இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புத்தளம் முன்னாள் காதிநீதிபதியின் விளக்கமறியல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பேருவளை குப்பை மேடு உருவாக்கப்பட்ட பகுதி ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் மீண்டுமொரு மீதொட்டமுல்ல சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடியாக கவனம் செலுத்தி தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் மெளலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சின் விடயத்துக்குப் பொறுப்பான பிரிவு கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபியா மற்றும் இலங்கைக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகள் அடிப்படையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்க, இரு புனிதத்தளங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சாலமன் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயச்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான …