செய்திகள்

குருகொட பாடசாலைக்கு ஒதுக்கிய நிதி திரும்பிச் செல்லாது ஏனைய முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டமை தவறா?

அக்­கு­றணை குரு­கொட பாட­சா­லைக்கு ‘அரு­கி­லுள்ள பாட­சாலை சிறந்த பாட­சாலை’ திட்­டத்தின் கீழ் ஒதுக்­கப்­பட்ட நிதி மீள திரும்பிச் செல்லும் நிலை ஏற்­பட்­ட­போது, அதனை அரு­கி­லுள்ள ஏனைய முஸ்லிம் பாட­சா­லைகளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுத்­தமை எந்த விதத்தில் தவ­றாகும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கேள்வி எழுப்­பி­யுள்ளார். அத்­தோடு, நல்லாட்சி அர­சாங்க காலத்தில் அக்­கு­றணை அஸ்ஹர் கல்­லூ­ரியின் அதிபர் நிய­மன விவ­கா­ரத்தில் தான் எவ்­வி­த­மான தலை­யீ­டு­களும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் தெரி­வித்தார்.

கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு தமிழ் – முஸ்லிம்கள் பேசி தீர்வு பெறலாம்

கல்­முனை பிர­தேச செய­லக விவ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் அழுத்தி கதைப்­பதன் மூலம் மாத்­திரம் தீர்த்­துக்­கொள்ள முடி­யாது. மாறாக தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்­றாக அமர்ந்து, அர­சாங்­கத்தின் அமைச்சு அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி இதற்கு நிரந்­தர தீர்­வொன்றை காண­வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மௌலவி தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவும்

கெக்­கி­ராவ, மடா­டு­கம பிர­தே­சத்­தி­லுள்ள கைல­பத்­தா­னயில் மெள­லவி ஒருவர் மீது பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தாக்­குதல் மேற்­கொண்ட சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா பதில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யுள்­ளது.

நோன்பு துறக்கும் நேரத்தில் ஒரு நிமிடத்தை அதிகரிக்குக

சூரியன் மறையும் நேரம் சற்று தாம­த­மா­வது குறித்து அவ­தா­னிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா ரமழான் மாத நோன்பு துறக்கும் நேரத்தை ஒரு நிமிடம் தாம­தப்­ப­டுத்­து­மாறு அறி­வித்­துள்­ளது. அத்­துடன், எதிர்­வரும் ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதம் முதல் திருத்­தப்­பட்ட புதிய தொழுகை நேர அட்­ட­வ­ணை­ ஒன்றை வெளி­யிட எதிர்­பார்த்­துள்­ள­தா­கவும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் தெரி­வித்தார்.

முஸ்லிம் சேவையின் நேரம் குறைப்பு

இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பண முஸ்லிம் சேவையின் நேரம் குறைக்­கப்­பட்­டுள்­ளமை மிகவும் கவ­லை­ய­ளிப்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சுகா­தார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜய­திஸ்­ஸ­வுக்கு கடிதம் மூலம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இது­கு­றித்து மீடி­யா ­போரம் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு அதிக வரு­மானம் ஈட்­டிக்­கொ­டுக்­கின்ற ஒரு சேவை­யாக முஸ்லிம் சேவை கடந்த பல வரு­டங்­க­ளாக காணப்­பட்டு வரு­கின்­றது.

அனைத்து இனங்களுடனும் இணைந்து பணியாற்றுவோம்

சர்­வ­ஜன பல­யவின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திலித் ஜெய­வீர, அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தலை­மை­ய­கத்­துக்கு கடந்த திங்கட் கிழமை விஜயம் செய்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்டார். இதன்­போது நாட்டில் உள்ள அனைத்து இன மற்றும் மத சமூகங்களுடனும் இணைந்து பணி­யாற்­று­வதன் மூலம் தேசிய ஒற்­று­மையை வளர்த்­தெ­டுக்க முடியும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.
1 of 539