சாதிக்கத் துடிக்கும் ஹஸன் ஸலாமா

0 112

திரு­கோ­ண­மலை சாஹிரா கல்­லூ­ரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வய­து­டைய மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா எதிர்­வரும் 15 ஆம் திகதி சனிக்­கி­ழமை, அதி­காலை 2 மணிக்கு இந்­தி­யா­வையும் – இலங்­கை­யையும் இணைக்கும் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்த உள்ளார்.

இதன்­போது இவர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் திகழ்வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வரு­கின்றார்.

இந்­தி­யாவின் தனுஸ்­கோடி, அரிச்­சல்­மு­னை­யி­லி­ருந்து தலை­மன்னார் வரை­யான 32 கிலோ மீற்றர் தூரத்தை 8 மணி நேரத்தில் தாம் கடக்க எண்­ணி­யுள்­ள­தாக சலாமா கூறினார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்­லை­யி­லி­ருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார். இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.

றொசான் அபே­சுந்­தர 2021 ம் ஆண்டு தலை­மன்­னா­ரி­லி­ருந்து தனுஸ்­கோ­டிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்­கி­ருந்து தலை­மன்­னா­ருக்கு 28 மணி­நேரம், 19 நிமிடம்,58 செக்­கனில் நீச்­சலை நிறைவு செய்து, ஆழிக்­கு­மரன் ஆனந்தன் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த 51 மணி­நேர சாத­னையை முறி­ய­டித்த சாத­னை­யாளர் ஆவார். மேலும் கடந்த இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்­திக்­க­டந்த திரு­கோ­ண­ம­லையைச் சேரந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார்.

பாக்கு நீரி­ணை­யூ­டாக நீந்­து­வ­தென்­பது வெறு­மனே பொறுமை தாங்கும் ஆற்­ற­லுடன் கூடிய ஒரு வீரச்­செயல் மாத்­தி­ர­மன்றி, அது மனித உறு­திப்­பாடு மற்றும் எதிர்ப்­பாற்றல் என்­ப­வற்­றிற்­கான ஓர் உடன்­ப­டிக்­கை­யு­மாகும். இம்­மு­யற்சி இந்­தி­யாவின் தனுஷ்­கோ­டி­யி­லி­ருந்து இலங்­கையின் தலை­மன்­னா­ருக்­கான 32 கிலோ­மீட்டர் தூரத்­துடன் கூடிய நீரி­ணையை நீந்திக் கடப்­ப­துள்­ளிட்ட ஒரு வர­லாற்று நிகழ்­வெ­னலாம்.

பாக்கு நீரி­ணையில் தற்­போது நில­வு­கின்ற ஊகிக்க முடி­யாத சூழ­மை­வுகள் மிக அனு­பவம் வாய்ந்த நீச்சல் வீரர்­க­ளுக்குக் கூட சவா­லாக அமைந்­துள்­ளன.
இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளை­யாட்டு வர­லாற்­றிலே தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடைந்து கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.

2009 பெப்­ர­வரி மாதம் 15 ஆம் திகதி பிறந்த பஹ்மி ஹஸன் சலாமா திண்­ண­மான உறுதி மற்றும் இலக்­கு­களை தன்­ன­கத்தே கொண்ட ஒரு­வ­ராவார். 15 வயது என்ற சிறு­வ­ய­தி­லேயே அவர் விளை­யாட்டில் சாத­னைகள் பல­வற்­றிற்கு உரித்­தான ஒரு­வ­ராவார். நீச்சல் விளை­யாட்டில் நட்­சத்­தி­ர­மாக மிளிரும் ஆற்­றலைக் கொண்­டுள்ளார். அவ­ரது அர்ப்­ப­ணிப்­புக்கள், ஆற்­றல்கள் தொடர்­பாக தொடர்ந்து வந்து கொண்­டி­ருக்­கின்ற பாராட்­டுகள் இது பற்றி கட்­டியம் கூறு­கின்­றன.

ஹஸன் சலா­மாவின் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடக்கும் இப்­ப­யணம் எல்­லை­யற்ற பயிற்­சிகள், பாது­காப்­புடன் கூடிய முன்­னேற்­பா­டுகள், அசைக்க முடி­யாத உறு­திப்­பாடு என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய ஒன்­றாகும்.
நீச்சல் வீரர் ஒரு­வ­ரென்ற வகையில் அவர் கடந்த காலங்­களில் கணி­ச­மா­ன­ளவு வெற்­றி­க­ளையும் பாராட்­டு­க­ளையும் அவ­ரது ஆற்­றல்கள், அர்ப்­ப­ணிப்­புகள் மற்றும் உயர் திறன் என்­ப­வற்றை மெச்சும் வகை­யிலே பெற்றுக் கொண்­டுள்ளார்.

திரு­கோ­ண­மலை YANA நீச்சல் பாட­சா­லையில் வெண்­கல, வெள்ளி மற்றும் தங்க மட்ட நீச்சல் பயிற்­சியைப் பூர்த்தி செய்­தி­ருக்­கின்றார். அத்­துடன், முக்­கு­ளிப்­பாளர் ஆரம்­ப­மட்­டத்தில் கடல் நீரில் ஆகக் கூடி­யது 15 அடி­களைப் பூர்த்தி செய்­தி­ருக்­கின்றார்.

உயிர் காப்பு மற்றும் நீரியல் பாது­காப்பு தொடர்­பான தேசிய நிறு­வ­ன­மா­கிய Sri Lanka Life Saving நிறு­வ­னத்தில் நீரியல் பாது­காப்பு தொடர்­பான சான்­றி­த­ழொன்றைப் பெற்­றுள்ள சலாமா, அந்­நி­று­வ­னத்தில் ILS Junior Life Saver சான்­றி­த­ழையும் Sri Lanka Life Saving CPR சான்­றி­த­ழையும் பெற்­றுள்­ள­துடன் தொழில் ரீதி­யான நீச்­ச­லாளர் சான்­றி­த­ழையும் ஹஸன் சலாமா உரித்­தாக்கிக் கொண்­டுள்ளார்.

மேலும், தேசிய தொழில் ரீதி­யான முக்­கு­ளிப்புப் பங்­க­ளிப்புப் பாட­நெறி (NVDA) NVQ Level 3 பூர்த்­தி­செய்­தி­ருக்­கின்றார். அத்­துடன், திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து சாம்பல் தீவு வரை (8 கிலோ மீட்டர்) தூரத்தை 2023 மே மாதம் 07 ஆம் திகதி Marine Mile Challenge போட்­டியில் கலந்து கொண்டு வெற்றி ஈட்­டிய ஹஸன் சலாமா, திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இருந்து சாம்பல் தீவு வரை­யி­லான 15 கிலோ­மீட்டர் தூரத்தை 2023 ஆகஸ்ட் 01 ஆம் திகதி கடந்து Marine Mile Challenge போட்­டியில் வெற்றி ஈட்­டி­யி­ருக்­கின்றார்.

இது­மட்­டு­மல்­லாமல், திரு­கோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகியிருக்கின்றார்.

பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற் பாதுகாப்புச் செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார்.

பாக்கு நீரிணையை பஹ்மி ஹஸன் சலாமா நீந்திக் கடப்பதென்பது முழு இலங்கை தேசத்திற்குமே பெருமையாகும். அவரது இந்த சாதனைப் பயணம் வெற்றி பெற பிரார்த்திப்போம்!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.