உம்ரா யாத்திரை மற்றும் சவூதிக்கான வருகைகள் தொடர்பான தொடக்க மன்றம் ஒன்றை வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி நடாத்த, சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சகம் தீர்மானித்துள்ளது. மதீனா பிராந்திய ஆளுநரான இளவரசர் சல்மான் பின் சுல்தான் பின் அப்துல்அஸீஸ் தலைமையில், மன்னர் சல்மான் சர்வதேச மாநாட்டு மையத்தில் இம் மன்றம் நடைபெறவுள்ளது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள உடைமைகளில் (வீடு மற்றும்காணி) குடியிருப்போர் மற்றும் உரிமை கோருவோர் தொடர்பில் தகராறுகள் எழும்போது அவைபற்றி விசாரித்த பின்னர், வீடமைப்பு ஆணையாளர் மேற்கொள்கின்ற தீர்மானத்தில் திருப்தியடையாத பட்சத்தில் அவை சம்பந்தமாக முறையீடு செய்வதற்கு முடியாத விதத்தில் மீளாய்வு மேன்முறையீட்டு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாதிருந்தமையினால் கடந்த காலங்களில் அந்தச் சபை முற்றாகச் செயலிழந்திருந்தது.
ஈரான் மீது இஸ்ரேல் ‘மிகச் சிறிய’ தாக்குதலை நடாத்தினாலும் அது ‘பாரிய மற்றும் கடுமையான’ பதிலடியைச் சந்திக்க வேண்டி வரும் என ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.