­கொண்டு செல்ல தயா­ராக இருப்­ப­தா­கவும் இதனை கடந்த காலங்­களில் நடை­மு­றைச்­சாத்­தி­ய­மாக காட்டி இருப்­ப­தா­கவும் கூறி தன்னை மக்கள் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­வ­தற்­கான கார­ணத்தை முன்­வைத்து வரு­கிறார்.

சஜித் பிரே­ம­தா­ஸவின் உரை­களில் தன்­னிடம் சிறந்த எதிர்­கால திட்டம் இருப்­ப­தாக குறிப்­பி­டு­கிறார். தனது தந்தை இந்­நாட்டில் மேற்­கொண்ட மக்கள் நலன் வேலைத்­திட்­டங்­களை தானும் மேற்­கொள்வேன் எனக் கூறி தந்­தையின் பெயரால் இந்­நாட்டை ஆள்­வ­தற்­கான மக்கள் ஆணையை கோரு­கிறார். அதே­போன்று நாட்டை முன்­னேற்­ற­க­ர­மான பாதையை நோக்கி முற்­கொண்டு செல்ல தன்­னிடம் நல்­ல­தொரு அணி இருப்­ப­தா­கவும், அதற்­கான பல்­து­றைசார் நிபு­ணத்­துவகுழுவின் வழி­காட்டல் இருப்­ப­தா­கவும் மக்கள் மத்­தியில் தனது கருத்தை முன்­வைத்­து­வ­ரு­கிறார்.

அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் உரை­யா­னது ஊழல்­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்து மறு­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்ற கோரிக்­கை­யாக இருக்­கி­றது. அத்­தோடு நாட்­டிற்கு ஏற்­பு­டைய பொரு­ளா­தார கொள்­கையை அமுல்­ப­டுத்தி முன்­னேற்­றத்தின் பாதையில் இட்டுச் செல்­வ­தற்­கான செயற்­றிறன் மிக்க குழு­வொன்று தன்­னிடம் இருப்­ப­தா­கவும் 76 வரு­ட­மாக படு பாதா­ளத்தில் தள்­ளப்­பட்ட இந்­நாட்டை மீட்­டெ­டுக்க தன்­னோடு இணை­யு­மாறு வலி­யு­றுத்­து­கிறார்.

இம்­முறை தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களில் இன, மத ரீதி­யி­லான வெறுப்பு பேச்­சுகள் இல்­லாது காணப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மா­ன­தா­கவே உள்­ளது. ஆனால், சஜித் பிரே­ம­தாஸ ஜனாஸா எரிப்பு விவ­கா­ரத்தை தொடர்ந்து சந்­தைப்­ப­டுத்தி முஸ்­லிம்­களின் வாக்­கு­களை கவர்­தற்கு எத்­த­னிக்­கிறார். அநு­ர­கு­மார திஸா­நா­யக்க கண்டி திகன கல­வ­ரத்­தையும் பேரு­வளை அழுத்­கம தர்­கா­நகர் வன்­மு­றை­க­ளையும் தேர்தல் பிர­சா­ரத்­திற்கு பயன்­ப­டுத்­து­வதை காண முடி­கி­றது. ஆனால் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உரை­களில் பெரும்­பாலும் இவை தவிர்க்­கப்­பட்­டலும் ஜனாஸா எரிப்­புக்கு நட்ட ஈடு வழங்­கு­வ­தற்கும் இனி இவ்­வாறு நடக்­காமல் இருப்­ப­தற்கு தான் கொண்­டு­வந்­துள்ள சட்ட ஏற்­பா­டுகள் பற்­றியும் சில மேடை­களில் பேசி இருந்தார்.

2024 இலங்கை ஜனா­தி­பதி தேர்­தலில் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் ஆத­ரவை யாருக்கு வழங்க வேண்டும் என்ற கேள்வி, அவர்கள் எதிர்­கொள்ளும் சவால்­களைக் கருத்தில் கொண்டு தீர்­மா­னிக்­கப்­படும். முஸ்லிம் சமு­தாயம் ஏற்­க­னவே சந்­தித்­து­வரும் சமூக, அர­சியல், மற்றும் பொரு­ளா­தார பிரச்­சி­னைகள் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் அவர்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும் என்­ப­தற்­கான சில முக்­கிய அம்­சங்கள் உள்­ளன:

1. சமூக பாது­காப்பு:
இலங்கை முஸ்­லிம்கள் கடந்த சில ஆண்­டு­களில் குறிப்­பாக 2019 குண்டு தாக்­கு­த­லுக்குப் பிறகு பல்­வேறு இனப் பாகு­பாடு மற்றும் பாது­காப்பு கெடு­பி­டி­களை சந்­தித்­தனர். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வெறி சம்­ப­வங்­களும், அர­சியல் ரீதி­யாக புறக்­க­ணிப்பும் கூட நடந்­துள்­ளன. எனவே, முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி வழி­ந­டத்­தக்­கூ­டிய வேட்­பா­ளரைக் கொண்­டு­வ­ருதல் முக்­கியம் பெறு­கி­றுது.

2. முஸ்லிம் சமு­தா­யத்தின் உரி­மைகள் மற்றும் அடை­யாளம்:
முஸ்­லிம்கள் தங்கள் மத, கலாச்­சார மற்றும் அர­சியல் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­காக ஒரு நம்­ப­க­மான அர­சியல் தலை­வரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்டும். அவர்­களின் அடை­யாளம் மற்றும் மத உரி­மை­களை மதிக்கும் மற்றும் இவற்­றுக்கு முழு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டிய கொள்­கை­களைக் கொண்ட வேட்­பாளர் முக்­கியம் பெறு­கி­றது.

3. அர­சியல் சீர்­தி­ருத்­தங்கள்:
முஸ்லிம் சமு­தாயம் அர­சியல் அமைப்பின் ஒரு பகு­தி­யாக திகழ்­கின்­றனர். ஆனால், பல சம­யங்­களில் அவர்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றனர். புதிய ஜனா­தி­பதி, முஸ்­லிம்­களின் அர­சியல் ஆதிக்­கத்தை விரி­வு­ப­டுத்தி, அவர்­க­ளது கருத்­துக்­க­ளையும் தேவை­க­ளையும் அர­சியல் பொறுப்­பா­ளர்கள் கவ­னிக்க வேண்டும் என்­ப­தையும் முன்­னெ­டுக்கும் சீர்­தி­ருத்­தங்­களை கொண்­டி­ருப்­பது அவ­சியம்.

4. பொரு­ளா­தார முன்­னேற்றம்:
பல முஸ்லிம் தொழி­லா­ளர்கள், சிறு வணி­கத்­து­றையில் ஈடு­பட்டு, அன்­றாட வாழ்க்­கையை நடத்­து­கின்­றனர். அவர்­களின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்தை தூண்­டக்­கூ­டிய, SME (Small and Medium Enterprises) மற்றும் தொழில்­து­றையை ஆத­ரிக்கும் பொரு­ளா­தார கொள்­கை­களை கொண்ட வேட்­பா­ளரை ஆத­ரிக்க வேண்டும்.

5. சர்­வ­தேச உற­வுகள்:
முஸ்லிம் சமு­தாயம் சர்­வ­தேச ரீதி­யி­லான தொடர்புகளை முக்கியமாகக் கருதுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார, சமூக தொடர்புகளை மேம்படுத்தும் வகையிலான வேட்பாளரின் ஆட்சி அவர்களுக்கு நல்ல விளைவுகளை தரும்.

6. முஸ்லிம் தலைவர்களின் ஆதரவு:
முஸ்லிம் தலை­வர்கள் எந்த வேட்­பா­ளரின் பின்­ன­ணி­யையும், கொள்­கை­க­ளையும், செயல்­பா­டு­க­ளையும் ஆராய்ந்து, அவர்­க­ளுக்கு யார் சிறந்­தது என்­ப­தற்­கான பொதுத்­தீர்­மா­னத்தை உரு­வாக்க முடியும். முஸ்லிம் சமு­தாயம் பொது­வாக இது போன்ற தலை­வர்­களின் பரிந்­து­ரை­களை மதிப்­ப­தற்கும், சமூக நலனில் செயல்­ப­டக்­கூ­டி­ய­வர்­களை ஆதரிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த தேர்தல் நடை­பெற்று முடியும் பட்­சத்தில் அதன் முடிவு இந்த நாட்டை புதிய சகாப்­தத்­துக்குள் உள் நுழை­விக்­கக்­கூ­டிய நிலையை ஏற்­ப­டுத்­தலாம். அல்­லது பழைய குருடி கதவைத் திறடி என்­பது போல் பல தசாப்­தங்­க­ளாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு காலா­வ­தி­யான அர­சியற் கலா­சா­ரத்­தினுள் தொடர்ந்தும் இயங்க வைக்­கலாம். இந்த நாடும் இந்த நாட்டு மக்­களும் இந்­த­ளவு பாரி­ய­தொரு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் வாழ­வேண்­டி­ய­தற்கு அடிப்­படைக் காரணம் இந்த அர­சியற் கலா­சாரம் என்­பதை இளம் சந்­த­தி­யொன்று தெளி­வாக உணர்ந்­த­மையே 2022 இல் நடந்த அரகலய மக்கள் எழுச்சி போராட்டம் உலகுக்கு உணர்த்தியது. அந்த எழுச்சியின் அடுத்த கட்ட நகர்வாக அமையப் போகிறது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பதை மனங்கொள்வோம்.!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.