உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும். அதனை விடுத்து ஊடகவியலாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொருத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான யோசனை எந்த வகையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையாது. ஏப்ரல் 8 அல்லது 9ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகளின் போது குறித்த யோசனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக பணியாற்றுவதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு…
ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30ஆம் திகதி (ரமழான் - பிறை 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஹிஷாம் (அல் பத்தாஹி) தலைமையில் இடம்பெறும் இம்மாநாட்டில், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் அதன் பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள…
காஸாவில் இடம்பெறும் அட்டூழியங்களுக்கு எதிராக, கொழும்பு, கொம்பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிரபல வர்த்தக கட்டிடத் தொகுதியின் 'லொபி' பகுதியில் இரு ஸ்டிக்கர்களை ஒட்டியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெறுப்பூட்டும் விடயங்களை பிரசாரம் செய்தமைக்காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்டிய சம்பவத்தை மையப்படுத்தி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர்…
ஜெனிவாவை மையமாக கொண்டு இயங்கும் ஐ.நா-வின் சுதந்திர சர்வதேச விசாரணை ஆணையம் கடந்த மார்ச் 13, 2025 (வியாழக்கிழமை) அன்று இஸ்ரேலின் இனஅழிப்பு நடவடிக்கை தொடர்பாக புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “மனிதனால் தாங்கிகொள்ள கூடியதை காட்டிலும் கொடூரமானது: அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலின் நிறுவனமயமான பாலியல், இனப்பெருக்கம் மற்றும் பிற வடிவங்களிலான பாலினம் சார்ந்த வன்முறைகள்” என்று தலைப்பிடப்பட்ட அவ்வறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக…