அக்குறணை குருகொட பாடசாலைக்கு ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி மீள திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டபோது, அதனை அருகிலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தமை எந்த விதத்தில் தவறாகும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு, நல்லாட்சி அரசாங்க காலத்தில் அக்குறணை அஸ்ஹர் கல்லூரியின் அதிபர் நியமன விவகாரத்தில் தான் எவ்விதமான தலையீடுகளும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் அழுத்தி கதைப்பதன் மூலம் மாத்திரம் தீர்த்துக்கொள்ள முடியாது. மாறாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக அமர்ந்து, அரசாங்கத்தின் அமைச்சு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு நிரந்தர தீர்வொன்றை காணவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கெக்கிராவ, மடாடுகம பிரதேசத்திலுள்ள கைலபத்தானயில் மெளலவி ஒருவர் மீது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
சூரியன் மறையும் நேரம் சற்று தாமதமாவது குறித்து அவதானிக்கப்பட்டதையடுத்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ரமழான் மாத நோன்பு துறக்கும் நேரத்தை ஒரு நிமிடம் தாமதப்படுத்துமாறு அறிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதம் முதல் திருத்தப்பட்ட புதிய தொழுகை நேர அட்டவணை ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்தார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லிம் சேவையின் நேரம் குறைக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து மீடியா போரம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு அதிக வருமானம் ஈட்டிக்கொடுக்கின்ற ஒரு சேவையாக முஸ்லிம் சேவை கடந்த பல வருடங்களாக காணப்பட்டு வருகின்றது.
சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜெயவீர, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்துக்கு கடந்த திங்கட் கிழமை விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தேசிய ஒற்றுமையை வளர்த்தெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.