விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து இலங்கை, உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டெய்லி மிரர் பத்திரிகையில் கடந்த வெள்ளிக்கிழமை 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட பேட்டியில், ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெட்டேகொட வழங்கிய ஆலோசனையை அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும் நாட்டின் ஆயுதப் படைகளும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தனக்கு எதிரான தடையை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பெயரிட உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தனது நாட்டு மக்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நேற்று புதன்கிழமை விஷேட அறிவித்தலை விடுத்துள்ளது.
நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவத்தோடு, குளியாபிட்டிய நகரில் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்புபடுத்தி, கைது செய்து, சித்திரவதை செய்தமை தொடர்பில், அவ்வர்த்தகரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
வேட்பு மனுத்தாக்கலுக்கான இறுதி தினம் நாளை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பலவும் பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கவுள்ளன.