செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : தகவல் இருப்பின் ஞானசார தேரர் பாதுகாப்பு தரப்பிடம் வழங்கலாம்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் அல்­லது தேசிய பாது­காப்பு தொடர்பில் முக்­கிய தக­வல்­களை அறிந்­தி­ருந்தால் அவை தொடர்பில் புல­னாய்­வுப்­பி­ரி­வுக்கு அறி­விக்க வேண்­டி­யது ஞான­சார தேரரின் கட­மை­யாகும். அதனை விடுத்து ஊட­க­வி­ய­லாளர் மாநா­டு­களில் அவை தொடர்பில் கூறிக் கொண்­டி­ருப்­பது பொருத்­த­மற்­றது என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

ஏப்ரல் அமர்வில் தேசபந்துவை பதவி நீக்கும் யோசனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்

தேச­பந்து தென்­ன­கோனை பதவி நீக்­கு­வ­தற்­கான யோசனை எந்த வகை­யிலும் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­றாக அமை­யாது. ஏப்ரல் 8 அல்­லது 9ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது குறித்த யோச­னையை நிறை­வேற்றிக் கொள்ள முடியும் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் நேற்­றைய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தேச­பந்து தென்­னகோன் பொலிஸ்மா அதி­ப­ராக பணி­யாற்­று­வ­தற்கு நீதி­மன்­றத்தால் தடை­யுத்­த­ரவு…

ஞாயிறன்று ஷவ்வால் தலைப்பிறை மாநாடு

ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்­பிறை பற்றி தீர்­மா­னிப்­ப­தற்­கான மாநாடு எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை 30ஆம் திகதி (ரமழான் - பிறை 29) மஃரிப் தொழு­கையின் பின் கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் பிறைக்­குழு தலைவர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.ஹிஷாம் (அல் பத்­தாஹி) தலை­மையில் இடம்­பெறும் இம்­மா­நாட்டில், கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் மற்றும் அதன் பிறைக்­குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சார திணைக்­கள…

இலங்கைக்கான புதிய பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம்.கலீல்

இலங்­கைக்­கான புதிய பலஸ்­தீ­னத்­தூ­துவர் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் தனது நற்­சான்­றிதழ் பத்­தி­ரத்தை கைய­ளித்தார். பலஸ்­தீன நாட்­டுக்­கான தூது­வ­ராக இஹாப் ஐ.எம். கலீல் இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் நற்­சான்­றி­தழை கைய­ளித்­த­துடன், அதன் பின்னர் ஜனா­தி­பதியை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லையும் மேற்­கொண்­டி­ருந்தார்.

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் : கொம்பனித்தெருவில் இளைஞர் ஒருவர் கைது

காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக, கொழும்பு, கொம்­பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்­டிடத் தொகு­தியின் 'லொபி' பகு­தியில் இரு ஸ்டிக்கர்­களை ஒட்­டி­ய‌­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  வெறுப்­பூட்டும் விட­யங்­களை பிரசாரம் செய்­த­மைக்­காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்­டிய சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் அவரைக் கைது செய்­த­தா­கவும், கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை தடுத்து வைத்து விசா­ரித்து வரு­வ­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர்…

காஸா: கருத்தரித்தல் மையங்களை தாக்கி இனஅழிப்பு செய்யும் இஸ்ரேல்

ஜெனி­வாவை மைய­மாக கொண்டு இயங்கும் ஐ.நா-வின் சுதந்­திர சர்­வ­தேச விசா­ரணை ஆணையம் கடந்த மார்ச் 13, 2025 (வியா­ழக்­கி­ழமை) அன்று இஸ்­ரேலின் இன­அ­ழிப்பு நட­வ­டிக்கை தொடர்­பாக புதிய அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. “மனி­தனால் தாங்­கி­கொள்ள கூடி­யதை காட்­டிலும் கொடூ­ர­மா­னது: அக்­டோபர் 2023 முதல் இஸ்­ரேலின் நிறு­வ­ன­ம­ய­மான பாலியல், இனப்­பெ­ருக்கம் மற்றும் பிற வடி­வங்­க­ளி­லான பாலினம் சார்ந்த வன்­மு­றைகள்” என்று தலைப்­பி­டப்­பட்ட அவ்­வ­றிக்­கையில், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்தில் பெண்கள் மற்றும் ஆண்­க­ளுக்கு எதி­ராக…
1 of 541