அரசியல் களம் – ஜனாதிபதி தேர்தல் 2024 (கண்னோட்டம்)

0 166

உயர்பீட கூட்டத்திற்கு போகாத அலிசாஹிர்

மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஷ்­ஷெய்யத் அலி­சாஹிர் மௌலானா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­விலை. எந்த ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­கிற தீர்­மா­னத்தை மேற்­கொள்ளும் குறிப்­பிட்ட கூட்­டத்­திற்கு வராத அவர் சொந்த ஊரில் இடம்­பெற்ற நிகழ்­வு­களில் கலந்­து­கொண்­ட­மையால் வர முடி­யாமல் போன­தாக கூறி­யி­ருக்­கிறார்.

எனினும், வார இறு­தியில் மட்­டக்­க­ளப்­புக்குச் சென்ற ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க கலந்­து­கொண்ட மற்றுமொரு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார் அலிசாஹிர் எம்.பி..


தமிழரசு கட்சியை தன்பக்கம் ஈர்க்க
இம்ரான் ஊடாக தூதுவிடும் சஜித்

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை தனது பக்கம் ஈர்த்­துக்­கொள்­வ­தற்­காக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் ஊடாக தூது அனுப்பி வரு­கிறார் எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­மதாஸ.

ஓர­ளவு தமிழ், சிங்கள மக்­களின் ஆத­ர­வையும் கொண்­டுள்ள ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தி­யான இம்ரான் மக­ரூபை வைத்து இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பி­னர்­களை சந்­தித்து தமது ஆத­ரவை பெற்றுக் கொள்ள சஜித் முயற்­சித்து வரு­கிறார்.

கடந்த வாரம் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிறி­தரன் எம்.பி.யை சந்­தித்த இம்ரான், வார இறு­தியில் திரு­மலை மாவட்ட எம்.பி. குக­தா­ச­னையும் சந்­தித்து சஜித்தின் தூதை எத்தி வைத்திருக்கிறார்.

இது தவிர வடக்கு கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள் சிவில் அமைப்­பு­களை சஜித் பக்கம் திருப்பும் பணி இம்­ரா­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிகிறது.


சத்தியம் பெற்ற ரிஷாட் பதியுதீன்

ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்ற அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் நிலைப்­பாட்டை வெளி­யி­டு­வ­தற்­காக அக்­கட்­சியின் உயர்­பீடம் கொழும்பு கிரீன் ப்ளஸ் ஹோட்­டலில் நேற்று முன்­தினம் கூடி­யது. கட்சித் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் தலை­மையில் கூடிய இந்த கூட்­டத்­தின்­போது யாரை ஆத­ரிப்­பது என்­பது பற்றி ஆரா­யப்­பட்­டது. என்­றாலும் இறு­தித்­தீர்­மானம் எட்­டப்­ப­ட­வில்லை என்ற செய்­தியே வெளி­யா­னது.

இந்­நி­லையில், உள்ளே என்­னென்ன பேசப்­பட்­டது, எவ்­வா­றான வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­டது என்­பது பற்றி எது­வுமே வெளி­யா­க­வில்லை. உயர்­பீட கூட்­டத்தில் நடந்­த­வற்றை வெளியில் சொல்லக் கூடாது என்று கட்சித் தலைவர் ரிஷாட் பதி­யுதீன் உறுப்­பி­னர்­க­ளிடம் சத்­தியம் பெற்­றுக்­கொண்­டுள்ளார் என தெரி­ய­வ­ரு­கி­றது.

இதனால்தான், அங்கு என்ன நடந்ததென்பது பற்றி வெளிச்சத்துக்கு வராமல் உள்ளது.


ஒரு எம்.பி.க்கு 80 கோடி நிதியா? 

மாவட்ட அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக திகா­ம­டுல்ல மாவட்­டத்தைச் சேர்ந்த ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு மாத்­திரம் 800 மில்­லியன், அதா­வது 80 கோடி ரூபா வரை நிதி ஒதுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

அந்­நி­தி­யி­லி­ருந்து கிழக்­கி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யொன்­றிற்கு மாத்­திரம் 60 மில்லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தா­கவும் மாவட்­டத்­தி­லுள்ள கரை­யோர பிர­தேச செய­ல­கங்கள் பல­வுக்கும் பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான வரைபு காட்­டப்­பட்டே இந்த நிதி ஒதுக்­கீட்டை பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் சொல்லப்படுகிறது.

எனினும், மாவட்ட மற்றும் பிர­தேச செய­ல­கங்கள் ஊடாக ஒதுக்கப்பட்ட அந்த நிதி­யா­னது தற்­போது இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.


அமைதி காக்கும் பௌஸி எம்.பி.

முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாந­கர சபை தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை கடந்த வருடம் ஜன­வ­ரியில் இரா­ஜி­னாமா செய்தார். இந்­நி­லையில், கொழும்பு மாவட்ட ஐ.ம.ச. பட்­டி­யலில் அடுத்­த­ப­டி­யாக அதிக விருப்பு வாக்கு பெற்றிருந்த சிரேஷ்ட உறுப்­பினர் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி மீண்டும் பாரா­ளு­மன்றம் நுழைந்தார். பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்­த­தி­லி­ருந்து ஜனா­திபதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­டு­வந்த பௌஸி எம்.பி., ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்னர் தனது நிலைப்­பாட்டை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறிவிக்காது தொடர்ந்தும் அமைதிகாத்து வருகின்றார்.


மாயமானார் ஹரீஸ் எம்.பி.

முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீடம் கடந்த ஞாயி­றன்று கூடி ஜனா­தி­பதி தேர்­தலில் எந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பதை தீர்­மா­னித்­தது. குறித்த தீர்­மா­னத்தை ஊட­கங்­க­ளுக்கு அறி­விப்­ப­தற்கு தயா­ரா­ன­போது கூட்­டத்தில் இருந்த அனை­வரும் கட்சித் தலை­வரின் பின்னால் நின்­று­கொண்­டனர்.
எனினும், அந்த இடத்­தி­லி­ருந்து திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இருக்­க­வில்லை. உடனே, ‘ஹரீஸ் எங்கே’ என தேடிய கட்சித் தலைவர் ஹக்கீம் ‘ஹரீ­ஸையும் வரச் சொல்­லுங்கள்’ என அங்­கி­ருந்­த­வர்­க­ளிடம் கூறினார். என்­ற­போ­திலும் ஊட­கங்­க­ளுக்கு கட்­சியின் தீர்­மா­னத்தை அறி­விக்கும் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தார் ஹரீஸ் எம்.பி.


மஹிந்த மீதான அன்பு மாறாது
எனினும் ரணிலை ஆதரிக்கிறேன்

பொது­ஜன பெர­மு­னவின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பழீல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவை கடந்த வாரம் சந்­தித்­தி­ருந்தார். இதன்­போது, ‘நான் உங்­க­ளையும் பொது­ஜன பெர­முன கட்­சி­யையும் மிகவும் நேசிக்­கிறேன். உங்கள் மீதான மரி­யா­தையும் கட்சி மீதான பற்றும் ஒரு­போதும் மாறாது. என்­றாலும் இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்க தீர்­மா­னித்­தி­ருக்­கிறேன் என்று சொல்­லி­யி­ருக்­கிறார்.

இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ள அமைச்சர் பந்­துல குண­வர்­தன, பேரு­வளை இரத்­தி­னக்கல் ஏற்­று­மதித் துறையைச் சேர்ந்த வர்த்­த­கர்கள் உட்­பட முஸ்லிம் மக்கள் தங்கள் ஆத­ரவை ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இத­னி­டையே, களுத்­துறை மாவட்ட மக்கள் பிர­தி­நி­திகள் பலரும் ஜனா­தி­பதி ரணிலின் வெற்­றிக்கு பாடு­ப­டு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டுத் திருமணத்தில்
மஹிந்தவும் சஜித்தும்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வின் இரண்­டா­வது புதல்­வரின் திரு­மண வைபவம் கொழும்­பி­லுள்ள நட்­சத்­திர ஹோட்டல் ஒன்றில் இடம்­பெற்­றது. இதில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­சவும் சிராந்தி ராஜ­பக்­சவும் ஜோடி­யா­கவே சென்று கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இந்­நி­லையில் மஹிந்த இருந்த சாப்­பாட்டு மேசையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் இருந்துள்ளனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவும் அதில் கலந்­து­கொண்­டி­ருந்தார்.
பல­த­ரப்­பட்ட அர­சியல் பிர­மு­கர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்த இந்த நிகழ்வில், ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பி­லான கதை­யா­டல்­களே அதி­க­ம் இடம்பிடித்துள்ளது.


உயர்பீட இரு அமர்வுகளிலிருந்து
யஹியா கான் இடைநிறுத்தம்

ஜனா­தி­பதி தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்­பான முக்­கிய தீர்­மா­னத்தை எடுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட கூட்டம் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது , லுஹர் தொழு­கைக்­கான அதான் கூறப்­பட்­ட­தை­ய­டுத்து அக்­கூட்டம் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டது. அந்த இடை­வெ­ளியில் உறுப்­பி­னர்கள் பலரும் அமை­தி­யான நிலையில் அவ­ரவர் நிலையில் இருந்­து­கொண்­டனர். இதன்­போது புகைப்­ப­டங்­களை எடுத்த மு.கா உயர்­பீட உறுப்­பினர் ஏ.ஸி.யஹி­யாகான் அதனை முக­நூலில் பதி­வேற்­றி­யி­ருந்தார். இத­னை­ய­டுத்து அந்த புகைப்­படங்களுக்க அநா­க­ரி­க­மான முறையில் பின்­னூட்டம் செய்த வலை­ஞர்கள் கேலி செய்ய ஆரம்­பித்­தனர்.

இத­னை­ய­டுத்து உட­னடி நட­வ­டிக்­கை­யாக, யஹி­யாகான் அன்றைய உயர்­பீடம் மற்றும் அடுத்த உயர்­பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்­வு­களில் பங்­கு­பற்­று­வ­தனை இடை­நி­றுத்­து­வ­தாக அறி­வித்தார் கட்சித் தலைவர் ஹக்கீம்.

இந்த அறி­விப்­பை­ய­டுத்து தலை­வ­ரோடு கைகு­லுக்கி சிரித்துக்கொண்டே வெளி­யேறிச் சென்றார் யஹி­யாகான்.


செயற்பட தொடங்கிய
கபீரும் ஹலீமும்

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சக்­தியும் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­வந்த ஐக்­கிய மக்கள் சக்­தியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் முன்னாள் அமைச்­சர்­க­ளு­மான கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம், தலதா அத்­துக்­கோ­ரள உள்­ளிட்ட பலரும் கட்சி செயற்­பா­டு­களில் ஈடு­பா­டு­காட்­டாது அமை­தி­யாக இருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

என்­றாலும், ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்னர் தற்­போது கபீர் ஹாஷிம் மாவ­னெல்­லை­யிலும் எம்.எச்.ஏ.ஹலீம் ஹாரிஸ்­பத்­து­வ­யிலும் மீண்டும் தேர்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டு­வ­ரு­வ­தையும் காணக் கிடைக்­கி­றது.

ஆனால், தலதா தொடர்ந்தும் ஐ.தே.க.வும் ஐ.ம.ச.வும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம்.


மொட்டு வேட்பாளர் அறிவிப்பு
நிகழ்வில் முஸ்லிம் ஆதரவாளர்கள்

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நேற்று காலை 7.30 சுப நேரத்தில் நாமல் ராஜ­பக்ச அறி­விக்­கப்­பட்டார். அவ­ரது தந்தை மஹிந்த ராஜ­பக்­சவால் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்டு இந்த அறி­விப்பு வெளி­யா­னது.

இந்த நிகழ்வில் சில முஸ்லிம் ஆத­ர­வா­ளர்­களும் கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது.


சமூக நீதிக் கட்சியின் விஷேட மாநாடு

தேசிய மக்கள் சக்­தி­யி­லி­ருந்து அண்மையில் வெளி­யே­றிய சமூக நீதிக் கட்­சி­யா­னது நாளை மறு­தினம் கிண்­ணி­யாவில் தேசிய செயற்­குழு அங்­கத்­தவர் மாநாட்டை நடத்­து­கிறது.

இவ்­வி­ஷேட மாநாட்டில், ஜனா­தி­பதித் தேர்தல் குறித்த கட்­சியின் நிலைப்­பாட்­டினை, செயற்­குழு அங்­கத்­த­வர்­க­ளுடன் கூடி ஆராய்ந்து முடி­வெ­டுத்து, தலை­மைத்­துவ சபைக்கு அறிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘திடமாய் முன்னோக்கி’ எனும் மகுடத்தில் கீழ் இந்த மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • Vidivelli

Leave A Reply

Your email address will not be published.