உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள்: ரணிலை பிரதிவாதி பட்டியலில் இருந்து நீக்கியது உயர் நீதிமன்றம்

0 304

(எம்.எப்.எம்.பஸீர்)
போது­மான உளவுத் தக­வல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை தடுக்க தவ­றி­யதன் ஊடாக, தமது அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக கூறி தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 12 அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களில், பிர­தி­வா­திகள் பட்­டி­யலில் பெய­ரி­டப்­பட்­டுள்ள தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக அவ்­வ­ழக்­கு­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது என உயர் நீதி­மன்றம் அறி­வித்­துள்­ளது.

குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்கள் பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய, நீதி­ய­ர­சர்­க­ளான புவ­னேக அலு­வி­ஹார, எல்.டி.பி.தெஹி­தெ­னிய, முர்து பெர்­ணான்டோ, எஸ். துரை­ராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய ஏழுபேர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழாம் முன் கடந்த திங்­க­ளன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன. இதன்­போதே உயர் நீதி­மன்றம் இந்த தீர்மா­னத்தை அறி­வித்­தது.

கடந்த ஜூலை 26 ஆம் திகதி இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, பிர­தி­வா­தி­களில் ஒரு­வ­ரான முன்னாள் பிர­த­மரும் இந் நாள் ஜனா­தி­ப­தி­யு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்­டோ­வினால் அடிப்­படை ஆட்­சே­பனை ஒன்று முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. தனது சேவை பெறுநர் தற்­போது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள நிலையில், அர­சி­ய­ல­மைப்பின் 35 ஆவது உறுப்­புரை பிர­காரம் அவ­ருக்கு எதி­ராக எந்த வழக்­கி­னையும் முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது எனவும் , அது அவ­ருக்கு அர­சி­ய­ல­மைப்­பூ­டாக வழங்­கப்­பட்­டுள்ள விடு­பாட்­டு­ரிமை எனவும் சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்­டோ­வினால் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

குறித்த வாதத்­துக்கு எதி­ராக வாதங்கள் மனு­தாரர் மற்றும் பிர­தி­வா­திகள் சிலரால் முன் வைக்­கப்­பட்ட நிலையில் உயர் நீதி­மன்றம் தனது தீர்மா­னத்தை அறி­வித்­தது.
பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய உயர் நீதி­மன்ற தீர்மா­னத்தை திறந்த மன்றில் அறி­வித்தார்.

அதன்­படி, பத­வியில் இருக்கும் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக அர­சி­ய­ல­மைப்பின் 35 (1) உறுப்­புரை பிர­காரம் வழக்கை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது என அறி­வித்தார். ஜனா­தி­ப­திக்கு தனது கட­மையை இடை­யூ­றின்றி முன்­னெ­டுக்க இந்த விடு­பாட்­டு­ரிமை அர­சி­ய­ல­மைப்­பி­னூடாக வழங்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தம நீதி­ய­ரசர் குறிப்­பிட்டார். அதனால் தற்போதைய ஜனா­தி­ப­திக்கு எதி­ராக இந்த சந்­தர்ப்­பத்தில் குறித்த மனுக்­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது என உயர் நீன்றின் தீர்ப்பை பிர­தம நீதி­ய­ரசர் அறி­வித்து வழக்கு விசா­ர­ணை­களை எதிர்­வரும் செப்­டெம்பெர் 29 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார்.

முன்­ன­தாக ஜனா­தி­பதி ரணில் சார்­பி­லான ஆட்­சே­ப­னைக்கு மற்­றொரு பிர­தி­வா­தி­யான முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சட்­டத்­த­ரணி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா கடும் எதிர்ப்பு வெளி­யிட்டு கடந்த ஜூலை 27 ஆம் திகதி வாதங்­களை முன் வைத்­தி­ருந்தார்.

தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு எதி­ராக இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது என அவ­ரது சட்­டத்­த­ர­ணிகள் முன் வைத்­துள்ள வாதம் அடிப்­ப­டை­யற்­றது என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா குறிப்­பிட்டார்.
‘ஜனா­தி­ப­திக்­கு­ரிய விடு­பாட்­டு­ரிமை இந்த வழக்கை பொறுத்­த­வரை பொருத்­த­மற்­றது. தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக இவ்­வ­ழக்கை முன்­னெ­டுத்து செல்ல எந்த தடையும் இல்லை.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிர­த­ம­ராக பதவி வகித்­த­போது முன்­னெ­டுத்த உத்­தி­யோ­க­பூர்வ நட­வ­டிக்­கைகள் தொடர்பில், அவர் ஜனா­தி­ப­தி­யா­னதால் கிடைக்கும் விடு­பாட்­டு­ரிமை ஊடாக எந்த பாது­காப்பும் கிடைக்­காது. அதனால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணையை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­லலாம் என உத்­த­ர­வினை பிறப்­பிக்க வேண்டும்.’ என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா கோரினார்.

இந் நிலையில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி இம்­ம­னுக்கள் விசா­ர­ணைக்கு வந்த போது, ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ, முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சார்­பி­லான வாதங்­க­ளுக்கு பதில் வாதங்­களை முன் வைத்தார்.

‘ ஜனா­தி­ப­திக்கு எதி­ராக அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினை தாக்கல் செய்­வ­தானால், பிர­தி­வா­தி­யாக சட்ட மா அதி­பரை பெய­ரிட்டு அதனை முன்­னெ­டுக்­கலாம். எனினும் இந்த மனுக்­களில் பிர­தி­வா­தி­யாக ரணில் விக்­கி­ர­ம­சிங்க பெய­ரி­டப்­பட்­டுள்­ளதால், அர­சி­ய­ல­மைப்பின் 35 (1) ஆம் உறுப்­பு­ரைக்கு அமைய அவ­ருக்கு எதி­ராக இவ்­வ­ழக்கு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது . எனது சேவை பெறு­நரை வழக்­கி­லி­ருந்து விடு­விப்­பதால் இந்த வழக்கு விசா­ர­ணைகள் எந்த வகை­யிலும் பாதிக்­கப்­ப­டாது.’ என சட்­டத்­த­ரணி சுரேன் பெர்­ணான்டோ குறிப்­பிட்டார்.

சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜ­ரான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பிரி­யந்த நாவா­னவும் மன்றில் வாதங்­களை முன் வைத்­தி­ருந்தார்.
‘ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த எந்­த­வொரு நபரும் செய்த அல்­லது செய்­யாமல் தவிர்ந்த எந்­த­வொரு நட­வ­டிக்கை தொடர்­பிலும் எந்­த­வொரு நீதி­மன்­றிலும் வழக்குத் தொடுப்­பதோ அல்­லது வழக்­கொன்­றினை முன்­னெ­டுத்து செல்­வதோ கூடாது என அர­சி­ய­ல­மைப்பின் 35 (1) ஆம் உறுப்­புரை கூறு­கி­றது.’ என அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய முன் வைத்த கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளித்­­தி­ருந்த மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் பிரி­யந்த நாவான, ஜனா­தி­ப­திக்கு எதி­ராக எந்­த­வொரு நீதி­மன்­றிலும் வழக்­கொன்­றினை தாக்கல் செய்து முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது என குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதனால் இந்த மனுக்­களில் இருந்து ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை விடு­விக்க வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

எனினும் மனு­தாரர் தரப்­பினர், பிர­தி­வாதி ஜனா­தி­பதி ரணில்­விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சட்ட மா அதிபர் சார்­பி­லான வாதங்­க­ளுக்கு கடும் ஆட்­சே­பனை வெளி­யிட்­டி­ருந்­தனர்.
இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுக்­க­ளுக்­காக மன்றில் ஆஜ­ரான அச்­சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு அமைய ஜனாதிபதிக்கு விடுபாட்டுரிமை என்பது சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடர்பில் மட்டுமே உள்ளதாகவும் இந்த வழக்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் என்பதால் இதனை முன்னெடுத்து செல்லலாம் என வாதிட்டிருந்தார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷமீல் பெரேராவும், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸின் வாதங்களுடன் ஒத்துப் போவதாகவும், அதனால் ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக தொடர்ந்து கருதி வழக்கு விசாரணை செய்யப்படல் வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந் நிலையில் அனைத்து தரப்பினரதும் வாதங்களை செவிமடுத்த நீதியரசர்கள் குழாம், இவ்விடயம் தொடர்பிலான தீர்மானத்தை திங்களன்று அறிவித்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.