மாணவிகளின் ஆடை உரிமையை மதிப்பார்களா பரீட்சை மண்டப அதிகாரிகள்?

0 87

என்.எல்.எம்.மன்சூர்
ஏறாவூர்

இஸ்லாம் முஸ்லிம் பெண்­க­ளுக்கு பூரண சுதந்­தி­ரத்தை வழங்­கி­யுள்ள அதே­வேளை அவர்­க­ளது கண்­ணி­யத்தைப் பேணும் வகை­யி­லான ஆடை ஒழங்­கு­க­ளையும் வரை­யறை செய்­துள்­ளது. இதன் அடிப்­ப­டையில் முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டுச் வெளிச்­செல்லும் போது பர்தா, அபாயா, ஹிஜாப் என முகத்தை தவிர்த்து உடலை முழு­மை­யாக மறைக்கும் ஆடை­களை அணிந்து கொள்­கின்­றார்கள். முஸ்லிம் பாட­சாலை மாண­வி­க­ளுக்கு கூட பர்தா அணி­வ­தற்கும், மாண­வர்கள் தொப்பி போடு­வ­தற்கும் அர­சாங்கம் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. கல்­வி­ய­மைச்சும் இதனை அனு­ம­தித்­துள்­ள­துடன், மனித உரிமை ஆணைக்­கு­ழுவும் இதற்கு ஆத­ர­வா­கவே உள்­ளது. மாண­விகள் பர்தா அணி­வ­தற்கு அரசு இல­வ­ச­மாக சீருடை வழங்­கு­வதும் அர­சாங்க அங்­கீ­கா­ரத்­திற்கு சிறந்த ஆதா­ர­மாகும். எந்­த­வொரு அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தாலும் இந்த நடை­மு­றையில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தில்லை.

எனினும் அண்மைக் கால­மாக முஸ்லிம் பெண்கள் பரீட்சை மண்­ட­பங்­க­ளிலும் தொழில் செய்யும் இடங்­க­ளிலும் பல சவால்­க­ளுக்கு முகங் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் மாண­விகள் மாத்­தி­ர­மன்றி போட்டிப் பரீட்­சைக்குத் தோற்றும் பெண்­களும் கூட இவ்­வா­றான நெருக்­க­டி­களை எதிர்­கொள்­கி­றார்கள். பர்தா அணிந்த பெண்கள் ஒரு சில பரீட்சை நிலை­யங்­களில் மேற்­பார்­வை­யா­ளர்­களின் கெடு­பி­டி­க­ளுக்கு ஆளாக்­கப்­ப­டு­கின்­றார்கள். ஒரு சில மேற்­பார்­வை­யா­ளர்கள் மாண­வர்­களை தொப்­பியை கழற்­றி­விட்டு பரீட்சை மண்­ட­பத்­திற்கு வரு­மாறு உத்­த­ர­வி­டு­வ­துடன் மாண­வி­களின் பர்தா, ஹிஜாப் உடை­க­ளிலும் தலை­யி­டு­கின்­றார்கள். குறிப்­பாக இம்­முறை நடை­பெற்ற க.பொ.த. உயர்­தர பரீட்­சையில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மாத்­தி­ர­மன்றி மட்­டக்­க­ளப்பு கல்வி வல­யத்­திலும் ஒரு பாட­சா­லையில் பர்தா தொடர்­பான சம்­பவம் பதி­வா­கி­யுள்­ளது.இது விட­ய­மாக பெற்றோர் உயர் அதி­கா­ரி­க­ளிடம் முறை­யிட்ட போது தீர்வு காணப்­பட்­டது. அதே போன்று வேறு சில மாவட்­டங்­க­ளிலும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன.

கல்­வி­ய­மைச்சின் சுற்­று­நி­ரு­ப­மா­னது, பரீட்சை எழு­தும்­போது பரீட்­சார்த்­தி­களின் காதுகள் தெரியும் வகையில் ஆடை அணிந்­தி­ருத்தல் வேண்டும் என்று குறிப்­பி­டு­கி­றது. கடந்த சில வரு­டங்­க­ளாக இந்த நடை­முறை பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றது. இது விட­யத்தில் முஸ்லிம் பரீட்­சாத்­திகள் கட்­டுப்­பட்டே நடந்து கொள்­கின்­றார்கள். சில­ மா­ண­விகள் பர்­தாவை தவிர்த்து ஷோல் அணிந்து பரீட்சை எழு­து­கி­றார்கள். ஆனாலும் ஒரு சில பரீட்சை நிலை­யங்­களின் மேற்­பார்­வை­யா­ளர்கள் முஸ்லிம் பரீட்­சாத்­தி­களை அவ­மா­னப்­ப­டுத்­து­வது போலவும், மன உளைச்­சலை உண்­டாக்கும் வகை­யிலும் நடந்து கொள்­வதும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

எந்த சந்­தர்ப்­பத்­திலும் பரீட்­சைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்தும் வகையில் முஸ்லிம் மாண­விகள் நடந்து கொள்­ள­வில்லை. அப்­ப­டி­யி­ருந்தும் அண்மைக் கால­மாக கலாச்­சார உடை­ய­ணிந்து வரும் மாண­வர்­களும், மாண­வி­களும் சில பரீட்சை மண்­ட­பங்­களில் மேற்­பார்­வை­யா­ளர்கள், நோக்­கு­னர்­களால் ஏனைய மாண­வர்­க­ளுக்கு முன்­னி­லையில் அவ­மா­னப்­ப­டுத்­து­வது போல் கண்­டிப்­புடன் நடந்து கொள்­கின்­றார்கள்.

தேசிய மட்­டத்தில் நடை­பெ­று­கின்ற பரீட்­சைகள் அனைத்­தி­னு­டைய விதி­மு­றைகள், நடை­மு­றை­கள் குறித்து பரீட்சை திணைக்­கள அதி­கா­ரிகள் அழ­கா­கவும், தெளி­வா­கவும் மேற்­பார்­வை­யா­ளர்கள், நோக்­கு­னர்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கு­கின்­றார்கள். அத்­துடன் கைநூல்கள், சுற்­று­நி­ரு­பங்­களும் கொடுக்­கின்­றார்கள். அப்­ப­டி­யி­ருந்தும் ஒரு சில பரீட்சை நிலை­யங்­களின் மேற்­பார்­வை­யா­ளர்கள் ஏன் இப்­படி நடந்து கொள்ள வேண்டும்.

புனி­த­மான கல்விப் பணி­யாற்றும் மேற்­பார்­வை­யா­ளர்கள் எதிர்­கால வாழ்க்­கையை இலக்­காக கொண்டு முன்­னேறும் ஆவலில் பரீட்­சையில் திற­மை­காட்ட வரும் மாண­வர்­க­ளுக்கு இடை­யூறு விளை­விப்­பது பண்­பான செயலா? அண்மைக் கால­மா­கவே முஸ்­லிம்கள் விட­யத்தில் சந்­தேகப் பார்­வையும், குறு­கிய சிந்­த­னையும் கொண்­ட­வர்­களே இத்­த­கைய செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள்.

கடந்த ஜன­வ­ரியில் நடை­பெற்ற க. பொ. த. உயர்­தர பரீட்­சைக்குத் தோற்­றிய திரு­மலை ஸாஹிறா மாண­விகள் ஹிஜாப் அணிந்த நிலையில் மேற்­பார்­வi­யா­ளர்கள் அனு­மதி வழங்கி பரீட்சை எழு­திய போதும் பெறு­பேறு இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது. பரீட்சை மேற்­பார்­வை­யாளர் ஒரு­வரின் அறிக்­கையே இதற்கு கார­ண­மாகும். குறித்த மாண­விகள் தமது கலா­சார ஆடை­களை அணிந்து பரீட்­சைக்குத் தோற்­றி­யதன் மூலம் பரீட்சை விதி­மு­றை­களை மீறி­யுள்­ளனர் என்று பரீட்சைத் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பாடு செய்­துள்­ளார் அந்த அதிகாரி. புனி­த­மான கல்வித் துறையின் உயர் பத­வி­க­ளுக்குள் இருப்­ப­வர்கள் மாண­வர்­களின் கல்­வி­யோடு விளை­யா­டு­வ­தையே இச்­செ­யல்கள் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

அது மாத்­தி­ர­மன்றி, அதி­பர்கள் சிலரும் இதே பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். வினைத்­தி­றன்காண் தடை தாண்டல் பரீட்­சைக்குத் தோற்ற ஹிஜாப் அணிந்து சென்ற 13 அதி­பர்­களும் முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழு­தி­யுள்­ளார்கள். மறுநாள் பரீட்சை முடி­யுந்­த­று­வாயில் பரீட்சை மண்­டப மேற்­பார்­வை­யா­ளர்கள் இவர்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்­த­துடன் அடை­யாள அட்டை, அனு­ம­தி­யட்டை என்­ப­வற்­றையும் புகைப்­ப­ட­மெ­டுத்துச் சென்­றுள்­ளனர்.

பொதுவாகவே பரீட்­சார்த்­திகள் கடைசி நேரத்தில் மிகவும் பதற்­ற­துடன் காணப்­ப­டு­வார்கள். வினா இலக்­கங்கள், விடைத்தாள் பக்­கங்­களை சரி­பார்த்தல், விடு­பட்ட வினாக்கள் ஏது­முள்­ளதா? விடை­களில் கடை­சியில் எதை­யா­வது சரி­பார்த்து எழு­து­வதா? என்று தடு­மாறும் நேரத்தில் இடைஞ்சல் கொடுத்­தது எந்த வகையில் நியா­ய­மா­னது.? அதுவும் அனு­பவம் வாய்ந்த அதி­கா­ரிகள் தரத்­தி­லுள்ள அதி­பர்­களை அவ­மா­னப்­ப­டுத்­தி­யது தகுமா?

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை சண்முகா மகளிர் வித்தியாலயத்திற்கு ஹிஜாப் அணிந்து கடமைக்குச் சென்ற ஆசிரியையை கடமையைச் செய்யவிடாது தடுத்த சம்பவம் நீதிமன்றம் வரை சென்றதும் பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளுக்கு வழிவகுத்ததும் நாம் அறிந்ததே. இறுதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் நீதிமன்றமும் குறித்த ஆசிரியைக்கு சார்பாகவே தீர்ப்பு வழங்கின.

எனவே உயரதிகாரிகள் இவ்வாறான விடயங்களில் இன மத வெறுப்புகளைப் புறந்தள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கு கொண்டு நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.